சனி, 4 பிப்ரவரி, 2017

புறக்கட்டு என்ற சொல்லை....................

இனி பேச்சு வழக்கிலிருக்கும் புறக்கட்டு என்ற சொல்லைக் கவனிப்போம்.
இதைப் புற+ கட்டு என்று பிரித்து,பின்புறத்துக் கட்டுமானம், அல்லது
அஃது உள்ள இடம் என்னலாம். பின்புறம் என்றும் பொருள்.

இது எழுத்தில் வந்துழிக் காண்க.

இதை புற + கண் + து என்றும் பிரிக்கலாம். இங்கு கண் என்பது இடம்
என்று பொருள்படும்.  கண்+து = கட்டு என்றும் வரும்.  கண்ணது என்றும் வருதல் உண்டு.

இது வெளியிடத்தது என்று பொருள்தரும். பேச்சிலும் இது அருகியே வருகிறது.

சொல் அமைப்பை அலசும் போ து இலக்கிய வழக்காக உள்ள இது  "சொல்
நாகரிகம் "  உடைய கோவையாகத் தோன்றவில்லை என்பதே இதில்
வியப்பாக உள்ளது.

கருத்துகள் இல்லை: