வியாழன், 15 ஜூலை, 2021

உலாச்செல்வோர் தங்கிடத்தின் அழகு.

 இந்த இடம் சுவிட்சர்லாந்தில் உள்ளது.  "சாத்தூ டி ஷில்லியோன்"

chatteau de chillon

இது கோட்டையின் வெளியழகைப் புகழும் கவிதை.

----------------------------------------------------------------------------------------

பேராற்றின் கரைபாதி

நீரோட்டம் மருவிமகிழ்

ஊறாத தரைதன்னில்

நேருயர்ந்த நெடுங்கோட்டை.  1


பேராறு - பெரிய ஆறு.

ஊறாத தரை - ஆற்றுநீர் புகாத தரை.


முன்மாந்தர் முடித்துவிட்ட

மண்காணாச் சாளரங்கள்!

தண்காற்று நாள்முழுதும்!

வெண்ணீரில் இரவிமுகமே. 2


முன்மாந்தர்- பழங்கல மக்கள்  (ஆட்சியாளர்கள்.)

தண் - குளிர்ந்த

மண்காணா - நீரைமட்டுமே காணக்கூடிய

சாளரங்கள் - சன்னல்கள்

இரவி - சூரியன்

வெண்ணீர் - வெள்ளை நீர்


ஊறிமலைப் புறத்திருந்து

ஓடிவரும் நீரின்மிகை

மீறிவரும் காற்றினிலே

ஆடியகல் சிற்றலைகள்  3


ஆடி அகல் - ஆடிக்கொண்டு அகன்று செல்லும்

மீறி -  கூடுதலாக

நாற்புறமும் சாய்கூரை

நடுவிலெழும் கூர்முகமே

மேற்புறத்து நெடுங்கூடு

கொடும்புயலில் மடங்காது.   4


இது ஓர் எழும் கூடுபோன்ற கட்டிட அமைப்பு

இது மேற்பறந்து பார்க்கையில் தெரியும் காட்சி


உலாவருவோர் தங்குதலை

வளாகமெனில் கலாச்சுவையே..

எலாயிரவும் நிலாவெனவே

சொலாமகிழ்வு மெய்துவரே.   5


தங்கு - தங்கும்.

தலை வளாகம் - தலைமையான கட்டிடம்.

எலாயிரவும் - எல்லா இரவும்.

நிலா - சந்திரன்.

சொலாமகிழ்வு - சொல்லவியலாத ஆனந்தம்.

எலாயிரவும் ( இல்பொருள் உவமையின்பால்படும்)

கலாச் சுவை -  கலையழகு தரும் இரசனை.



கருத்துகள் இல்லை: