ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

மலைத் தென்றலை............

மலையிலிருந்து சற்றே தாழ்வான நிலப்பகுதிக்கு வீசும்  காற்று, கவிகள் பாடத்தகுந்த இனிமைத் தென்றலாக இருக்கவேண்டும். இல்லையென்றால் இந்தச்  சொல் ஏன் இப்படி அமைக்கப்பட்டது?

அசலக் கால் ‍ இதுதான் சொல்.

ஆசலம் என்றால் மலை. இது எப்படி அமைந்தது என்பதை நாம்
ஆய்ந்துள்ளோம்.

இங்கே: http://sivamaalaa.blogspot.com/2017/01/blog-post_65.htmlhttp://sivamaalaa.blogspot.com/2017/01/blog-post_65.html  ஆசலம்  (சொடுக்கவும் )

இது பின் அசலம், அசலை என்றெல்லாம் குறுக்கமடைந்தது.

ஆகாரம் அகரமானது:  ஆசலம் >  அசலம்.

அசலம் >  அசலை.  (அம் விகுதி இழந்து, ஐ விகுதி பெற்றது ).

காற்று என்ற சொல்லின் அடி கால். கால்+து = காற்று.

து என்பது ஒரு விகுதி.  து விகுதி வந்த சொற்கள்:  கைது  (கைக்குள் கிட்டுதல் ), விழுது,  வயது (காலத்தின் வயப்படுதல்).

கால் எனின் காற்று என்றும் பொருள்.

ஆக, மலைத் தென்றலை "அசலக் கால்" என்றது மிக்கப்
பொருத்தம் அன்றோ.


கருத்துகள் இல்லை: