சனி, 25 பிப்ரவரி, 2017

உரோமம் என்ற சொல்

உரோமம் என்ற சொல்லைப் பற்றிச் சிறிது அளவளாவுவோம்.

பண்டைமக்கள், உடலின் தோலுக்கு ஆங்கு வளரும் மயிர், பாதுகாப்பு
அளிப்பதாகக் கருதினர்.  அவர்கள் அறிவியலாளர் அல்லர். ஆனால்
அவர்களின் கருத்தின்படி சொற்களை அவர்கள் அமைத்தனர்.

தோலின் மூலமே நாம் உற்று அறிகிறோம்.  உறுதல் என்பது தொட்டறிவு ஆகும். இது ஊறு எனவும் படும்.  உறு> ஊறு. முதனிலை ( என்றால்
சொல்லில் நிற்கும் முதலெழுத்து "உ" )  இங்கு நெடிலாக ஊறு என்று
மாறுவது.  உறு என்பதனோடு நின்றுவிடின் முதனிலை திரியாது நின்றது
என்போம்.

ஓம்புதல் என்பது காத்தல். இதன் அடிச்சொல் காத்தல் என்று பொருள்தரும் ஓம். இதுவே பல மந்திரங்களிலும் பயின்று வழங்குவதாகும்.

உறு + ஓம் + அம் (விகுதி).  = உறோமம் > உரோமம் ஆகிறது.

"உறும் உறுப்பாகிய தோலினைக் காக்கும் மயிர்" என்று வரையறவு
செய்யவேண்டும்.

இதை எழுதியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. கள்ளமென்பொருள்
அதனை அழித்துவிட்டது.


கருத்துகள் இல்லை: