புதன், 15 பிப்ரவரி, 2017

ஆவினைப்போல் சசிகலை,, predicament of Sasikala.

ஆவினைப்போல் தரித்துத்தம் தலைமேற் போற்றி
ஆடினர்நூற்  றுவர்மிக்கோர் அணியாய் நின்றே!
தேவதையாய்க் கோவிலினுள் அமரும்  முன்பாம்
திசைதிருப்பி இடம்தொலைத்த வழக்குத் தீர்ப்பே .
ஆவதினி யாவதுண்டோ   அழிந்த கோலம்;
அதுதானே சசிகலையின் இழந்த காலம்!
நோவதுயார் தமைஅங்கே நுதலின் கண்ணை
நூறுமுறை திறந்தாலும் மாறா நோவே.

அரும்பொருள் 

ஆவினைப்போல்  -  கோமாதாபோல் 
தரித்து ~  தாங்கி; அணிந்து;
அணியாய்  ~   (சட்டப்பேரவை உறுப்பினர்கள்)  வரிசையாய்;
யாவதுண்டோ ~  எதுவுமுண்டோ;
நுதல் ~ நெற்றி;
நோவு ~  துன்பம்

கருத்துகள் இல்லை: