திங்கள், 19 நவம்பர், 2018

உணவும் அளவும்

சருக்கரை நோயில் ஒருகால் எடுத்துவிட்டால்
இருக்கவும் நடக்கவும்  அடைவது துன்பமதே.
உருக்கென ஊட்டமாய் வளர்ந்த உடம்பெனினும்
பருக்கை மிகுதியால் பாழ்படக் கெடும்பலர்காண்.

உண்பதும் கணித்தினி அளவுடன்  செய்திடுவாய்
பண்புடன் உணவினை அமைத்துப் பாரினில்வாழ்;
கண்படும் உண்பொருள் அனைத்தும் விழைந்திடிலோ
விண்படும் நோய்களும் விரைந்து வந்திடுமே.


உருக்கு :  இரும்பு.

பருக்கை மிகுதியால் பாழ் :   இது இரத்தத்தில் இனிப்பு
கூடுவதால் ஏற்படும் நலமின்மை;

பலர் கெடும் காண் -   பலர் இன்னும் கெட்டு பொது உடல்
நலக் கேட்டை அடைதல்  காண்க .

அதாவது கெடுதல் ஒன்று இன்னொன்றுக்கு வழி செய்தல்.

கருத்துகள் இல்லை: