புதன், 28 டிசம்பர், 2016

ஜெய லலிதா பொற்செல்வி

பாண்டியனின் மகள்போலப்
பைந்தமிழ்ப்பொற் செல்வியெனப்  
பணிந்துபலர்  உயர்ந்தேத்தப்
பார்புகழக் கோலோச்சி
மறைந்தஜெய லலிதா,      தன்னை ~~

ஈண்டுவளர்த் துயர்த்தியவர்
இருந்தாரேல் இக்கதியும்
எய்த லுண்டோ   என்றுகுரல்
எழும்பிடவே நன்றுபல
புரிந்தவரே முதல்வர்    முன்னாள்..



நல்லவரும் புகழ்கின்றார்;
நல்லதுமுன் செய்தவராய்
உள்ளசில நிகழ்வுகளால்
ஊரெதனைக்  கூறிடினும்
 நல்லோரே யாங்க     ளென்பார்,


எல்லவரும் புகழ்கின்றார்
என்றிடிலோ யார்க்குமொரு
மீட்பரெனத் திகழ்ந்தவரே
அவரெனவே தெளிவுறுத்தும்
வரலாறே        இதுவோ     பண்பால்..


கருத்துகள் இல்லை: