திங்கள், 19 நவம்பர், 2018

இனிப்புநீரும் காலும்.

இனிப்புநீர் நோயாளிகளுக்குக் கால்தான் மிக முக்கியமானது என்று கூறுவதிலும் உண்மை இருக்கிறது.

அம்மையார் ஒருவருக்கு காலில் சேற்றுப்புண் வந்துவிட்டது.  இவ்வகையான புண் வந்து அப்புறம் அது தானே ஆறிப்போய் நன்றாக இருந்தவர்களும் பலராவர்.

ஆனால் இந்த அம்மையாருக்கு வந்தது கொஞ்சம் 'பிடிவாதமாய்'  ஆறாப்புண்ணாக இருந்துவந்தாலும்  பலவகைக் களிம்புகள் தைலங்களைத் தேய்த்துக்கொண்டு அம்மையார் கவனிக்காமல் இருந்துவிட்டார்.  யாரும் கேட்டால் கடவுள் கவனித்துக்கொள்வார் என்று சொல்வார்.

நாளடைவில் காலில் நோய்நுண்மிகள் நச்சுத்தன்மையைக் கக்குவனவாக மாறிவிட்டன. ஒற்றைக் கால் வலிமை இழந்ததுடன் மருத்துவர்கள் அதனை அறுவை செய்து எடுத்தாலே பிழைக்கமுடியும் என்று சொல்லிவிட்டனர்.

கால் போனபின் சக்கர நாற்காலியில் கட்டுண்டவராக இருந்தவர் பலமுறை மருத்துவமனையில் தங்கியும் சிகிச்சை பெற்றார். ஐந்தாண்டுகள் இவரை மருத்துவர்கள் காப்பாற்றினர். இனிப்பு நீர் நோய் கூடிவிட்டது.  இந்நிலையில் இருநாட்களுக்கு முன் அவர் உயிரிழந்தார்.

அவ்வம்மையாரின் ஆத்ம சாந்திக்கு வேண்டிக்கொள்கிறோம்.

 இதுபோலத்  துயர் உறுவோர் பலர் என்பதை அறிவோம். இனிப்பு நீர் இருந்தால் கால்களை நல்லபடியாகக் கவனித்துக்கொள்ளுங்கள். ஏதேனும் காயமோ புண்ணோ ஏற்பட்டால் அதற்கு முதன்மை கொடுத்து உரிய மருத்துவ உதவியைத்  தாமதம் இன்றி நாடுங்கள்.


கருத்துகள் இல்லை: