புதன், 7 டிசம்பர், 2016

நேத்திரம் - கண்

நேத்திரம் என்ற சொல் கண்னைக் குறிப்பது.

ஓர் ஒலி புறப்பட்ட இடத்திலிருந்து செவிகளை வந்து எட்டி விடுகிறது.
பின்னிருந்தும் பக்கத்திலிருந்தும் முன்னிருந்தும் வரலாம்,

ஒளி என்பது நேராக வந்து கண்ணை அடைகின்றது,  அது கோணலாக‌
வர முடியுமானால் பின்னிருப்பதை நாம் காண இயலுமே.  அப்படி
இயல்வதில்லை.

அதனால் கண்கள் நேராகவே காணும் திறம் உடையவை.

இத்தகைய ஒரு வரம்பு செவி மூக்கு இவற்றுக்கு ஏற்படவில்லை.

நேர்த் திறம் உடையது நேத்திரம் ஆயிற்று,

இங்கு சில சொற்களில்போல் ரகர ஒற்று மறைந்தது.



கருத்துகள் இல்லை: