செவ்வாய், 13 டிசம்பர், 2016

முன்படித்த முதுபழசை......

முன்படித்த முதுபழசைச் சொல்லிச் சொல்லி
மூளைக்கோ அயர்வளிக்கும் ஆளே வாத்தி;
மண்துகளே படர்ந்திடினும் மாச கற்றி
மாண்புதனை வெளிக்கொணர்வான் ஆய்வு நல்லோன்!
பின்கண்டு பிடித்ததையும் பேணிக் கொண்டு
பிழைகளைந்து நிலையுணர்ந்து பேசு வோனே
முன்தவறு மறைப்பவனே மாற்றுக் காரன்
முனைப்பினையம் அழிப்ப்வனாம் புத்தாள் ஆவான்.

கருத்துகள் இல்லை: