புதன், 6 ஆகஸ்ட், 2014

கபிலர் & செல்வக்கடுங்கோ

இது செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பற்றிய  சங்கப் புலவர் கபிலரின் வண்ணனை.  இத்தமிழைச் சிறிது நுகர்வோம்.


இழை அணிந்து எழுதரும் பல் களிற்றுத் தொகுதியொடு
மழை என மருளும்  மா இரும் பல் தோல்
எஃகுப் படை அறுத்த கொய் சுவற் புரவியொடு
மைந்துடை ஆர் எயில் புடை பட வளைஇ 
வந்து புறத்து இறுக்கும்;  பசும்பிசிர் ஒள் அழல்.
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு
ஒல்லாமயலொடு பாடு இமிழ்பு உழி தரும்
மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்....

(பதிற். 7.63. 1 முதல் 8 வரை.


இழை அணிந்து எழுதரும்  ‍=  அணிகலன்கள்  பூண்டு கிளம்பும்;
பல் களிற்றுத் தொகுதியொடு = பல ஆண்யானைகள் கொண்ட கூட்டத்துடன்;
மழை என மருளும் =  மழை வந்துவிட்டதோ என்.று அஞ்சித் திமிறுகின்ற;
 மா இரும் பல் தோல் = மிககப் பலவாகிய  யானைகளும்;
எஃகுப் படை அறுத்த = எஃகினால் ஆன ஆயுதங்கள் கொண்டு நடந்த படையை வென்ற‌
கொய் சுவற் புரவியொடு =  கழுத்து மயிர்க்கொத்து (ஆடும்) குதிரைகளுடன்
1.
மைந்துடை ‍  வலிமை யுடைய. ( மைந்து என்னும் சொல் யானை மதத்தையும் குறிக்கும்.)  எனவே, மிகு வலிய என்க.2

ஆர் எயில் = கூரான அம்பு.
மதம்பிடித்தது போல் வலிமையுடன் விடப்படும் கூர் அம்பு என்க.
புடை பட  = சூழ்ந்து வர,   வளைஇ ‍ வளைந்து
வந்து புறத்து இறுக்கும் ‍ ‍= வந்து வெளியில் இறுக்கம் அல்லது நெருக்குதல் செய்யும்.
பசும் பிசிர் == பசுமையான மழைத்துளி.
(தண்ணீர் பசுமை என்பது பச்சைத் தண்ணீர் என்னும் உலக வழக்கால் அறிக).
ஒள் அழல் =  தீப் பிழம்பு  போன்ற  (அழல் எனத்தகும் ஒளி  வீச என்பது பொருள். )  அடுத்த  தொடரும் இதை விளக்கும்.
ஞாயிறு  பல்கிய ‍= சூரியன் தன் வெப்பத்தை மிக்கு (ஒளிவீச)

மாயமொடு சுடர் திகழ்பு  ==  புரிந்துகொள்ளவியலாத (கடுமையான) சுடராய்த் திகழ;
ஒல்லா மயலொடு ‍  =  ஏதும் செய்யவியலாத மயக்கத்துடன்;
பாடு = துன்பம்.  (செய்து முடித்தலை எதிர்நோக்கி ஒரு  செயல்வீரன் படும் "துன்பம்" அல்லது "துடிப்பு".)

 இமிழ்பு =  மிகுந்து;  உழிதரும் = திரிகின்ற.
மடங்கல் = அரிமா(வின்);  வண்ணம் = (விதமாகத்)    தன்மை ;
கொண்ட கடுந்திறல் =  உடைய கடுமையான திறன் அல்லது செயலாக்கம்.

இங்ஙனம் கபிலர் புகழ்ந்து பாடுகிறார்.
சங்கப் புலவர்கள் இயற்கையைப்  புகழ்ந்து ஷெல்லி போல் தனிச் செய்யுள்கள் -  கவிகள் பாடுவதில்லை. பெரும்பாலும் அரசர் முதலானோரைப் புகழுமுகத்தான் இயற்கை அழகைத் தொட்டுக்கொண்டனர்.  உரூவகமாக   உவமையாக மேற்கொண்டனர்



தொடரும்.

----------------------------------------------------------------------------------------------------------
சொல்லாக்கக் குறிப்புகள்:

1    (கொய் > கொய்+து > கொய்த்து > கொத்து) யகர ஒற்றுக் கெட்டது. இப்படி யகர ஒற்று கெட்ட சொற்களைத் திரட்டுக). து இங்கு பெயர்ச்சொல் (தொழிற் பெயர்) விகுதியாகப் பயன்பட்டது)

2     (ஒப்பீடு: மை > மையல்; மைந்து < மை+து.  து  பெயராக்க விகுதி.  கொய்> கொத்து என்பது மேலே கூற‌ப்பட்டது.    மை> மய் > மயங்கு,  இது பை> பய் > பயல் என்பது போல.)

திங்கள், 4 ஆகஸ்ட், 2014

உலகிலுள்ள பெண்கள்துயர் & FGM


உலகிலுள்ள பெண்கள்துயர் கொஞ்ச நஞ்சமா‍‍----அவர்கள்

உயிரிழப்பும் உடற்சிதைவும் சொல்லி மிஞ்சுமா? 

நிலவுலகில் வந்ததுநி  றைந்த குற்றமா? ‍‍‍ ----இந்த‌

நெடுந்துன்ப நிகழ்வுகள்நீ  ளாமல் முற்றுமா


பொருள :

சொல்லி - இத் துயர்களை எல்லாம்  சொல்லி ;    மிஞ்சுமா  - நல்லன ஏதும் நாம்  கேடக மீதம்  இருக்குமா? என்று பொருள்.

நிலவுலகில் :  இரு பொருள் :    நிலவு+ உலகில் : ( பெண்ணாகிய) நிலவு உலகில் ( பெண்ணாய்  வந்தது ).   நில + உலகில் .=  இப்பூமியில். 

நிறைந்த  = முழுமையான . 

================================

Doubts grow over Isis 'FGM edict' in Iraq

 A member loyal to the Islamic State in Iraq and the Levant (Isis) waves an Isis flag in Raqqa, Iraq, 29 June 2014 Isis-led insurgents have seized large areas of north-western Iraq
the authenticity of an edict attributed to the Sunni Islamist group Isis controlling the Iraqi city of Mosul about female genital mutilation (FGM).
A top UN official quoted from a statement saying that Isis wanted all females aged between 11 and 46 in the northern city to undergo the procedure.
Jacqueline Badcock said the decree was of grave concern.
But media analysts say the decree seen on social media may be a fake.
Map of countries where FGM is concentrated
It has typos and language mistakes and is signed by "The Islamic State in Iraq and the Levant", a name the group no longer uses, instead referring to itself as the Islamic State.
Some bloggers suggest that the alleged fatwa, which has been circulated on social media for about two days, may have been aimed at discrediting Isis.
Iraq is facing a radical Isis-led insurgency, with Mosul and other cities in the north-west under militant control.
The ritual cutting of girls' genitals is practised by some African, Middle Eastern and Asian communities in the belief it prepares them for adulthood or marriage.
FGM poses many health risks to women, including severe bleeding, problems urinating, infections, infertility and increased risk of newborn deaths in childbirth.
The UN General Assembly approved a resolution in December 2012 calling for all member states to ban the practice.
Christians fled
Earlier, Ms Badcock warned that the alleged Isis edict could affect nearly four million women and girls in and around the northern Iraqi city of Mosul.
The UN's resident and humanitarian co-ordinator in Iraq said the practice "is something very new for Iraq... and does need to be addressed".
She was talking to reporters via video link from the Kurdish provincial capital, Irbil.
Desperate Iraqi women at the Khazair displacement camp on 30 June 2014 in Khazair, Iraq. Tens of thousands of men, women and children have fled the violence in Mosul since June
Jenan Moussa, a correspondent for Dubai-based broadcaster Al AAan TV, said in a tweet that her contacts in Mosul had not heard of the edict.
Isis militants seized Mosul, Iraq's second largest city, in June, and have since taken over areas of the north-west and closed in on cities near Baghdad.
The group forced Christians in Mosul out of the city earlier this week and daubed their houses with the Arabic letter N to mark them out as Christians, apparently confiscating their properties, BBC Arab affairs editor Lina Sinjab says.

FGM and child marriage

130m
have undergone FGM
  • 29 countries in Africa and the Middle East practise FGM
  • 33% less chance a girl will be cut today than 30 years ago
  • But rising birth rate means more girls in total are affected
  • 250m women worldwide were married before age of 15
Source: Unicef
Unicef
Ms Badcock said only 20 families from the ancient Christian minority now remain in Mosul, which Isis has taken as the capital of its Islamic state.
Thousands have fled into Kurdish-controlled territory in the north.
Some of the Christians who remained have converted to Islam, while others have opted to stay and pay the "jiyza", the tax imposed by Isis on non-Muslims, the UN official added.
Isis announced last month that it was creating an Islamic caliphate covering the land it holds in Iraq and Syria.
line
Female genital mutilation
  • Includes "the partial or total removal of the female external genitalia or other injury to the female genital organs for non-medical reasons"
  • Practised in 29 countries in Africa and some countries in Asia and the Middle East
  • An estimated three million girls and women worldwide are at risk each year
  • About 125 million victims estimated to be living with the consequences
  • It is commonly carried out on young girls, often between infancy and the age of 15
  • Often motivated by beliefs about what is considered proper sexual behaviour, to prepare a girl or woman for adulthood and marriage and to ensure "pure femininity"
Source: BBC

வாயால் வளம் பெற்றோர்



வாயை முதலாக வைத்து வாழ்க்கைத் தொழில் நடத்தியவர்கள் பலர் ஆவர்.
குருமார்கள், ஓதுவார், வாத்தியார்கள். பாடகர்கள்,  -- இப்படிப் பலராவர்.

இதில் வாத்தியார் என்பது வாய் >  வாய்த்தியார் > வாத்தியார் என்பது முன் ஓர்   இடுகையில்  விளக்கப்பட்டது. 

உப + அத்தியாய  > உபாத்தியாய  என்று அமையும் சங்கதம் வேறு. இவர் வேதம் கற்பிப்பவர்.

அரசனைப புகழ்ந்து பாடுவோர் சங்க காலத்தில் இருந்தனர்.

இவர்கள் வாய்மொழி வாயர் எனப்பட்டனர். 

"வாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்த "  (பதிற்.4.  37.  வரி 2).

வாயாற் பிழைப்போர் மக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டனர். 

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

இமயவரம்பனைப் புகழ்தல்


1
வெயில் துகள்  அனைத்தும்
மாற்றோர்  தேஎத்து மாறிய  வினையே
கண்ணின் உவந்து  நெஞ்சு  அவிழ்பு அறியா
நண்ணார்  தேஎத்தும் பொய்ப்பு  அறியலனே
படியோர்த் தேய்த்து  வடிமணி  இரட்டும்
கடாஅ  யானை  கண நிரை   அலற
 வியல் இரும் பரப்பின் மாநிலம் கடந்து
புலவர் ஏத்த ஓங்குபுகழ்   நிறீஇ.... (யினான் )


வெ யில் துகள்  அனைத்தும்  ==
வெயிலும்  காற்றில் அடிக்கும்  தூசியும் கூட

மாற்றோர்  தேஎத்து மாறிய  வினையே  ==
  பகைவர் தேசத்தில்  மாறி  அமைந்து  விட்டன.;

கண்ணின் உவந்து =  கண்ணால் பார்த்து விரும்பி
நெஞ்சு  அவிழ்பு அறியா  =  மனம் திறந்து  இரங்குதல்  தெரியாத ;

நண்ணார்  தேஎத்தும் = ( அப் )பகைவர் நாட்டிலும்

பொய்ப்பு  அறியலனே -  ஏமாற்றுதல்  அறிய  மாட்டான் ;
(அங்கும்  கொடை  நிகழ்த்தினான் வேந்தன்.)

படியோர்த் தேய்த்து  = அடங்காத பகைவரை அழித்து;
வடிமணி  இரட்டும் -  (யானை )  மணிகள் இருவிதமாய் ஒலிக்கும்;
கடா யானை  =  ஆண்  யானைகள் ;  கண நிரை   அலற = படைத் தொகுதி அலறும்படியாக;   வியல் இரும் பரப்பின் மாநிலம் கடந்து =  மிக விரிந்த பெரிய நிலப் பரப்பினை வென்று ;
புலவர் ஏத்த ஓங்கு புகழ்   நிறீஇ  = புலவர் வாழ்த்தும்படியான மிகப் பெரும் புகழை நிலை நாட்டி;(னான் )


2 அட்டு  மலர் மார்பன்;
எமர்க்கும் பிறர்க்கும்  யாவர்  ஆயினும் 
பரிசில்  மாக்கள்   வல்லார்  ஆயினும்
 கொடைக் கடன் அமர்ந்த  கோடா நெஞ்சினன்;
 மன்னுயிர்  அழிய  யாண்டுபல மாறி 
தண்ணியல்  எழிலி தலையாது ஆயினும் 
வயிறு பசி கூர  ஈயலன்;
வயிறு மாசு  இலீ இயர் ,  அவனீன்ற  தாயே. 


அட்டு  மலர் மார்பன்;==

மலர்   சொரிந்த மார்பை  உடையோன்;
எமர்க்கும் பிறர்க்கும்  யாவர்  ஆயினும்==
நம்மவர்க்கும் அடுத்துள்ளோர்க்கும்    மற்ற எவராயினும்
பரிசில்  மாக்கள்   வல்லார்  ஆயினும்==
புலவர்போல பரிசில் வேண்டி வருவோர்  எத்தகையோர் ஆயினும்  
 கொடைக் கடன் அமர்ந்த  கோடா நெஞ்சினன்;==
ஈவது கடமை என்ற உணர்வு  குடிகொண்ட நேர்மையான நெஞ்சினன் 
மன்னுயிர்  அழிய  யாண்டுபல மாறி==
உலகின் உயிர்கள் அழிவு எய்தி பல ஆண்டுகள் சென்றும்
தண்ணியல்  எழிலி தலையாது ஆயினும்==
தண்மையான  மேகங்கள் மழை பெய்யாது பொய்த்துவிடினும் 
வயிறு பசி கூர  ஈயலன்==;
வயிறு  மீண்டும் பசிக்க ஈதல்  செய்பவன் அல்லன்;(  என்றுமே  இனிப் பசி  வராதபடி ஈபவன்; )
வயிறு மாசு  இலீ இயர் ,  அவனீன்ற  தாயே==.
காரணம், அவனை ஈன்ற தாய்  வயிற்றில்  மாசு இல்லாதவள் 


பதிற்றுப் பத்து ,  இரண்டாம் பத்தின் இறுதிப் பாடற் பகுதி. வரிகள்  6  முதல்  14 வரை;   வரி   20 முதல் 27 வரை.  பாடிய புவலர் பெருமான் குமட்டூர் கண்ணனார். படப் பெற்ற மன்னன்  இமய வரம்பன் நெடுஞ்ச்சேரலாதன். இவன் பெரும் போர் வீரன் என்பது,  இவன் புகழப்பெற்ற சொற்களினால்  அறியலாம்.

புறப்பொருளில்  இஃது  இயன்மொழி வாழ்த்து.  ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமுமாக  வந்துள்ளது.  செந்தூக்கும் வஞ்சித் தூக்கும் ஆகும்.

புலவர் பெற்ற பரிசு: 500 ஊர்கள்.  38 ஆண்டுகட்கு  அரசின்  தென்னாட்டு வரவில் பாதி.

இந்தப் பாடல் பாடிப் புலவர் ஒரு குறு நில  மன்னராகவே ஆகிவிட்டார் எனில் மிகையாகாது.

இவ் வேந்தன் பெருங் கொடையாளி . ஒரு ஊழியே மாறி  மழையே இல்லாமல் போனாலும் கொடையே  அவன் நெஞ்சத்து  முன் நிற்பது. 




சனி, 2 ஆகஸ்ட், 2014

583 தத்தெடுத்த அதிகாரி



http://tamil.thehindu.com/tamilnadu/

'19 ஆண்டுகளில் 583 ஏழை மாணவர்களை தத்தெடுத்து உயர்த்திய ஐஏஎஸ் அதிகாரி: சத்தமில்லாமல் ஓர் அசாத்திய சாதனை'

1995-ல் என் மனைவி இறந்தபிறகு, அந்தக் காப்பகத்தை இன்னொருவர் பொறுப்பில் விட்டுவிட்டு, பணம் இல்லாததால் படிப்பை கைவிடும் ஏழை மாணவர் களின் பக்கம் எனது கவனத்தைத் திருப்பினேன். அதற்காக 1996-ல் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பத்தாம் வகுப்பில் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்த ஏழை மாணவர்களின் பட்டியலை கேட்டு கடிதம் எழுதினேன். 

சரியான மாணவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளிகள் பரிந்துரை செய்திருந்த மாணவர்களை அழைத்து, நானே ஒரு தேர்வு வைத்தேன். அதில் முதல் ஆண்டு தேர்வான 13 பேரை தத்தெடுத்து அவர்களுக்கான படிப்புச் செலவுகள் அனைத்தையும் செய்து படிக்க வைத்தேன். படிப்பு மட்டுமில்லாமல் மற்ற திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி வகுப்புகளையும் தனியாக நடத்த ஆரம்பித்தோம். 

மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொது அறிவு உள்ளிட்ட தனித் திறன் பயிற்சி வகுப்பை நிபுணர்களைக் கொண்டு நடத்தினோம். இப்படி, கடந்த 19 ஆண்டுகளில் 583 பேரை தத்தெடுத்து நல்வழிப்படுத்தி இருக்கிறோம்.
கூடலூரைச் சேர்ந்த பால் விற்கும் பெண்ணின் மகன் ஒருவன், கையில் பணம் இல்லாத தால் படிப்பை பாதியில் விட்டு விட்டு வேலைக்குப் போகும் முடிவில் இருந்தான். அவனை நாங்கள் தத்தெடுத்து படிக்க வைத்தோம். அவன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக்., முடித்தான். தற்போது தனது தம்பியை மதுரை அமெரிக்கன் காலேஜில் எம்.எஸ்சி. படிக்க வைத்திருக்கிறான். 

எங்களிடம் பயிற்சி பெற்று படித்த 8 பேர் டாக்டர்களாகவும் நிறைய பேர் பொறியாளர்களாகவும் உள்ளனர். எங்களிடம் பயின்ற மாணவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். 15 வயதில்தான் மாணவர்கள் வழி தடுமாறிப் போகின்றனர். அந்த நேரத்தில் உரிய கவனம் செலுத்தி அவர்களை நல்வழிப்படுத்தி விட்டால் நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். 

எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப தங்களால் ஆன உதவிகளை இயலாத வர்களுக்குச் செய்ய வேண்டும். எங்களிடம் படித்து பணியில் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் அத்தகைய உதவிகளை செய்ய ஆரம்பித்திருப்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’’ என்றார் ராமநாதன்

(தொடர்புக்கு -9442564078).
__._,_.___

உங்கள் நாட்டுத் திறன்

அவர் வெளி நாட்டு வேலைக்காரர்.
இங்கு வந்து  குளம்பி (காபி)  போடுகிறார்!
தாகம் எடுத்த  அதனாலே,
நாமும் வங்கிக் குடிக்கிறோம்!
இங்கு வேலை செய்ததனால்
அவர் திறமும் (தரமும் )
இந்த நாட்டின் திறமோ? வெளி நாட்டுத் திறமோ?

அவர் நன்றாகக் குளம்பி போட்டால்
அந்தத் திறமை அவர்திறமை.
அவர் இருந்துவந்த நாட்டின்  திறமை.

ஒரு மருத்துவ  மனையில்
வெளி  நாட்டுத் தாதிமார்,
வெளி நாட்டு மருத்துவர்கள்!
அந்த மருத்துவ மனைத் தரம்
வெளி நாட்டுத் தரமா? உள் நாட்டுத் தரமா ?


இலவசம்

இலாகா என்ற சொல்லின் தொடர்பில் இலவசம் என்ற சொல்லையும் நினைவு கூர்வது  நலமென்று நினைக்கிறேன்.  இலவசம் என்னும் சொல்லினைப் பற்றி சில ஆண்டுகட்கு முன் எழுதியிருக்கிறேன்.

இலவசம் எனில் " இல்லாமல் வசமாவது".  -  என்ன இல்லாமல் ?  என்ற கேள்விக்கு "விலை இல்லாமல்",   "கட்டணம் இல்லாமல் "   "காசு இல்லாமல்" என்றே  எல்லாம் விரிக்கலாம்.  இது பொருள் கைமாற்றம் தொடர்பில் வரும் சொல் ஆதலால் வேறு ஏதும் இல்லாமல் என்று சொல்ல இயலாது.

வசம் என்பது வை என்ற சொல்லின் அடியாய்ப் பிறந்தது.

பை > பய் > பயல் > பயன் > பசன் >பசங்க
பை> பையல் > பையன் .

பையலோடிணங்கேல்  என்பது ஆத்திசூடி.

இந்த மாதிரி திரிபுதான் இது.

வை > வய் > வயம் > வசம்

ஓன்று (உங்கள் ) வசமிருக்கிறது என்றால்  அதை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.

இல் >  இல்+வசம் >  இ (ல் +அ ) வசம் >  இலவசம்.

இடையில் ஒரு அகரம் தோன்றிவிட்டது.  சிலருக்கு அதனால்  மூளை  திசை மாறிவிடுகிறதோ?

இலாகா என்பதில் உள்ள இல் house குறிக்கும் .
இலவசம்   என்பதில் உள்ள இல் no, without  குறிக்கும்

வியாழன், 31 ஜூலை, 2014

சந்த மொழி. மந்திரமொழி

இலாகா என்பது  பின் நடைப் புனைவு என்றோம், இங்கே:
http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_31.html

மொழிப் பெயராகிய சமஸ்கிருதம் என்பது வேறு விதமாக .விளக்கப் பட்டுள்ளது. "நன்றாக அமைக்கப்பட்டது"   என்பதிலிருந்து வந்ததாகவும் பொருள் விளக்கப் பட்டது.

அதுமட்டுமின்றி சமை என்பதிலிருந்து வந்ததென்பதும் கூறப்பட்டது \\இவை எல்லாம் ஒரு புறம்  இருக்க,

சமஸ்கிருதம் ஓர்  சந்த மொழி;  அது  மந்திர  மொழி  என்பதை நாம் அறிவோம்.

ச -  சந்த மொழி.
ம -  மந்திரமொழி.

முதலிரண்டு  எழுத்துக்களுக்கும் இவையே  பொருள்; மொழிப் பெயரும் அப்படி  வந்தது தான்  என்று நினைக்க இடமுண்டு.

இதை எதிர்கால ஆய்வுக்கு விட்டுவிடுவோம்.









இலாகா

இந்தச் சொல் எப்படி உருவாயிற்று என்று இப்போது ஆய்வு செய்வோம்.

எடுத்துக்காட்டில் தொடங்குவது எளிதாய் இருக்கும்.  ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் காட்டு விலங்குகளைக்  காப்பாற்ற ஆள்வோர் எண்ணுகின்றனர்.  அதற்காகச்  சில அலுவலர்கள், காவலர்கள் ஆகியோரை நே(ர் )மித்து  ஒரு சிறு அலுவலகம் அமைக்கின்றனர்.  அஃது ஒரு :காவல்  இல்லம் என்றால் அது பொருத்தம் ஆகும்.

ஒவ்வொரு காட்டிலும்  காவல் இல்லம் ஒன்று அமைத்து  ஒரு தலைமை அகம் ஓர்  நகரில் அமைப்பதானால் அது ஒரு "துறை" என்று இப்போது நாமறிவோம்.

கொஞ்ச காலத்தின்முன் துறை என்று இதைச் சொல்லலாம் என்பது அதிகாரிகள் சிந்தனைக்கு எட்டவில்லை என்றுதான் கூறவேண்டும்.
அவர்கள் அதற்கு ஒரு சொல் தேடினார்கள். ஒன்று  அமைத்துவிடலாமே என்று சிலர் ஓர் உத்தி (யுக்தி) செய்தனர்.

காவல் இல்லம் என்பதையே திருப்பிப் போட்டனர்.

காவல் ஆகும் இல்லம்.
கா -  ஆ -  இல்
இல் - ஆ -- கா
 இப்போது இலாகா  என்ற அருமையான புதுச் சொல் கிட்டிற்று.

Reverse formation!

இது என்ன "பாஷை" என்றவர்க்கு எதாவது சொல்லவேண்டியதுதான்.

முன்பே மொழியில் பின்னோக்கு அமைப்புச் சொற்கள்  உண்டென்பது தெரிந்தவர்தான் இதைப்  பின் நடைப் புனைவு செய்திருக்கிறார்.

இரகசியம் என்பதும் அப்படிப் போட்ட சொல் தான். இதை நான் முன் இடுகை ஒன்றில் சொல்லியிருக்கிறேன்.  There are quite a few of this sort.

இது எப்படி ஆனது என்பது புரியாத போது  சமஸ்கிருதம் என்றால் என்ன? உருது என்றால் என்ன? நட்டம்தான் என்ன?





புதன், 30 ஜூலை, 2014

வம்மிசம்

வரு(தல்) என்ற சொல் வினைமுற்று விகுதிகள் பெற்று வருங்கால் பல்வேறு விதமாகத் திரிதல் காணலாம்.  இவற்றை ஆய்வு செய்யுங்கள்:

வருகிறான், வருகிறது  (இன்ன பிற).     வரு என்பது பகுதி;
வந்தான்,  வந்தது  (இ - பி )                           வ என்று திரிந்தது.
வருவான்,  வரும்.                                           வரு திரியவில்லை.
வாராய்                                                                வார் என்று திரிந்தது.
வா    (   விளி /   அழைப்பு) )                           வார்   - வா எனக்  கடைக் குறைந்தது

வரு >  வார் > வா >  வ.

வருதல் என்ற  சொல்   வம் என்றும் திரியும்.
 வருமின் -  வம்மின்.=   (வருக என்பது போல).

ஒருவரை ஒரு குடிப் பிறப்பில் வந்தவர்,  குடி வழி வந்தவர் என்று  "வந்து" (வருதல்) என்ற சொல்லைப் பயன்படுத்திப் பேசுவதுண்டு.

வரு >  வந்தான்.
வரு >  வம்மின்.
வரு > வ .

வரு +மிசை >  வம்மிசை >  வம்மிசை +  அம்  =  வம்மிசம்.
வம்மிசம்  >  வம்சம் .

வம்மிசம் என்றால் வந்த குடிவழி என்பது பொருள். இதில் "வந்த"  (வருதல்) என்பதே முன்மைக் கருத்தாகும்.  இது ஒரு பேச்சு வழக்குச் சொல்.  "அவன் வம்மிசம் கருவற்றுப் போய்விடும்" என்று சினத்தில் வைதல் கேட்டிருக்கலாம்.  வழிவந்தவர் என்பதுமுண்டு.

மிசை என்பது மேல் எனும் பொருளது.   பிறப்புகளால்   வரும் வழி மேலும் வளர்கிறது என்பதே "மிசை"  குறிக்கும்.

வம்மிசம் என்பது இந்தோ ஐரோப்பியத்தில் உள்ளதா?

சங்கத மொழி :  
வம்சதரன் -   m. maintainer of a family; descendant.  தரன்:  தருவோன்  (தரு+ அன் = தரன்)
வம்சிய  -  a. belonging to the main beam or to the family  m. cross-beam, member of a family, ancestor or descendant

நாட்டுப்புற மொழியில் விளங்கும் இதுபோலும் சொற்களை உள்வாங்கிப்  பாதுகாத்து வைத்திருப்பதற்குச் சமஸ்கிருதப் புலவர்களை நாம் பாராட்டுவோம். 

இனி  மலாய்  மொழியைச் சற்று  காண்போம்.   
"புத்திரி   வங்ச"    (மலாய்)     :    வம்ச   புத்திரி  (சமஸ்கிருதம்)     [குலமகள்   இளவரசி  ] "dynasty princess"
வம்ச  (Skrt)  >  bangsa  (Malay)  race,  people related by common descent.
Bangsa Bangsa Bersatu --   United Nations.
Bangsawan  --   nobility, opera.


செவ்வாய், 29 ஜூலை, 2014

குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு,,,,,,,,,,,,,,,,,,,,

இது முன் இடுகையின் தொடர்ச்சி .

முன் இடுகை:    http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_99.html

மன்னிய பெரும்புகழ் = மாறாத (நிலைத்த)  விரிந்த புகழும்
 மறுவில் வாய்மொழி =  குற்றங் குறை இல்லாத சொல்லாடலும்  ;

இன்னிசை முரசின் =  இனிமையான  இசைக்குத் ;தாளக்கருவி வாசிக்கும் குழுவினரையும் உடைய ;
உதியஞ் சேரற்கு -  உதியன் சேரலென்ற மன்னற்கு,
வெளியன் வேண்மாள்=    வெளியன் என்னும் குறு நில மன்னனின் மகள் ;
நல்லினி ஈன்ற மகன் =  நல்லினி பெற்ற ஆண்பிள்ளை;

அமைவரல் அருவி =   அழகாக ஓடிவந்து விழும் அருவிகளை உடைய ;
இமையம் விற்பொறித்து = இமையம் வரை படை நடத்தி தன்  அரசு (கொடிச்)  சின்னமாகிய வில்லைப் பதித்து;

இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்க  =  அலை ஒலி எழும் கடலால் சூழப்பெற்ற தமிழகம் புகழப் பெறுமாறு ;
தன்கோல் நிறீஇ =  தன்  செங்கோலை  நிறுவி;

தகை சால் சிறப்பொடு =  தகுதியான நிறைந்த  சிறப்புடன்;

பேரிசை மரபின் = மிக்கப் புகழுடைய வம்மிசத்தில் வந்த ;

ஆரியர் வணக்கி = வட திசை ஆட்சியாளரை அடக்கி அவர்களிடம்  திறை அல்லது  ஈடாகப் பொருள்பெற்று;

பேரிசை -  கொடைகள் பல செய்து,  அது கேட்ட  அல்லது பெற்ற புலவர் பெருமக்கள் பாராட்டிப் பாட, அதன் காரணமாக வந்த பெரும்புகழ் என்க  அவ்வாரியரும் அத்தகு உயர் மரபில் வந்தோரே.  ஆகவே பேரிசை மரபு என்றார்.  "ஈதல்  இசைபட வாழ்தல்" என்பது யாவரும் ஒப்ப முடிந்த கருத்தாகும்.

நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து =  சொல் செயல் இவற்றில் நேர்மை குறைந்த கடுமையான பேச்சினை உடைய மேலை நாட்டினரைக் கட்டிவைத்து;  (கைது செய்து )

நயம் - நா நயம் செயல்  நயம் இரண்டும்;


நெய்தலைப் பெய்து =  தலையில் (சூடான) நெய்யை ஊற்றி; ( தண்டனை ஆதலால் சூடான என்பது . வருவித்துரைக்கப் பட்டது; )

(காபி (குளம்பி ) குடித்தான்  எனில் சூடானது குடித்தான் என்பதே பொருள்.அதுபோல )

கைபிற் கொளீஇ  =  கைகளைப் பின்னாகக் கட்டி;

அருவிலை நன்கலம் =  அரிய விலைமதிப்பு உடைய கப்பலை ;

வயிரமொடு கொண்டு  -  அவர்கள் ஏற்றி வைத்திருந்த வைரங்களுடன் பறிமுதல் செய்து;  வைரமொடு என்றும் வைரத்தொடு  என்றும் வரும்.

இவை சுங்க வரி கட்டாத வயிரங்கள் போலும். இத்தகு பறிமுதல் அரசின் கடமை.  சுங்கவரிக் காவலர் அரசில் திறனுடன் செயல்பட்டனர் என்பது பெறப்படும்.


பெருவிற‌ல் மூதூர்த்  தந்து  =  விறலர்  விறலியர் மிக்குடைய பழைய ஊர் ஒன்றின் மக்கட்குத் தந்து;

 பிறர்க்  குதவி =  அவ்வூராரே அல்லாமல் பிறருக்கும் நல்கி ;
அமையார்த் தேய்த்த =  பகைவரை ஒழித்த ;

அணங்குடை நோன் தாள்  =  கடப்பாடுகளை மேற்கொண்டவன் ; (வலிய கால்கள் உடையோன் பல சுமைகள் தாங்குவான்  அதுவேபோல் )

இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு

வட திசைச் சென்று வெற்றியுடன் மீளுதல் அக்கால அரசர்க்கு வழக்கம் . புகழ் தரும் என்பதால்.   A real score for them.

நல்லினி என்பது   ( பெண் குழவிக்கு இட )   இனிமையான பெயர்.

திங்கள், 28 ஜூலை, 2014

வேண்மாள் நல்லினி மகன் இமயவரம்பன் & கண்ணனார்

மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்

அமைவரல் அருவி இமையம் விற்பொறித்து
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇ தகை சால் சிறப்பொடு

பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ

அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு
பெருவிற‌ல் மூதூர்த்  தந்து  பிறர்க்  குதவி
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன் தாள்

இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு.

இது பதிகம். அழகாகப் பாடப் பெற்றுள்ளது. பனிமலை வரை சென்று தன் வில் கொடி பொறித்து, ஆரியரை அடக்கித் திறை பெற்று, யவனர் கொண்டுசெல்ல  முயன்ற வயிரங்களைப் பறிமுதல் செய்து ஒரு பழைய ஊருக்குக்குக் கொடுத்து,  மற்றொருக்கும் உதவிகள் செய்து,ஏனைப் பகைவரையும் அழித்த இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பத்துப் பாடல்களால் குமட்டூர்க் கண்ணனார் பராட்டி யுள்ளார்.

அடுத்து அணுக்கமாக அறிந்துகொள்வோம்.  தொடரும்.


மாறாத இன்ப மயம்.

Hari Raya Greetings to all who are celebrating.

In our minds at this juncture is our thought for the loved ones of air crash victims  MH 370 and MH17.

Test and hurdles can help strengthen resilience  ( the Prime Minister of Malaysia).

We must stand together to face any challenge.

"In line with the advice of the Prime Minister......... Reject extremist bickering  and disunity,   People should instead appreciate the harmony  that Malaysian leaders and independence  fighters had won for the nation. We must always remember that we can live together  in harmony despite the many different races which make up Malaysia"  -- Datuk Seri Liow Tiong Lai, President,  Malaysian Chinese Association and  Malaysian Minister of Transport.  The Star, 28.7.2014.

இப்போது இதற்கு ஒரு பாட்டு:


எல்லா இனங்களும்  இங்கொன்றாய்  வாழ்வதற்குச்  
சொல்லால் செயலால் அனைத்தையும்  ---- நில்லாமல் 
நேராய்  நிறைசெயின்  சீராகப்  பாரிதனில் 
மாறாத  இன்ப  மயம். 

ஞாயிறு, 27 ஜூலை, 2014

அரியணை வேண்டாத அரிசில் கிழார்

அரிசில் கிழாருக்கு அரசன் இரும்பொறை அளிக்கவந்த பரிசிலை அவர் மறுத்து, அவனுக்கு அமைச்சராய் உதவ மட்டும் ஒப்புக்கொண்டார்.  அதுபற்றிய செய்தியைக் கவிதையாகத் தருகிறேன்.


அழகிய பத்துப் பாடல்
அரிசிலார் முடித்தார் பாடி;
இழுமெனும் இனிய ஓசை
எழில்நடை விருந்தால் வேந்தன்
முழுவதும் கவரப் பெற்று
முன்பரி  சோடு வந்தான்;
வழுவறு கோயில் சார்ந்த‌
வள்மெலாம் கொள்க என்றான்.

"காணமே ஒன்பது நூறி
னாயிரம் அரசு கட்டில்!"
யானுமை இரந்து கேட்பேன்,
யாண்டும் நீர்ஆள்வீர்!  கொள்வேன்
கூனிலா அமைச்சே மன்னா
குறையொன்றும் இல்லை என்ன,
வான்புகழ் இரும்பொறைக்கோ
வண்டமிழ் அறிஞர் வாய்த்தார்.

குறிப்புகள் :

இங்கு சொல்லப்படுவது  பதிற்றுப் பத்தில் உள்ள அரிசிலாரின் பத்துப் பாடல்கள்.
வழுவறு =  ஒரு சேதமும் அற்ற.
கோயில் -  அரண்மனை . (அது  சார்ந்த   இடங்கள் நிலங்கள்  மற்றும் அரியணை..)
வளம் எலாம் -  வளமும் எல்லாமும் 
காணமே ஒன்பது நூறி னாயிரம் = ஒன்பது இலக்கம் காணங்கள் (பொற்காசுகள்) 
அரசு கட்டில் - சிம்மாசனம்.
 இரந்து கேட்பேன், - தாழ்ந்து  பணிந்து கேட்டுக்கொள்வேன்.
கூனிலா  -  குறைவற்ற 
 என்ன =  என்று  சொல்ல. 

இரும்பொறையின் நோக்கில் அரிசிலார் பாடியவை விலைமதிப்பற்ற தமிழ்.
ஈடாக எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னான். ஆனால் இறுதியில் அரிசிலார் மூலம் தமிழையே அமைச்சாகப்  பெற்றான். இதில் பெரிய பரிசு இரும்பொறைக்குத்தான்.அன்றாட தமிழ் விருந்து  அரசியல் அறிவுரையுடன் அவன் பெற்றான். 


சனி, 26 ஜூலை, 2014

Toll increases

Travel between  Singapore and Malaysia.  THE CAUSEWAY

The Malaysian Highway Authority (LLM) has announced an increase of more than 400% for the toll rates at the Bangunan Sultan Iskandar Customs, Immigration and Quarantine (CIQ) Complex in Johor Baru starting August 1.
The move to revise the toll rate comes fresh on the heels of Putrajaya’s plans to introduce Vehicle Entry Permit (VEP) fee for all foreign vehicles entering Johor.
In a statement, the Malaysian Highway Authority said passenger cars rates will be revised from RM2.90 to RM16.50 (RM9.70 inbound and RM6.80 outbound) while taxis will have to pay a total of RM8.20 (RM4.80 inbound, RM3.40 outbound), up from the previous RM1.40.
It said the charges for buses has been revised from RM2.30 to RM13.30 (RM7.80 inbound, RM5.50 outbound).
It said Class two vehicles toll will go up from RM4.50 to RM24.90 (RM14.70 inbound and RM10.20 outbound) while Class three vehicles would have to fork out RM33.30 (RM19.70 inbound, RM13.60 outbound) both ways from the previous RM6.10.
Its director-general Datuk Ismail Mohd Salleh said the revised rates were appropriate given the facilities and services enjoyed by users that travelled to the complex from the Eastern Dispersal Link (EDL), the elevated highway built to disperse traffic towards Johor Baru town.
On July 16, Prime Minister Datuk Seri Najib Razak announced that Putrajaya would introduce VEP for Singapore registered vehicles entering Johor.
He gave an assurance that a portion of the VEP collection would be channelled to the Johor government.
Putrajaya’s move came after Singapore recently announced that effective August 1, the Vehicle Entry Permit (VEP) fee for foreign-registered cars entering Singapore will be raised from S$20 (RM52) to S$35 (RM90) a day.
The Goods Vehicle Permit (GVP) fee for foreign-registered goods vehicles will be raised from S$10 (RM26) to S$40 (RM103) a month.
Malaysian businesses have protested against the move since it would drive cost higher, especially with the strong Singapore dollar. – July 26, 2014.  Yahoo News.

Note:

The Star newspaper clarified that the toll charges would apply to all vehicles. It says  it has nothing to do with measures  imposed  by other countries on  vehicles that    entered those countries.   Sunday Star 27.7.14  pg  6.


சிதறுதல் சித்தன் connected words?

சிதறுதல் என்பதும்  முன் இடுகையில் கூறிய "சித்" என்னும் அடியினின்று தோன்றியதே ஆகும்.

முன் இடுகை :-
http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_26.html

சிதறுவதும் சிதைவதும் தொடர்புடைய கருத்துக்கள்..

இனிச் சித்தன் - சித்து என்பனவற்றைச்  சற்று சிந்திப்பதில் தவறில்லை.

சித்தன் என்பவன் இல்லற வாழ்வின் அமைப்பினைச் சிதைத்து,  குடும்பக் கட்டமைப்பிலிருந்து சிதறி வெளியில் சுற்றி அலைந்து,  பிச்சையும் புகுந்து , வெறுக்கத்தக்க சூழ் நிலையைத் தனக்கு உருவாக்கிக் கொள்வோன்  என்று ஒரு காலத்தில்  கருதியிருக்கலாம்.   அதனால் சித் என்ற அடியிலிருந்து  "சித்தன்" அமைந்திருக்கலாம்.  இது  ஆய்வுக்குரியது.

இதற்கு(சித்தன்)  முன்பு யாம் தந்த சொல்லாய்வு வேறென்பதை பழைய இடுகைகளில் கண்டுகொள்க.  No harm toying with this connection.  நிற்க:

சிதடன் - சிதடி  என்ற சொல் சித் என்பதில்  தோன்றீயது என்பதற்கு விளக்கம் தேவையில்லை.  இதற்கு, முட்டாள், பைத்தியக்காரன் .என்றேல்லாம்  பொருள் உண்டு. "புத்தி சிதறிப் போனவன்(/ள் )" என்று கொள்க.  சிதடு  என்பது அறியாதவனை.

சிதடி என்றொரு பூச்சியும் உண்டு.

கந்தைக்கு (கிழிசல் பழந்துணி / ஆடை) யை   "சிதர்வை " எனறு சொல்வர்.

சிதவல் - கிழிந்த துண்டுத் துணி,  வெட்டுத் துண்டு,   தேரில் உள்ள கொடித்துணி,  புரையோடிய புண்,  மட்பாண்ட உடைசல்  .

இவற்றின் கயிறுபோன்ற தொடர்பினைக் கண்டு மகிழவும். 

சிதல்

மண்ணின்  ஈரத்தில் தன்  திண்மை  இழந்து  மெதுவாகிவிட்ட மரக் கட்டைகள்
கரையானுக்கு மிகவும் பிடித்தவை.   நாம் குளம்பிக்கு (காபிக்கு) முறுக்கைக் கடித்துக்கொள்வதுபோல் தின்னத்  தொடங்கி  விடுகின்றன.

கரையான் மரத்தை அரிக்காவிட்டாலும் நாளடைவில் அந்த மரக் கட்டைகள் சிதைந்துதான்   போகும்.  கரையான் அந்தச் சிதைவை விரைவுப் படுத்துகிறது என்கிறார்கள்.

கரையானுக்குச்  சிதல்  என்றும் சொல்வர் . 

இப்போது சிதை(தல் ) என்ற சொல்லுக்கும் சிதல்  என்பதற்கும் உள்ள தொடர்பினை ஆய்வோம்.

(சித்)  >  (சிது ) > சிதை .         : (சிது ) + ஐ . 
(சித் )  > (சிது )  > சிதல்          : (சிது ) +  அல் .

சிதை என்பதன் "ஐ"  வினைச்சொல் ஆக்க விகுதி.

சிதல்   என்பதன்  "அல் "  தொழிற்பெயர் (  வினை பெயராவதற்குப்) பயன்படும் விகுதி.

மனிதன் குகைகளில் வாழ்ந்து திரிந்த ஆக்க அல்லது ஆதி காலத்தில் அடிச்சொல் "சித் " என்று இருந்திருக்கும். இது ஆய்வில் மீட்டுருவாக்கம்.. 

வெள்ளி, 25 ஜூலை, 2014

கீதா சாரம்

எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது;
எது  நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது,
எது  நடக்குமோ அது நல்லதாகவே நடக்கும்

உனக்கு என்னாயிற்று?
எதன்பொருட்டு  நீ அழுகிறாய்?
நீ   என்ன  கொண்டு வந்தாய்?---
அதை நீ இழப்பதற்கு!

நீ எதைப் படைத்தாய்?---
அது வீணாவதற்கு !

நீ எதை எடுத்துக்கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது !
நீ  எதைக் கொடுத்தாயோ
அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது!

எது  எனதாக உள்ளதோ அது நேற்று
வேறொருவனுடையதாக இருந்தது!
மறு நாள் அது வேறொருவனுடையதாகும் !
இந்த மாற்றமே உலக நியதி !

பகவத் கீதை 

வியாழன், 24 ஜூலை, 2014

திறை பெற்றுத் திரும்பிவிடு

முன்  இடுகையின் தொடர்ச்சி

http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_24.html

மெய் பனி கூரா  அணங்கு எனப் பராவலின்
பலிகொண்டு பெயரும் பாசம்   போல
திறைகொண்டு  பெயர்தி!  வாழ்க நின் ஊழி !
உரவரும் மடவரும்  அறிவுதெரிந்   தெண்ணி 
அறிந்தனை !  அருளாய்   ஆயின்
யார் இவண் நெடுந்தகை ?  வழுமோரே!
.................. ...................................
பொங்கு பிசிர்  நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்
மடங்கல் தீயின் அனையை
சினம்கெழு குரிசில் ! நின் உடற்றிசினோர்க்கே !  -
===================================================================
மெய் பனி கூரா  -   உடம்பில் பனி படாத;
அணங்கு  - தேவதை;        பராவலின்   கும்பிடுதலின்  போது நடப்பதுபோல   
பலி கொண்டு -  இடப்படும் பலியைப் பெற்றுக்கொண்டு; 
பெயரும்  -   திரும்பும் 
பாசம் போல - இயல்பு போல  (மனப் பிணைப்பைப் போல)   
பலி பூசை செய்வோனுக்கும் தேவதைக்கும்  இடையில்  ஒரு பாசம் ஏற்பட்டுவிடும் என்கிறார் புலவர்.
தேவதைக்குப்  பனி  படாத  உடல்,  பூசை போடுகிறவனுடன் பாசப் பிணைப்பு.... (இது மந்திரவாதிகளைக் கேட்டறிய வேண்டியது.);
திறை கொண்டு  - கப்பத்தை ஏற்றுக்கொண்டு 
பெயர்தி -  திரும்பி வந்துவிடு.
வாழ்க நின் ஊழி  - உன் ஆட்சியும் உன் பின்னோர் ஆட்சியும் வாழ்க  
உரவர் -  திறனுடையோர்'
மடவரும் -   பெண்டிரும் அல்லது திறனிலாரும்;
அறிவுதெரிந்   தெண்ணி    -  நன்கு வேறுபாடு கண்டு  சிந்தித்து 

அறிந்தனை -  இனம் புரிந்துகொண்டாய் .

அருளாய் ஆயின் -  நீ அருள் செய்யவில்லை   என்றால்;

யார் இவண் நெடுந்தகை  -   பெருந்தன்மை உடையோன்   இங்கு /யார்?;

வழுமோரே  -     நாம்  யாவரும்   வாழ்வோரே ஆவோம்

பொங்கு பிசிர்  =  மிக்க மழை 
நுடக்கிய -  பெய்து  (முடக்கிய பின் )

 செஞ்சுடர் நிகழ்வின்  -   கதிரவன்  ;வருங்கால்  

மடங்கல் தீயின் அனையை  -  யுகத் தீயினைப் போன்றவன் நீ

இரும்பொறையின் வெற்றியுடன், ஓர்  ஊழி  முடிந்து இன்னொன்று  தொடங்குகிறது என்கிறார் புலவர்.   யாவும் முடக்கிய  பெரு மழை. கதிரவன் தோன்றியகாலை பெருந்தீ முதலிய இது குறித்தது என்க   .

சினம் கெழு குரிசில் --- ‍ வீறு கொண்ட தலைவனே  நீ !

உடற்றிசினினோர்க்கே ‍--  உனக்கு இந்த சீண்டுதலைத் தந்தவர்களுக்குத்தாம்.

அரிசில் கிழார் மாந்திரீகம் கற்றவர்போலும்.

http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_24.html

Edited. Will review.

வென்றபின் பகைவனுக்கு அருள்செய்

எது தமிழர் பண்பாடு என்பதை பண்டைத் தமிழ் நூல்கள் மிக்கத் தெளிவுடன் விளம்புகின்றன. "யாதும் ஊரே" என்பது புற நானூறு காட்டும் பண்பாடு.
போரில் பெருவெற்றி பெற்ற பெருஞ்சேரல் இரும்பொறையைப் புகழ்ந்து பாடிய புலவர்கோமான் அரிசில் கிழாரும் ஒரு தமிழன் பண்பாட்டு முத்தினை  எடுத்து அறிவுறுத்தினார். அது யாதென்பதை நாம் காண்போம்.

இரும்பொறைக்கும் அவனுடன் போர் நிகழ்த்திய மற்ற மன்னர்களுக்கும் அப்போர் நடைபெறுமுன்னரே கிழார்  சென்று தணிவுரைகள் பகர்ந்தார்.  யாரும் கேட்கவில்லை.சண்டையில் மற்றவர்கள் தோற்றனர். கிழார் இரும்பொறையைப் புகழ்ந்து பத்துப் பாடல்கள் பாடினார். "மன்னா! உன்னை எதிர்த்து  நின்ற மன்னர்களிடம் எவ்வளவோ சொன்னேனே!  என் சொல் கேளாது போகவே, சான்றோர் வாயிலாகவும் சொன்னேனே!  அதையும் கேட்கவில்லையே. தோற்று முகவரி இழந்தவர்கள் ஆகிவிட்டனர். அவர்கள் நிலைக்கு இரங்குகிறேன்.

போகட்டும் மன்னா! அவர்களிடம் அருள் கொண்டு,  கொடுக்கும் கப்பத்தைப் பெற்றுக்கொண்டு நாடுகளை அவர்களிடமே கொடுத்துவிடு!" என்றார். " அதுவன்றோ நெடுந்தகைமை!! அதற்கு உரிய  தகைமை உனக்கன்றோ இங்கு உள்ளது!  அருள்வாய்!"  என்றார்.


"இடப்0படும்  பலிப்பொருளைப் பெற்றுக்கொண்டு, வணங்கி நின்றோனை விட்டுச் செல்லும் தேவதை போல, அருள்செய்வாயா"  என்றார்.

எதிரிகளையும் மன்னிப்பதே தமிழர் பண்பாடும் அரசியல் நாகரிகமும் ஆகும்.

இந்த முத்துப் பொதிந்த அந்த வரிகளை  அடுத்த இடுகையில் தருவேன்.

புதன், 23 ஜூலை, 2014

The poetic excellence of Arisil KizAr


துறை: செந்தறைப் பாடாண்பாட்டு
செந்தூக்கு.continued from previous post (click)

http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_39.html


உரவோர்  எண்ணினும்  மடவோர்  எண்ணினும்
பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்குப்
பிறருவமம் ஆகா ஒருபெரு வேந்தே!
(மூன்று வரிகள் விடப்பட்டுள்ளன,
 ஓர் அடி சிதைவு)
'''''''''''''''''''''
மருதம் சான்ற மலர்தலை விளைவயல்
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்

குறும்பல் யாணர்க் குரவை அயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பின்
புகார்ச் செல்வ! பூழியர் மெய்ம்மறை!

கழைவிரிந்து எழுதரு மழைதவழ் நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொரு ந! கொடித்தேர்ப் பொறைய, நின்

வளனும் ஆண்மையும் கைவண்மையும்
மாந்தர் அளவு இறந்தன எனப் பல் நாள்
யான்சென் றுரைப்பவும் தேறார்;  பிறவும்

சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்? என‌

ஆங்கும் மதி மருளக் காண்குவல்;

யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே!

அரும்பொருள் :  முன் எழுதிய விளக்கத்துடன் இணைத்துப் படிக்கவும் )


 உரவோர் = வலிமை பொருந்திய உள நிலையும் சிந்தனையும் உள்ள மேலோர்.
மடவோர் = பெண்டிர் ;
வாயின்   அல்லது   -  தேடி  வரும்    இடமல்லது '
\
மருதம் -  உழவு நிலப் பகுதி ;
மலர் தலை =  அழகிய இடம்
விளைவயல் =    விளையும் வயல்

செய் =  ஈர  நிலம் ;  உள் = (நிலத்து) உள்.
ஒய்யும் -  ஒலி   செய்து விரட்டும் 
பாசிழை -   அணிகலன்கள்;
குறும்பல் =  சிறு பற்கள் (புன்னகை)
யாணர்  =  அழகு;   -குரவை  : ஒரு கூத்து.
புன்னகை  அழகுடன்  ஆடும் குரவைக் கூத்து; அயரும்  =  முயன்று ஆடும். 

காவிரி  = (ஆறு.)  மண்டிய - நிறைந்த;
சேய் =  செம்மை ; விரி - விரிந்து காண்கின்ற.\\வனப்பு - அழகு;
புகா அர்ச் செல்வ  --  புகார் நகருடைய செல்வனே 

பூழியர் =  சேரர்   மெய்ம்  மறை =  இது நாள் வரை மறைவாய் இருந்து இப்போது தன்னைக் காட்டிக்கொண்டவனே !   (விஸ்வ ரூபனே  )  உண்மை மறைபொருளே 

கழை - மூங்கில்   எழுதரு மழை  -  எழும் மழை முகில்கள்.
நெடுங்கோடு =  நெடு மலை(த்  தொடர்)

கை வண்மை -  கொடை  தாராளம் ஆனது;

மாந்தர்  அளவு இறந்தன -  மனிதர்கள் அளவு அல்லது வரைகோட்டினைக் கடந்துவிட்டன '

தேறார்  =  தெளிய மாட்டார்.

தெளிகுவர் கொல் =  புரிந்து கொள்வரோ?

அடுத்த  இடுகையில் தொடர்கிறது.

Previous:
http://sivamaalaa.blogspot.com/2014/07/blog-post_39.html












சேரனிடம் மோதாதீர்!................

பெரிய அறிவாளிகள் ஆகட்டும், அரிய அழகுடைய அணங்குகளாகட்டும், யார்  உன்னை எண்ணினாலும்,   அவர்களுக்கு நீதான் இடமாகுவாய், அன்றி எக்காலத்தும் எவ்விடத்தும் அவர்களில்  எவருமே! உனக்கு உவமை ஆகமாட்டார்கள். அத்தகைய ஈடற்ற ஒரு பெருவேந்தனே....

பெருஞ்சேரல் இரும்பொறையை இவ்வாறு பாராட்டுகிறார் அரிசில் கிழார்.

மருத நிலத்திலே, பூத்துக் குலுங்கும் வயல்களில் தங்கி நிற்கும் நீரிலே, வந்திறங்கும் நாரைகளை ஒலி எழுப்பி விரட்டும் மகளிர் பகலும் இரவும் உனக்காகத் தங்கள் அணிகளைக் கழட்டாமல் காத்துக் கிடக்கிறார்கள். கண்டு காதலைத் தெரிவிக்க வேண்டுமென்றால், உன் போன்ற வெற்றி வீரனையல்லவோ எதிர்கொள்ள வேண்டும்?

மண்டிவரும் காவிரி நீரின் செவ்விய விரிப்புக்கு உடையோனாகிய புகார்ச் செல்வனே!

மழை தவழும் கொல்லி மலைப்  போர்வீரா!

கொடிகட்டிய தேரையுடைய பொறையனே.......

நீ மனிதனின் அளவுகளைக் கடந்துவிட்ட செயற்கரிய செய்தோன்.

அப்போதே அந்தப் பகை மன்னர்களிடம் சொன்னேனே!  அவர்களுக்குதாம் அறிவில் தெளிவு இல்லை.

பிற சான்றோர் சொன்னால் கேட்பார்கள் என்று நினைத்தேன். அங்கேயும் அவர்கள் மதி மருண்டுவிட்டனர்.

உன் கையில் தவிடுபொடி ஆவதை அவர்கள் தவிர்த்திருக்கலாம்.

எங்கே கேட்டார்கள்? அவர்கள் நிலைக்கு வருந்துகிறேன்,.........................

இனி அரிசில் கிழாரின் இரும்பொறை பற்றிய பாடல் வரிகளையும் பொருளையும் கண்டு மகிழ்வோம்.  தொடரும்.


விலகலில் விளங்கும் வித்தியாசம்.


உங்களைப் பார்த்து யாராவது  " விலகு(ங்கள்)" என்று கேட்டுக்கொண்டால், அதற்கு நீங்களும் இசைந்து அபப்படியே நடந்துகொண்டால் நீங்கள் முன்னிருந்த இடம் வேறு. இப்போது உள்ள இடம் வேறு. காரணம் விலகி விட்டீர்கள்.

விலகலில் பல விதம். பாதையிலிருந்து  விலகல், வாழ்க்கை ஒப்பந்தத்திலிருந்து விலகல், பதவியிலிருந்து விலகல் என எத்தனையோ!


விலகு என்பதன் அடிச்சொல் வில் என்பது.

விற்றல் என்ற சொல்லும் இதிலிருந்துதான்  வருகிறது. விற்கும் போது, பணம் உங்களிடமிருந்து விலகி விற்போனிடம் போகிறது. பொருள் அவனிடமிருந்து விலகி உங்களிடம் வருகிறது.

வில்  ‍> வில் + கு  > வில் + அ + கு > விலகு.

கு என்பது வினையாக்க விகுதி.  அ உடம்படுத்தும் இடைத்தோன்றல். சுட்டெழுத்தாகிய அகரம் இடைத்தோன்றியது மிகவும் பொருத்தமே.

வில் >  விலை.
வில் > விற்றல்.

இப்போது வித்தியாசம் காண்போம்.

வில் > விற்றி + ஆயம் > விற்றியாயம் > வித்தியாசம்.

ஆயம் என்பது  "ஆயது,  ஆவது"  என்பது போன்றது. ஆதல் அடிப்படை.

விற்றி வித்தியாவது  ற்றி < த்தி பெருவரவான திரிபு.
ய > ச திரிபு எத்தனையோ சொற்களில்.

வில் + தி = விற்றி > வித்தி.

வில்+ தல் + விற்றல் போல.   ல்+த.

வித்தியாசம் எம்மொழிச் சொல் என்பதன்று இவ்விளக்கம்.  அதன் அடி "வில்" என்ற சொல் ஆகும் என்பதுதான்.

திங்கள், 21 ஜூலை, 2014

அரிசில் கிழார் & பெருஞ்சேரல் இரும்பொறை

இப்போது பதிற்றுப் பத்திலிருந்து ஒரு பதிகப் பாடலைப் பாடி இன்புறுவோம்.

பொய்யில் செல்வக் கடுங்கோவுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்,
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசை
பல் வேல் தானை அதியமானோடு
இரு பெரு வேந்தரையும் உடன் நிலை வென்று
முரசும் கொடையும் கலனும் கொண்டு
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு
துகள் நீர் மகளிர் இரங்க, துப்பு அறுத்து,
தகடூர் எறிந்து, நொச்சி தந்து எய்திய‌
அருந்திறன் ஒள் இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை
மறு இல் வாய்மொழி அரிசில் கிழார்
பாடினார் பத்துப் பாட்டு.

பொருள் :

பொய்யில்  செல்வம் =  மிகப் பெருஞ் செல்வம் (என்ப.). எடுக்க எடுக்கத்  தீர்தல்  இல்லாத செல்வம்.   பொய்யில் :  பொய்+இல்.. பொய்படாத
வேளாவிக் கோமான். --- வேள்  ஆவிக்கோமான்.  .இதில், வேள் = குறுநில மன்னர்   ஆவி = வலிமை;  கோமான் =  மன்னன்.  பதுமன் என்பது அவ்வேளின் பெயர்.  தேவி -  அந்த  அரசன்  மனைவி

அதிகமானோடு பாண்டியனையும் சோழனையும் வென்று புகழ் படைத்தவன்
சேரன் இரும்பொறை.

கொல்லிக் கூற்றம் : கொல்லியாகிய நாட்டுப் பகுதி,

நீர் கூர் =  நீர் வளமிக்க.  மீ மிசை ‍: மலை மேல்.

பல் வேல் தானை =  வேலும் (பிறவும்) ஆகிய போர்க்கருவிகள் பல உடைய தானை.  "வில் பயில் இறும்பின் தகடூர் நூறி"  என வேறோர் இடத்தில் வருவதால் வேல் மட்டுமின்றி வில்லோடு   பிறவும் உள்ளமை அறிக.
அதிகமான்: ‍   ஓர் குறு நில மன்னன்.
வேந்தர் ‍ =  முடியுடை சோழ பாண்டியர்

உடன் நிலை வென்று --   உடன் நின்று பொருதலினால்   வெற்றி  கொண்டு;
கலன் -  கலன்கள் பல;  படைக்கலன்,  அணிகலன், பொன்னும் மணியும் என.   தகடூர் வெற்றி அடுத்துக்கூறப்படுதலால்  படைக்கலன் என்று கொள்க.

உரை சால் சிறப்பு -   எடுத்துச் சொல்லத் தக்க நிறைவான சிறப்பு.  புலவர் பாடத்தக்க சிறப்பு.
அடுகளம்  ‍  போர்க்களம்
வேட்டு ‍ வேள்வி நடாத்தி.  " வேள்வி  வேட்டனை உயர்ந்தோர் உவப்ப "  என்று அரிசில் கிழார்  பாடலில் வருவதால்  இம் மன்னன் வேள்வி  இயற்றியது  அறிக .(விரும்பி  எனினும் ஆம். போரிடுதலை மேற்கொண்டு என்று இணைத்துக்கொள்க.)
துகள் தீர் = குற்றமற்ற.
துப்பு ‍அறுத்து  = (வேள்வியினால் ) தன் வலிமையையும் மேன்மையையும்
ஒருவாறு மட்டுப்படுத்தித் தன்னடக்கம் செய்துகொண்டு;  அல்லது பிற மன்னரை அடக்கி எனினும் ஆம்.

தகடூர் எறிந்து = தகடூர் வென்று.

நொச்சி  =  (கோட்டை தற்காத்தலின் போது அணியப்படும் மாலை)
தந்து எய்திய = ) கோட்டையை) நன்கு தற்காத்தலைச் செய்த‌
அருந்திறல் ‍ பெருந்திறன்.
ஒள் = ஒளி பொருந்திய. இசை = புகழ்.  கொடைத் திறனைப் புலவர் பாடுதலின் காரணமாக உண்டாகும் புகழ்
மறுவில் = குற்றமற்ற. மாசிலாத.
வாய்மொழி =  சொல் மேன்மை (உடைய)
அரிசில் கிழார் = (இப்பத்துப் பாடிய சங்கப் புலவர்).

இப்பதிகம் இந்தப்பத்துப் பாடல்களின் வரலாறு பதிந்து உரைப்பதனால் ‍"பதிகம்"
எனப்பட்டது. வேறுவகைப் பதிகங்களை ஈண்டு கவனத்தில் கொள்ளவில்லை. பதிதல் - பொதிதல்  சிறப்புடைய பொருளை உள்வைத்தல்   பதி + கு+ அம்  = பதிகம். பதிகுதல் = பதிதல்.

இப் பதிகம் இப்போர் வெற்றி வரலாற்றைச் சுருக்கிக் கூறியது காண்க.

To discover your personal God

Any  mode of worship that does not permit inquiry
To discover your God for yourself,
Does not foster the development
Of human intellect
To make you a complete person!
One should not be a prisoner
Bound by the thoughts and restrictions
Imposed by those others around
Whether now living or dead  and gone!

---  Sivamala.


The main note of Hinduism is one of respect and good will  for all other creeds.

DR  S Radhakrishnan,  The Hindu View of Life,  p 37.

ஞாயிறு, 20 ஜூலை, 2014

ககரம் காணாமற் போவது

இணையற்ற  ஆசிரியர் தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்பிருந்தும் சொற்கள் திரிந்துவந்துள்ளன.  அவர்காலத்தில்  பிற ஆசிரியரும் மாணவரும் அறிந்துகொள்ள விரும்பிய சொற்கள் சிலவற்றுக்கு அவர் விளக்க நூற்பாக்கள் எழுதினார் என்பதை அவர் நூலில் அறிந்துகொள்ளலாம்.

அவர் விளக்கியவற்றுள் ஒன்று:  அகம் +கை  என்ற இரு சொற்கள் புணர்ந்தால்   எப்படி வருமென்பது.

அகம் என்  கிளவிக்குக் கைமுன் வரினே 
முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும் 
வரை நிலை இன்றே ஆசிரியர்க்க 
மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான 
(தொல்  எழுத்   315)

ஒழிய -  தவிர;   முன்னவை -  (கை  என்னும் சொல்லுக்கு )  முன்னின்றவை.

அகம் +  கை =  அங்கை  என்று வரும். 

இங்ஙனமின்றி,  அகங்கை என்றும் வரும்.

மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான  : 

ஙகர  ஒற்றாகிய மெல்லெழுத்து  ஈரிடத்தும் தோன்றும் என்பது பொருள்.

அங்கை என்பதில் ககரம்  காணாமற் போயிற்று என்பதறிக


ஆசிரியர்க்க  என்பது அச்சுப் படியில்  உள்ளது. ஆசிரியர்க்கு என்பது போலும்..

சனி, 19 ஜூலை, 2014

அச்சாரம்

அச்சாரம்  என்ற பேச்சு வழக்குச் சொல்லை இப்போது காண்போம்.

இதன் முந்து வடிவம் அச்சகாரம் என்பது ;  ஆகையால் அதனை முதலில் ஆய்தல் தக்கது.

ஒரு மாட்டை விலை பேசுகிறவன், பேசிய விலையில் இணக்கம் உண்டானபின்  நாளை காசோடு வருவேன் என்பான். அவன் நாளை வருவானோ மாட்டானோ? அ வன் கொஞ்சம் கூடுதலாகத் தருகிறேன் என்று சொன்னதை நம்பி, வாங்குவோம் என்று தெரிவித்த வேறு  ந(ண்)பர்களிடம் மாட்டுக்காரன் ஏதும் வாக்குக் கொடுக்காத நிலையில் அவன் வரவில்லை என்றால் என்னாவது?  அ வன் அப்பால் நகர்ந்த பின் இன்னொருவன் வந்து சற்று கூடின விலைக்குக் கேட்டால்,  முதல் வந்து பேசியவன் நிலை என்னவாகும்?  வணிகத்தில் இத்தகைய குழப்பங்க்கள் ஏற்படாமல் மாட்டுக்காரனும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்; பேசியவனும் மாடு எனது என்ற நம்பிக்கையுடன் உறங்கவேண்டும். சண்டை ஏற்படாமலும் புரிந்துணர்வோடும் வணிகம் ஒப்புடன் நடைபெறுதல் இன்றியமையாதது.

இதில் உள்ள ஒருவித அச்சத்தின் காரணமாக, அச்சகாரம் கொடுத்தலும் பெறுதலும் ஏற்படலாயிற்று.   இதையே முன் நிற்கும் "அச்ச(ம்)" என்ற சொல் காட்டுகிறது.

காரம் என்பது பொற்காசுகளுக்கு அல்லது பொன்னுக்கு உள்ள பெயர்களில் ஒன்று. இந்த அச்சம் தவிர்த்தல் பொருட்டு, வாங்குபவன் விற்பவனிடம்  நிறுநயம்  செய்த தொகையில் ஒரு பகுதி  பொற்காசுகளைக் கொடுத்தான்.

இது அச்சகாரம் எனப்பட்டது. பின்  அச்சாரம் ஆயிற்று. (மரூஉ ).

பொன்னுக்குக்  "காரம் " எனும் பெயர் ஏற்பட்டது,  அணிவது தவிர  பொன் சேமிப்புகளை எங்காவது வீட்டுக்குள் புதைத்தோ வேறு முறைகளில் மறைத்தோ வைத்ததனால்தான்.  கரத்தல் - மறைத்துவைத்தல். கர+ அம் =  காரம்;  முதனிலை  திரிந்த தொழிற்பெயர்.  க > கா  என்று   நீண்டது. ரகரத்தில் உள்ள அகரம்  கெட்டது,  அம்  விகுதி  பெற்றது,    புதைத்து வைத்ததனால் "புதையல்"  என்ற சொல் வந்தது போன்றே, மறைத்து வைத்தது "காரம்"  ஆனது.

Singapore : சிவன் சிலை நிலைக்குமா??

புகழ்ப்பெற்ற போத்தம்பா சீர்பெறு கோயில் 
அகழ்ந்துடைத் தாகும் புதிதாய்,  ----  நிகழ்வில்  
பளிங்கிற் சிவன்மேல்;  இலங்கிஇனி  நிற்கக் 
கலங்கும் உளங்கள் பல.

சிங்கை நகரில் உள்ள பொத்தோங் பாசீர் கோவிலில் முகப்பு மேல்ததளத்தில் 
பளிங்கினாலான சிவன் சிலை இருக்கின்றது,  புத்தாக்கம் பெறும் கோவிலில் இதற்கு இடமிருக்காது .என்று கேள்வி. உடைபடாமல் அகற்றி  மறு நிறுவல் செய்ய  இயலாது  என்று சொல்லப்படுகிறது.  பாவம்  சிவன் . வட இந்திய பாணியில் அமைந்த சிவன்   என்ன  ஆகுமோ. அதுபற்றிய சில  வரிகள் மேலே. 

  நிகழ்வில் =  நிகழ்காலத்தில் ; இப்போது.

அகழ்ந்துடைத் தாகும்  =   அகழ்ந்து  உடைத்து   ஆகும்.

புதிதாய்  : ( மீண்டும் எடுத்துக் கட்டி ,  குடுமுழுக்கு  (மகா கும்பாபிஷேகம் )  செய்ய  உள்ளனர் )


பணம்பண்ணும் வித்தை

பணம்பண்ணும் வித்தைபுகழ்  பரப்பி விட்டோன் 
பண்பு நலம்  என்பதிலோ     பாதா   ளத்தில்  
குணம் என்னும்  குன்றுண்டு தொலைவில்!  இன்றோ 
கூவுவன எல்லாமும் இசைப்ப தில்லை.

வெள்ளி, 18 ஜூலை, 2014

The Sivan at Kedar Nath

ஆதி சங்கரர் அமைகல் உடையது
கெடார் நாதநகர்

ஓதி எங்க‌ணும் பரந்த ஒளிச்சிவம்
விடார் மூதறிஞர்;

யாது பொங்கிமந் தாகினிப் புனல்கரை
அடாக் கீழுதலால்

மோதிச் சாய்கவே முனைந்தே  அரன்அடி
தொடார் அமைந்திலரே.

=================================================================

குறிப்புகள்:

அமை கல்  =  ஆதி சங்கரப் பெருமானின் ஆவி/ உடல் உள்ளமைந்த கல், நினைவுக் கட்டடம்;

கெடார் நாத நகர் = கெடார் நாத் கோயில் உள்ள இடம். நகர் என்றது உயர்வு நவிற்சி;

எங்கணும் பரந்த ஒளிச் சிவம் = எங்கும் உள்ள ஒளியாகிய சிவம்;

ஓதி .... விடார் = வழிபடுதல் விடமாட்டார் அறிந்தோர்;

யாது பொங்கி ‍==  எது எது பொங்கினாலும், பனி, மழை, வெள்ளம், என எது மிகுந்தாலும்;

மந்தாகினி ஆற்றின் கரை,

புனல் அடாக் கீழுதலால் = வெள்ளம்  கொடிய ஆற்று உடைப்பால்;

கரை மோதிச் சாய்க ‍-- கரையே மட்டமாகிவிட்டாலும்;

பற்றாளர் அடி தொடாமல் அமைந்திலர் ‍---- பற்றர் அவனடி வணங்காமல் இரார் என்பது

தாதிமார்

தாதி என்னும் சொல் தாளிகைகளில் வருவதுதான்.  இது தமிழா என்போரும் உண்டு.

நல்ல தமிழே. இதன் அடிச்சொல் "தாய்" என்ற  கவின் சொல்.   கவின் -  that which attracts or charms you!!  I will explain this later in another post.

சொல்லின் நடுவில் ஒரு யகர ஒற்று வந்தால், பெரும்பாலும் அது மறைந்து சொல் சற்றே உருமாறும். முதலெழுத்து குறிலாயினும்  நெடிலாயினும் இது நடைபெறும்.

எடுத்துக்காட்டு:

செய்தி  >  சேதி   (யகர மெய் மறைவு; முதலெழுத்து நீட்சி )
வேய்ந்தோன் >   வேந்தன் .  (யகர மெய் மறைவு .  ஒன்  விகுதிக்குப் பதில் அன் , இரண்டும் இணையானவை)
வேய்வு  >  வேவு .(யகர மெய் மறைவு.)
உய்த்தி  > உத்தி.  உய்த்துணர்கை

வேய்தல் என்றால் மேலே இட்டுக்கொள்ளுதல் , அணிதல்,  வேடம்  அல்லது மாறுவேடம் போட்டுக்கொள்ளுதல் ,  கூரை வேய்தல் )

மறைமலை அடிகள் தந்த எடுத்துக்காட்டு:

வேய் >  வேய் + து  + அம் =  வேய்தம் >  வேதம்.  (யகர மெய் மறைவு)

This is therefore well established pattern that is a rule in word formation.

தாய்  >  தாய்தி  > தாதி.

தாதி ,  தாதிமை .  தாதியர்,  தாதிமார்.

தாய்போல் கவனிப்போர் என்பது சொல்லமைப்புப் பொருள்.

It is perfectly  OK to represent this word formation as:

தாய் >  தா (கடைக்குறை ) >  தா+தி ( தி விகுதி) > தாதி.