ஞாயிறு, 4 டிசம்பர், 2016

பங்களோ

பங்களா என்ற ஆங்கிலச் சொல், வெள்ளையர்கள் இந்தியா வந்தபின்
அமைத்துக்கொண்ட அல்லது உருவான சொல் என்பர். இது ஆங்கில‌
சொல் நூலாரின் முடிபு.

இதற்கு மூலமாக அமைந்தது பங்களாவு என்ற மலையாளச் சொல்.
காழ்ச்சை பங்களாவு என்ற மலையாளச் சொல்லமைப்பு,  கண்காட்சி
சாலையைக் குறிக்கும். காழ்ச்சா ‍=  காட்சி.

பல பங்குகளாக ஆனால் இணைத்து உருவாக்கப்பட்டு,  ஒரு விரிந்த‌
பரப்பை அளாவி நிற்பதால்  பங்கு+ அளாவு  ஆயிற்று.  இது
வங்காளத்தில் இருந்த மலையாளிகள் வாயிலாகப் பரவி இருக்கலாம் என்று தெரிகிறது.  பல அறைகள் அல்லது பங்குகள்  இணைந்து அளாவி நிற்பது.  பங்களாவில் பல அறைகள் இருத்தலும்  அது பெரிதாக (அளாவி ) நிற்றலுமே
மக்கள் கருத்தைக் கவர்கிறது.

பங்களோ என்பதில் பங்காள் முதலாயின் ஓ என்பது பொருள்பெற்றதாய் இல்லை.

கருத்துகள் இல்லை: