ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

சுந்தரி > சுந்தரன்

அரி என்றால் அழகு. இந்தச் சொல்  எப்படி அமைந்தது?

எல்லாம் கண்ணுக்கு அழகாய் இருப்பதில்லை. பல, இயல்பாகவே உள்ளன. ஆனால், பத்தில் ஒன்றிரண்டு மிக்க அழகுடையவாக‌
உள்ளன. இவை அரியவை.  அருமையானவை.

அரு>  அரி.  (அரு+ இ).

அழகில் மனிதனை உந்திவிடும் அழகும் உண்டு. கவர்ந்திழுக்கும்  அழகும் உண்டு. பருகும் பான்மையிலான அழகும் உண்டு  ----  என்று   பலர்
வரணனை செய்வர்.

உந்தும் அழகு:  உந்து + அரி.  இது உந்தரி  என்றாகும்.

உந்தரி >  சுந்தரி.  (   அகர  வருக்கம் சகர  வருக்கமாதல் )
சுந்தரி :  அழகி.
சுந்தரம் : அழகாகிய தன்மை.

சுந்தரி > சுந்தரன். (ஆண்பால்).

சில சொற்களுக்கு ஆண்பால் இல்லை. ஊர்வசி >  ஊர்வசன் என்று
காணமுடியவில்லை. அப்படி ஒருவன் கதைகளில் வரின் காண்க.




கருத்துகள் இல்லை: