திங்கள், 6 பிப்ரவரி, 2017

இறைவனே இவ்வுலகிற் கிறங்கி.....

இறைவனே இவ்வுலகிற் கிறங்கி வந்த‌
இன்பழமைக் காலத்திற் கேகி நாம்போய்
நிறைவான சண்டையிலா உலகம் தன்னை
நிறுத்தின்றிக் காலயரத் தேடி  னாலும்
குறைவான பலன்கூடக் கிடைக்கா தம்மா
கோதற்ற போரற்ற ஞால மில்லை;
வரைவின்றிப் பலவாறு கருதிப் பேசும்
வளமூளை மனிதனதே ஆன தாலே.

கருத்துகள் இல்லை: