ஞாயிறு, 4 டிசம்பர், 2016

இசு > இச்சை

மனம் இழுக்கப்படுவதே இச்சை. உண்மையில் மனம் என ஒன்று உள்ளதா என்பதைப் பலர் ஆய்ந்து இல்லை என்பர். இல்லைதான்,
ஆயின் அப்படிக் கொள்வது மொழிமரபும் மக்கள் பண்பாடும் ஆகும்.
இருதயம்  (ஈர்+து+ அ+(ய) + அம் )  என்பது அரத்தம் அல்லது குருதியை ஈர்க்கும் மற்றும் வெளிப்படுத்தும் ஓர் உறுப்பு.  ஈர் = இங்கு
இழுத்துக்கொள்வது;  அ = அங்கு செலுத்துவது.  இப்படி இச்சொல்லை அமைத்துள்ளனர் இவ் அறிவாளிகள்.

இழு என்பது இசு என்று திரியும்.  இசு + வு = இசிவு.  உகரம் கெட்டு ஓர் இகரம் தோன்றிற்று. வகர ஒற்று உடம்படு மெய். இசிவு ‍ இழுத்தல்.

பசு > பச்சை.  சகர இரட்டிப்பு,
இசு > இச்சை.  இதுவும் அங்ஙனம் கட்டமைந்த சொல்.  இறுதி ஐ ஒரு விகுதி.    கொலை என்பதில் கூட ஐ இருக்கிறது. கொல்+ஐ
கொலை.

இது முன் எழுதப்பட்டு அழிபட்டதால், உங்களிடம் இருந்தால்
அனுப்பிவைக்கவும். நன்றி

கருத்துகள் இல்லை: