திங்கள், 20 ஜூலை, 2015

Speech Tamil and some considerations.

குமரி கண்டத்துத் தமிழர் எங்ஙனம் தமிழைப் பேசினரோ,  நம் எழுத்துத் தமிழ் அங்ஙனம் அமையப்பெற்றிருந்தாலும் நம்  பேச்சுத் தமிழ் அப்படி இல்லை. ஒருவேளை இற்றைத் தமிழர் குமரிக்குப் புறத்தே உள்ள நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்களின்  வழியினரோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலகின் பல மொழிகளில் பேச்சும் எழுத்தும் ஒரு மாதிரியாய் இருக்க, தமிழில் மட்டும் ஏன் பேச்சு மொழி வேறுபடுகிறது? ஆறு, மலை, தொலைவு  இவைகளாற்  பிரிவுண்டு கிடந்ததனால் இங்ஙனம் வேறுபாடுகள் முளைத்துவிட்டன என்னலாம்.இது குமரிக்குப் புறத்து வாழ்ந்தோருக்கும் பொருந்திவரும் காரணமேயாகும்.

கடல்கோளில் பாண்டியனும் சிலருமே பிழைத்தனர் என்பர். தொன்னுல்கள் பலவும் அழிந்தன. அவற்றுள் அடங்கிய பொருள்களின் சுருக்கம் தேவைப்பட்டதனாலேயே தொன்மை காக்க தொல்காப்பியம் இயற்றப்பட்டது  என்பது பொருந்திவரும் காரணமாகும்.  தொல்+காப்பு+ இயம் என்பதும் பொருத்தமான பெயர்.  வரலாற்றைச் சுட்டுகிறது.

இழவு என்பதை எழவு, எளவு என்பதுதான் பேச்சுத் தமிழ். குமரித் தமிழர் இழவு என்றே பேசியிருப்பர். எளவு ஏதும் அவர்கள் அறியாததே.

இழவுஎன்பது இழ+ வு என்று பிரியும்.   இது இயல்பாய்ப் புணர்ந்த பகுதியும் விகுதியும் ஆம்.    ஆனால் உழவு என்பதை இப்படிப் பிரிக்க முடிவதில்லை.  உழ என்பது சொல்லின் பகுதியன்று.  உழு என்பதே பகுதி.  உழு+ வு = உழவு.  இதில் ழு  என்பதில் உள்ள உ கெட்டு (மறைந்து)  அதற்குப் பதிலாக ஓர்  அ தோன்றியது. ஆகவே கெடுதலும் தோன்றலும் ஆகிய விகாரங்கள் அல்லது திரிபுகள் இதில் உள்ளன. விழவு (விழா) என்ற சொல்லிலோ,  ஐகாரம் கெட்டு அகரம் தோன்றியது.  விழை> (விழ்+ ஐ )>  (விழ்+அ) > விழ+வு, ( விகுதி ) >   விழவு என்று காட்டலும்  ஆம் .  எனினும் விழ் என்பது பகுதியன்று. அது தெளிவித்தற்பொருட்டுக் காட்டப்பெறும் புனைப்பகுதியாகும்.
இதை விழை> விழைவு> விழவு   ( ஐகாரக் குறுக்கம்) என்றும் உரைக்கலாம்.  விழா என்பதிலும் விழை> விழா என்க.  ஆ என்பது விகுதி.  கல்+ ஆ = கலா. (கற்றல் கருத்து இது).  கல்> கலை.  

நல்லன கற்றல்போல் தீயனவும் கற்றுக்கொள்வது காண்கிறோம்.   கல்+ இ = கால்+இ =  காலி.  கல் என்ற வினைப்பகுதி,  முதனிலை நீண்டு கால் ஆகி, இகர விகுதி பெற்றுக் காலி ஆயிற்று. தீயன கற்றுக்கொண்டவன் என்பது.
இதையும் காலாடி என்பதையும்  "காலாடு போழ்தில்" என்ற நாலடி மூலம்,  விளக்கலாம்.  எப்படிப் பார்த்தாலும் இவை தமிழ்ச்சொற்களே. 

வெள்ளி, 17 ஜூலை, 2015

Tribal girl attracts politicians who lost balance!

அதிகாரி ஏனை அரசியல் மேலோர்
மதியோ(டு)  உடுக்கள்போல் கூடிப் ---- பதிவானார்
குற்றக் குறிப்பேட்டில் கோதில் சிறுமிதனைப்
பற்றிமா   னம்கெடவே பாய்ந்து

(மதியோடும் உடுக்கள்போல் என்பது வஞ்சப் புகழ்ச்சி. கூடிப் பின் கெடுசெயலில் ஈடுபட்டதனால்.)


http://www.thehindu.com/news/national/other-states/minor-tribal-girl-molested-in-chhattisgarh-politicians-held/article7434698.ece?ref=sliderNews.

Minor tribal girl molested, politicians held


This happens in a place where so many things await their honorable attention and action......

"prohitham" word formation.

புரோகிதர்   என்ற  சொல்  தமிழென்று தமிழாசிரியர் ஒருப்படார்.

எனினும் இது மந்திரங்கள் மூலம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதாகக் கருதப் பட்டோருக்கு  அதன் காரணமாக ஏற்பட்ட பெயரென்று  ஆய்வாளர் கருதியுள்ளனர்.  1

 காப்பு  என்று பொருள்படும் தமிழ் மூலச்சொல் " புர" (புரத்தல்)  என்பதாம்.  இதிலிருந்து   ( புர+ ஊக(ம்)+ இது+அம் = புரோகிதம் ஆகும். " புரத்தல் அல்லது காத்தல் என்னும்  ஊகம்"  ஏற்படுத்தித்  தரும் வினை."

மந்திரங்கள்  எதிரான செயல்களையும் மாறுபடும் எதிர் மந்திரங்களையும் தடுப்பனவாக  நம்புவர் அல்லது ஊகம் செய்வர்.  (presumed to protect the person for whom the priest acts.)

இச்சொல்லும் தமிழ் அடிச்சொல்லிலிருந்து திரிக்கப்பட்டதென்றே   இதனால் அறிகிறோம்.ஊ பின் ஓ ஆகிற்று.

சமஸ்கிருதப் பண்டிதர்  கூறுவது --
purohita placed foremost or in front , charged , commissioned , appointed ; m. one holding a charge or commission

இதில் புரோ என்பது "முன்"   என்று பொருள்படும் என்பர்.  hita :  placed.
( நிறுத்தப் பட்டது )  ( one appointed to handle (thus a priest)  )


நம் கருத்து:
ஹித  என்பது இ என்று தொடங்குவதால்  இது என்ற தமிழின் திரிபாக இருக்கலாம் .  இங்கு வைத்தல் என்னும் பொருளில் வருகிறது.  இது + அ . >  இத > ஹித .  இவற்றுடன் இடு (place)  என்பதை ஒப்பிடலாம்.  இடுதல் .   புரோ என்பது புற என்பதன் திரிபு.

புறத்தே இடப்படுவது அல்லது இடப்படுபவர் .

cf:  படி (தல் )  :  பதி(தல் ,)   ட - த .

அடிக்குறிப்பு
1 தொல்காப்பியத்துள் ஆரியக் கலப்பா ?  -  வித்துவான் ச குமாரசாமி ஆச்சார்யார்,  M .A.,  (1955-56)    செ . செல்வி 

This post has been edited.

செவ்வாய், 14 ஜூலை, 2015

MAS எண்ணாயிரவர் இழப்பர் வேலையை

எண்ணா  யிரவர்  இழப்பர் வேலையை
இரக்கத்திற்   குரியர் இவர்கள் அல்லரோ?
பன்னாட்   டுக்கும் பறந்து திரும்பிய
பணிசிற மலேசிய வானூர்  திகளே
இன்னா  ளிலும்இனி எந்நா  ளிலுமே
இயங்கும் பாதைகள் வறங்கூர் வளத்தினால்
குறைந்திடும்; அளவில் தொலைவில் என்றனர்.
இழப்பீடு என்பதே இருந்த போதிலும்
குழம்பி நிற்பவர் உழைப்பை இழந்தவர்!
ஊதியம் இன்றி  யாதுதான் செய்வர்.
மீண்டும் மலர்க   வாழ்வு!
தீண்டிய  துன்பம் யாண்டும் விலகவே.

http://says.com/my/news/more-than-8-000-people-will-be-losing-their-jobs-in-upcoming-mas-lay-off


புதுக் கவிதையாய் எழுத முற்பட்டு  ஆசிரியம்போல் ஆகிவிட்டது....படித்துக் கண்ணீரில்  பங்குகொள்ளுங்கள்.

ஞாயிறு, 12 ஜூலை, 2015

tamil word for nail cutter

நகம் என்பது தமிழன்று என்பாருளர், இச்சொல் தமிழிலும் வழங்குகிறது. சமஸ்கிருத அகரவரிசைகளிலும் உள்ளதாகும், உகிர் என்பது இதற்கான
தமிழ்ச்சொல் ஆகும்.

நகம் வெட்டும் கருவியை நகம்வெட்டி என்னலாம் முன் இதை நகவுளி என்று குறித்தனர் என்று தெரிகிறது. நகவுளியை பெரும்பாலும் மயிர்வினைஞர்களே வைத்திருந்தனர் என்று அறிகிறோம் நகம்வெட்டி நகவுளியினின்றும் வேறுபட்டது  போலும்  ---   அதாவது உருவிலும் வெட்டும் திறனிலும் .

நகங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வதிலும் திருமணம் ஏனைக் கொண்டாட்டங்களின் போது வண்ணம் பூசிக்கொள்வதிலும் பெண்கள் ஈடுபாடு உடையோர் ஆவர்.

நகுதல் - ஒளிவீசுதல் என்ற பொருளும் உள்ளது. நகு+அம் = நகம். வண்ணம் பூசப்பெற்ற உகிர். ஒளிவீசுவது. நகு+ ஐ = நகை என்பதும் காண்க. ஒளியுடைய பொன் அணிகலன்



நகுதல் -  ஒளிவீசுதலென்பதால் இதிலிருந்து பிறந்த "நகம்" முதல்முதல் பூசப்பெற்ற அல்லது வண்ணமூட்டப்பெற்ற  நகத்தையே குறித்து, பின்னர்  பொருள்விரிந்து பொதுவாய் அனைத்து நகங்களையும் குறித்தது. வண்ணமூட்டிய உகிரென்ற தன் சிறப்புப்பொருளை இழந்தே அதன் பொருட்பயன்பாடு விரிந்தது. நகுதல் - ஒளிவீசுதல் என்ற பொருளிலேயே "நக்கத்திரம்" (> நட்சத்திரம்) என்பதும் அமைந்துள்ளது கவனிக்கற்பாலது.


பல தமிழ்ச்சொற்கள் போல இச்சொல்லும் சமஸ்கிருதமுதல் இந்தோ ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் புகுந்து உலக சேவை செய்துகொண்டுள்ளது.  ஒவ்வொரு மொழியிலும் புகுங்கால் சொல் திரியும்

Angl. Sax. {naegel} ; Eng. {nail} ; Germ. {Nagel}.].

நககுட்ட:

நகக்குட்ட என்ற சமஸ்கிருதச்சொல், நகத்தைக் குட்டையாக வெட்டும்  சேவையாளனைக் குறிக்கும்.  முடிதிருத்துநனே இந்தச் சேவையையும் செய்தான். ஆகவே இறுதியில் இச்சொல் முடிதிருத்துவோனைக் குறிக்கலாயிற்று.  "நகக்குட்ட" என்னும் சமஸ்கிருதம்,  நகம் குட்டையாக்குவோன்  என்ற தமிழின் குறைவடிவமே என்பது சொல்லாமலே விளங்கும்.


நகத்தில் இலக்கித்தல் என்பதிலிருந்து "நகலேக"  (nail painting)  என்ற சமஸ்கிருதச்சொல் அமைந்தது. இலக்கித்தல் என்றால் நகத்தில் பூசுதல் அல்லது எழுதுதல். இலக்கி = எழுது; இல : இழு: எழு.  ல> ழ  ஒப்பு நோக்குக: பழம் : பலம்..


சனி, 11 ஜூலை, 2015

புலித்தோல் போர்த்திய .....

புதுக்கவிதை 


புலித்தோல் போர்த்திய ஆவும்
புல்லைப் போய் மேய்ந்ததோ
நிலை கொள்ள முடியா ஆழ நீர்
நீர் ஏன் அதில் போய் இறங்கினீர்
நலமான வெள்ளங்கி அணிமேலோன்
நைந்துபோன கெடு நடத்தை கொள்வதோ
குலமாத ரொடுகுடும்பம் கொள்ளலாம்
குறுக்கின்பம் தடுக்குமோர் திடமிலார் 

https://sg.news.yahoo.com/ex-prelate-hospitalized-ahead-trial-sex-abuse-porn-071336980.html

வெள்ளி, 10 ஜூலை, 2015

எவையேனும் விளம்பரங்கள் தோன்றினால்.......

இந்த வலைப்பூவில் நாம் எந்த விளம்பரத்தையும் இணைக்கவோ வெளியிடவோ  இல்லை.எவையேனும்  விளம்பரங்கள் தோன்றினால் அவை எமக்கு அறிமுகம் இல்லாத நபர்களால் வெளியிடப்படுபவை .  அவற்றுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை. கடவுச்சொல் இல்லாமல் எங்ஙனம்  உள்புகுந்தனர்  என்பதை அறியவில்லை.  எம் இடுகைகளில் சில பிழைகளையும் உண்டாக்குகின்றனர்  என்பது தெளிவு.

கடவுச் சொல்லை மாற்றலாம்.  அதையும் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்களே!

இவற்றைக் கவனத்தில் கொண்டுள்ளோம்.  

புதன், 8 ஜூலை, 2015

News Reports

கால்மணி நேரம் கழிப்பதற்கு---- கைக்
காசினை  வீசியே தாளிகை வாங்கினால்
மேல்மண்டை  மேனிஎன்  கால்கள்வரை --- கவலை  
மேல்வந்து  சூழுது கடலலை போலவே.


கவலையில் காலம் கழிப்பதற்கு   ---- நாம்
கண்டு பிடித்தவை  காகித நாளிதழ்
உலவிகள் தந்திட்ட  செய்திகளைப் ----- பார்த்தால்
ஒருபடி    மேலென்றே சொல்வது  கூடுமோ

Note:  Browser became  unstable
 upon pasting this poem  and we could not preview.  It has been reinstalled from a different restore point. We do not know why..... Anyway enjoy this poem....Sorry about it. 

செவ்வாய், 7 ஜூலை, 2015

Levels of dispute resolution

வென்றால் என்ன அண்ணே!
விதிமுறைகட்கு கட்டுப் படுக முன்னே!--- இல்லையேல்
உண்டான பட்டம் உயர்நிலை அனைத்தும்--- 
இன்றில்லை என்றன்றோ ஆகிவிடும்
நீதிமன்றத் தீர்ப்பு ---  சில வேளை 
குற்றவாளிக்குச் குடைச்சல் 
தருமாப்போல 
மூதறிவுச் செயலவை உறுப்பினரும்---- நல்ல
வேதனை தரும் முடிவுகளை மேற்கொள்வர்.
அதற்குச் சான்றாவது இதுவேதான் காணீரோ! 


Mayweather stripped of title he won in Pacquiao fight


https://sg.sports.yahoo.com/news/mayweather-stripped-title-won-pacquiao-fight-005956406--box.html

I am no fan of boxing.  But:  Observe that dispute resolution comes in at so many levels, and at the apex are the law courts.

ஞாயிறு, 5 ஜூலை, 2015

Sage Narada

நாரத முனிவரை இன்று நமக்குள்ள வேலைப்பளுவின் காரணமாக மறந்துவிடுகிறோம்.  அவர் நினைவு பழங்கதைகளைக் கேட்டாலே மீண்டு வருகிறது. வீணையை வைத்துக்கொண்டு இனிமையாக இசைபாடி, நன்கு பேசிப் பிறரை மடக்கக் கூடியவராகவே அவர் கதைகளில் வரலாறு வருகிறது.

சங்கதப் புலவர்கள் அவர் பெயர் மனிதனைக் குறிக்கும்  "நர(ன்)" என்பதிலிருந்து  வருவதாகச் சொல்லுவர். அவர் நடத்தும் வாதங்களைக் கேட்கையில்,  நரன் என்பதிலிருந்து அவருக்குப் பெயர் வந்தது  என்பது பொருத்தமாக இல்லை.  நாம் அனைவருமே நரர்கள் தாம்.

நாவினாலே யாரையும் அறுத்துப் பேசி மடக்குபவர் என்ற பொருளில் நா+றதர் >  நாரதர்  எனில் சரியாய் இருக்கும்.

றதர் என்பதைப் பார்ப்போம்.

அறு+ அதர் =  அறதர் =  அறுக்கும் வழி.
அதர் =  வழி.
நாவினால் அறுத்துப் பேசும் வழி அறிந்த கலைஞர்.

அறதர் என்பது தலையிழந்து றதர் > ரதர் ஆனது.

அரங்கன் > ரங்கன் ஆனதுபோல.

நா+அறு+அதர்= நாவறுதர் > நாறதர் >நாரதர் என்று தமிழ் முறைப்படி காணலாம்.

இது ஏனை இந்தோ ஐரோப்பியத்தில் இல்லாத சொல்

அது+ அர் என்ற பின்னொட்டுகள் அத(ர்) என்று வந்தன என்னினும் அமையும்.


நாவை ரதமாக உடையவர் எனினும் ஏற்புடைத்தே.  தச + ரதர் = தசரதர் என்பதுபோல நா+ரதர் = நாரதர்.

கடக இராசி :Crab and its qualities

கடக இராசியில் பிறந்தவர்கள்  துணிச்சலும் திடமனமும் உடையவர்கள் என்று கணியர்கள் (சோதிடர்கள்) கூறுவர்.  திடமும் திறமும் உடையாரை எளிதில்  கடந்துவிட இயலாதன்றோ?

நண்டு என்ற  உயிரி,  கடினமான ஓட்டினுள் வாழ்கிறது.   ஓடு கடினமானது;  அந்தக் கடு வெளி  ஓட்டின்  அகத்து (உள்ளே)  அது வாழ்கிறது.  எத்துணை கடின ஓடாயினும் அதை மடக்கிப் பிடித்து மனிதன் உண்டுவிடுகிறான் என்றாலும்,  இதனால் ஓடு கடுமை என்பதும் அகத்தே நண்டு வாழ்கிறதென்பதும் மறுத்தற்கொண்ணாத உண்மைகளே.

கடு+  அகம் = கடகம்.

இங்ஙனம் நண்டுக்கு மற்றொரு பெயர் அமைந்தது.  இது மிக்கப் பொருத்தமாய் அமைந்த பெயராகும்.

கட + அகம் :  வென்று உட்புக அரியது என்றும் பொருள்.

கடம்:  <  கட.

இதனை வேங்கடம் என்ற சொல்லுடன் வைத்து நோக்குக.

கடத்தல் - வெல்லுதல் என்றும் பொருள்படும்.

கடக  இராசி 

வியாழன், 2 ஜூலை, 2015

போருக்குப் புறப்படுமுன் .........

அரசன் ஒருவன்  போருக்குப்     புறப்பட எண்ணுகின்றான்.  அவன் என்ன செய்யவேண்டும்?  இதற்கான விடை யாரும் அறிந்ததுதானே! "போருக்குப் புறப்படுங்கள் " என்று உரத்த குரலில் கட்டளையிடவேண்டும். திரைப்படங்களில் அப்படித்தான் காட்டுவார்கள். காரியத்தைச் சாதித்துக்கொள்வதற்குக் கட்டளை யிட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

சிறந்த போர்க்கலை மன்னர்கள், பல முன்னேற்பாடுகளைச் செய்தார்கள். அதிலொன்று படைகளைப் பலவிதத்திலும் தயார்ப்படுத்துவது. அதில் ஒரு "விதம்": வரிசையறிந்து படையுறுப்பினர்களுக்கு விழுமிய பொருள்பல வழங்கிச் சிறப்பிப்பது.

முன் போரில் பல வெற்றிச் செயல்கள் புரிந்து தன் நாட்டுப் பற்றையும் அரசுப் பற்றையும் மெய்ப்பித்தவர்களுக்குச் செயல்தகுதிக்கேற்பப் பொருள்வழங்க வேண்டும்.  இதைத்தான் "வரிசையறிந்து" என்று சொன்னோம்.
பொருளுடன் பட்டம், பதவி முதலியவும் வரும்.

மறவர் சிலருக்குக் குதிரைகள் கிடைத்தன.  வேறு சிலருக்கு யானைகள்.
நிலங்கள் பரிசாகப் பெற்றோரும் உண்டு. இன்னும் சிலருக்குப் பொன்னும் மணியும். இப்படிப் போருக்குமுன் அளிக்கும் நிகழ்வுக்குத்  "தலையளி" என்றனர். அளிக்கும் மருத நிலத்துக்குத் "தண்ணடை" என்று பெயர்.

இதைக்கூறும் பாடலைத்  தும்பைத்திணை, தும்பை அரவத் துறை என்று வகைப்படுத்துவார்கள்.

பொன் புனைந்த கழலடியோன் 
தன்படையைத் தலையளித்தன்று.

என்பது கொளு. தலையளித்தன்று = தலையளித்தது .( புறப் பொருள் வெண்பாமாலை .)

சிவ பெருமானே முப்புரம் எரிக்கப்  ( போருக்குப்) புறப்படுமுன் புறப்பொருள் இலக்கணப் படி செய்வன செய்துதான் புறப்பட்டாராம்.    

அத்தகு சிறப்பு உடையது தமிழனின் புறப்பொருள் இலக்கணம். (என்பர் புலவர் )







திங்கள், 29 ஜூன், 2015

Why Sanskrit is Indo-European?

மொழி நூலறிஞர் சட்டர்ஜியின் ஆய்வுமுடிவின் படி, சமஸ்கிருதம் திராவிடமொழிகளின் ஒலியமைப்பையே உடையது.   மேலை நாட்டு மொழிகளில் ஒலியமைப்பை எவ்வகையிலும் ஒத்திருக்கவில்லை. இந்நிலையில் உங்கள் மனத்தில் என்ன கேள்வி எழவேண்டுமென்றால். அது எப்படி ஐரோப்பிய அல்லது இந்தோ-ஐரோப்பிய மொழி ஆனது என்பதுதான்.

மேலை நாட்டு மொழிகள் அளவிறந்த இந்தியச் சொற்களைக் கடன்கொண்டுள்ளன. சமஸ்கிருதத்தை இந்தோ ஐரோப்பிய மொழி என்றால்,   கடன் என்பதை நல்லபடியாக மறைத்துவிடலாம். தாய்-சேய் உறவு கற்பித்து,  கடன்  என்பது பிள்ளைகட்கு  பிற்காலத்தில் விட்டுச் செல்லும் விழுநிதியம் போல் ஆகிவிடும்.

தமிழில் போலவே  சமஸ்கிருதத்திலும் அ-  ஆ;  இ- ஈ; உ- ஊ; ஏ;  ஐ:  ஒ- ஔ  என்று வருகிறது .(  இடைநின்ற  ரு - ரூ - லு, பின் வரும் அம் ஆகியவை தவிர்க்கப்பட்டன. ) இவை தமிழ் நெடுங்கணக்கில் ,  அம் தவிர,  வேறு வரிசையில் வருபவை என்றாலும், மேலை நாட்டு மொழிகளில் வேறிடங்களில் உள்ளவைதாம்.

உரோமன் நெடுங்கணக்கில் ஏ-பி-சி-டி என்றல்லவா வருகின்றன?  ஐரோப்பியச் சேய்களெல்லாம் ஏன் சமஸ்கிருதத் தாயைப் பின்பற்றவில்லை? கிடைத்த சொற்களைமட்டும் வாரிச் சுருட்டி வைத்துக்கொண்டார்களோ?

மொழியில் உறவு கொண்டாடி  இந்தியாவைத் தம்வசமே வைத்துக்கொள்ளவும் திருட்டை மறைக்கவும்  இது ஒருதந்திர நடவடிக்கைதான்.  மொழியாய்வு முடிபுகள் தங்கிவிட்டன; இந்தியத் துணைக்கண்டம் கைவிட்டுச் சென்ற தோல்வியே அவர்களுக்கு மிஞ்சியது.

தமிழை ஐரோப்பியத்தின்  தாய் என்று சொல்லப்  போதுமான சொற்கள் கிடைக்கும்.  முன்பு  இணையத்தில் ஒருவர் ஆய்வு செய்து  இதை  வெளியிட்டிருந்தார்.  அப்படி இருந்தும்  ஏன்  தமிழை அணைத்துக்கொள்ளவில்லை?    அப்படி  அணைத்துக்கொண்டால்  ,  அதில் வெள்ளையர் அரசுக்கு என்ன அரசியல் ஆதாயம் கிட்டி  யிருக்கக் கூடும் ?  தமிழிலிருந்து  வெள்ளையருக்கு  எந்தப்  பயனும்  கிடைத்திருக்கும் என்று சொல்ல முடியாது.   

ஞாயிறு, 28 ஜூன், 2015

பேரா. வையாபுரிப்பிள்ளை சொல் ஆராய்ச்சி.



பேராசிரியர் வை.  அவர்கள் சட்டம்பயின்று வழக்குரைஞர் ஆனவர். தமிழ்ப் பேரகராதியின் பதிப்பாசிரியராய் அமர்ந்த பின் அவருக்குச் சொல் ஆய்வில் மிகுந்த விருப்பம் உண்டாயிற்று. பேரகராதியில் எது எந்தமொழிச் சொல் என்று குறிக்க வேண்டி யிருந்தமையால் தேடிக் கண்டுபிடிக்கவேண்டிய நிலையில் அவர் இருந்தார்.  இவர்க்குமுன் நூல் எழுதியவர்கள் சொன்னதைக் கண்டஞான்று அதை மேற்கொள்வது ஒரு வழி.
அஃது இல்லாதபோது,  ஒரு சொல் தமிழா  அன்றா என்றறிய, வேறு மொழி அகராதிகளில்  அச்சொல் இருக்கிறதா என்று அறியவேண்டும்..  அப்படித் தேடுங்கால், கண்டால் அது அந்தமொழிக்கு உரியது என்று எடுத்துக்கொண்டுவிடலாம்.  இந்த உய்த்தியை இவர் கையாண்டதாகவே தெரிகிறது.

இந்த உ(ய்)த்தியை நாமும் மேற்கொண்டு  கீழ்க்காணும் சொல்லை மூலம் அறிந்துகொள்வோம்.

சொல்:    கட்டுமரம்.

ஆங்கிலத்தில்  கட்டமரான்.

ஆங்கில அகராதியில்  இருக்கிறது.  அங்கு மூலம் குறிக்கப்படவில்லை என்று வைத்துக்கொள்வோம்.

முடிவு:  கட்டுமரம்  ஆங்கிலச்சொல்.

கட்டமரான் என்பதே கட்டுமரம் என்று தமிழில் வருகிறது.

மிக்க மகிழ்ச்சி தரும்  முடிவு.

சரியா?

சனி, 27 ஜூன், 2015

Ancient Tamil Civilization

Ancient Tamil Civilization - Truths
www.youtube.com/watch?v=1I3byXmzBi8www.youtube.com/watch?v=1I3byXmzBi8

வியாழன், 25 ஜூன், 2015

சிற்(சபை)

ரகரம் லகரம் என்பன ஒன்று மற்றொன்றாகத் திரிவதை முன்னர் எடுத்துக்காட்டியுள்ளோம்.  முன் இடுகைகளைப் பரவலாக ஊடுருவிச் செல்வீஈர்களானால், இதை முறைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு வாசிப்போருக்கு ஏற்படும்.  ஒரு குறிப்புப் புத்தகத்தில் ல- ர திரிபுகள் என்று ஒரு பகுதியைத் தொடங்குங்கள்.

ஒரு சீன மேற்பார்வையாளர் தம் கீழ் வேலை செய்வோனை "ஒய் லாமா,  ஒய் லாமா " என்று கூப்பிட்டார்.  வேலையாளின் பெயர் "ராமா"..  இதிலிருந்து,  தலை ராமா என்பதே "தலை லாமா" என்று ஆயிற்றோ என்று  சிந்திக்கவேண்டியுள்ளது.  ராமர் - ஆட்சி மேலதிகாரத் தலைவர் அல்லது சுருக்கமாகத் "தலைவர்"  "அரசர்".
தலைலாமாவும் ஆட்சித் தலவரே,  --  மதத்திற்கு.

 ரகரம் உள்ளபல  சொற்கள்  லகரம் பெறும்

தமிழில் எருது என்பது துடவ மொழியில் எலுது  (எல்த்) ஆகிறது..

எருது (தமிழ் எழுத்துமொழி) >  எர்து ( தமிழ்ப் பேச்சு)   >   எல்த்

இன்னொருசொல்லில்,  இது மடங்கித் திரும்புகிறது.

சிற்றம்பலம் >  சித்தம்பரம் >  சிதம்பரம்.

இங்கு  " ற்ற" > "த்த" வாகி,  த்த > த ஆகி,  ல> ர வாகிவிட்டது.

இப்படிப் பல.

அம்பலத்துக்குப் பதில் சபை என்பதைப்  போடுங்கள்.

சிற்(றம்பலம்) >  சிற்(சபை)
அல்லது :   சித்(தம்பலம் )  >  சித் (சபை)

பெரிய வேலைதான்.

இலக்கணத்துள் சென்று  சறுக்கி விளையாடாமல்,  பிடுங்கினோம், அப்பினோம் என்று வேலையை முடித்துவிடலாம்.

This post became "corrupted" and had to be re-edited./restored.

திங்கள், 22 ஜூன், 2015

சாத்தனாரின் இனிய......பாடல்

சாத்தனாரின் இனிய குறுந்தொகைப் பாடல் ஒன்று நம்மை அழைக்கிறது. அதனை உடனே இதுபோது பாடி இன்புறுவோம்.

பாடல் 154.

யாங்கு  அறிந்தனர்கொல்  தோழி ?  பாம்பின் 
உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர்  அமையத்து 
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி 
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை 
பொரி கால் கள்ளி விரி காய் அம்  கவட்டுத் 
தயங்க  இருந்து புலம்பக் கூஉம் 
அருஞ் சுர வைப்பிற் கானம் 
பிரிந்து சேண் உறைதல் வல்லுவோரே.

அரும்பொருள்:

உரி =  (பாம்பு கழற்றிய )  சட்டை;  நிமிர்ந்தன்ன -  மேலே கிளம்பியது போல் .
உருப்பு =  வெப்பம். ; அவிர் - விளங்கு ;  (ஒளி வீசும் ); அமையம் =   சமயம்; நேரம் ;
இரை -  உணவு;   வேட்டு -   விரும்பி ' உள்ளி = நினைத்து;  

பொறி = புள்ளிகள் ;   எருத்து -  கழுத்து; பேடை -  பெண்புறா .
பொரி  - பொரிந்த ;  கள்ளி -  கள்ளி மரம் ; விரி காய் -  வெடித்த காய் ;
அம்  கவட்டு =  அழகிய கவட்டில் ;  கவடு '  =  பிரிவு ,  கிளை ;
தயங்க = தெரியும்படியாக (இருந்து ;)
புலம்ப =  தனிமையாக ; கூ உம்  = கூவும் ;
அருஞ் சுர வைப்பிற் கானம்  =  கடக்க அரிதாகிய பாலைக்   காடு ;
சேண் = தொலைவில்;  உறைதல் =  வாழ்தல் 
வல்லுவோர் =  முடிந்தோர்; இயன்றோர்.

இப்போது  அருஞ்சொற்களின் பொருள் கண்டுகொண்டீர்கள்; பாடலை 
மீண்டும் படித்துப் பாருங்கள்.

விளக்கம் கொண்டு தருகிறேன்.

இந்தப் பாடல் தரும் காட்சி நண்பகல் வேளையில் நடைபெறுகின்றது.   பாடலை ஊன்றிப் படித்தால் அது தெரியும். உருப்பு அவிர் அமையம் என்றால் வெப்பம் மிகுந்து  ( துன்புறுத்துகின்ற) நேரம். இது நண்பகலாகத்தானே இருக்க முடியும்?  ஒளியுடன் கூடிய வெப்பமான நேரம்.


அமையம் என்பது அமைந்த நேரம். இதுபின் சமையம் என்றானது.  என்றால் அது சமைந்த நேரம்.  பின் இவை அமயம் என்றும் சமயம் என்றும் ஐகாரம்  குறுகி உருப்பெற்றன. இவை தமிழ்த் திரிபுகள். அமையம் சமையத்துக்கு ஆகவில்லை என்ற இணைமொழியின்   மூலம்  இதை வழக்கிலிருப்பது என்று அறிக. நேரம் என்பது நேரும் காலம்; அமையம் என்பது அமையும் காலம்

ஒரு காலத்துக்கும் இன்னொரு காலத்துக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.  நேர்வுகள் அல்லது நிகழ்வுகளே காலத்தை நமக்கு வேறுபடுத்துகின்றன. இதைத் .தமிழ்மொழி வல்லுநர்கள் அறிந்து இச்சொற்களைப் படைத்தது  அறிந்தின்புறற்பாலது.

இது புலம்பல் அமைந்த அமையம் அல்லது சமையம். பாம்பின் தோல் மேல் கிளம்புவது போன்ற வெப்பத்தைச் சூழத்தருகின்ற நண்பகல் அமையம்.  அவ்வளவு சூடாம்


வெப்பம் துன்பத்தை மிகுத்து வருத்தும் சூழலைத் தருவதாகிவிட்டது   

இரை வேட்டு எழுந்த  சேவல் என்றதனால், ஆண்புறா இரை  தேடிப் பறந்து சென்றுவிட்டதென்று அறிக.  இங்கு சேவல் என்றது ஆன்புறாவினை.  கோழிச்சேவல் அன்று,   சேவல் -  தலைவர் என்பது   குறிப்பு ..  பொருள் தேடித் தலைவர்  போயினார்.


பொறிமயிர் எருத்து :  -  புறாவின் கழுத்துப் பகுதியில் உள்ள பொறிகளைக் குறிக்கிறது.. நம் தலைவி கொஞ்சம் அங்குமிங்கும் நடக்கலாம்; வெகுதொலைவில் சென்று தலைவனைத் தேடற்குரியவள் அல்லள். குறுகுறு என்று குறுகிய நடையே உடைய பெண்புறா,  தலைவியுடன் ஒப்புமை உடையதேயாகும்.  தேடாது; வெகுதொலைவு நடவாது.

அருஞ்சுரம்  என்பது  பாலை நிலம் . வைப்பு  என்பது இடம்.  வையகம்  வையாபுரி என்பவற்றை  முன் இடுகைகளில் விளக்கியுள்ளேன்.   வை  என்பது இடம்  குறிப்பது     புலம்பு என்பது தனிமை என்பது தொல்காப்பியம் தரும் பொருள்.

இன்னொன்றையும் நாம்  நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.  தலைவனும்  தலைவியும் பாலை நிலத்தவர்கள் அல்லர் 
  பாலை  நிகழ்வுகளை தலைவி எங்கனம்  இத்துணைத்  துல்லியமாய்  அறிந்து  கூறுகிறாள் ?     இவை தலைவனிடமிருந்தே  அவளறிந்து கொண்டவை.  இவற்றை  நன்கு அறிந்த  தலைவரா  என்னிடம் இப்போது இப்படி இரக்கம் இல்லாமல்  நடந்துகொள்கிறார்  என்ற கேள்வி  அவள் மனத்தே எழுகின்றது 
இதன் காரணமே அவள்  "யாங்கு அறிந்தனர்கொல் " என்று கேட்பதற்குத்  தூண்டியது.  பெண்புறாவின் பாலை நிலப் புலம்பலை அறிந்தவராயிற்றே  அவர்!

வேறு திணையைச் சேர்ந்த தலைவி  பாலை நிலத்து நிகழ்வினை சொல்லித்  தோழிக்கு விளக்குவது இப்பாடல்.

சாத்தனார் தண்டமிழ் ஆசான்.  மணிமேமேகலைக் காப்பியம் தந்தவர்.  பல்வேறு  மதங்களையும் நன்கு அறிந்த பெரும் புலவர்.  அகத்திணை ஒழுக்கத்தையும் விரிவாய் உணர்ந்தவர்.  வெவ்வேறு  நில நிகழ்வுகளையும்  இயைத்துக் கூறும் ஒரு பாடலைச் சங்கப் புலவர்களுக்குப் பாடி உணர்த்திய பான்மை ஈண்டு அறியத்தக்கது.    will edit



   

ஞாயிறு, 21 ஜூன், 2015

Cultural ties with Indonesia

இந்தோனீசிய மொழியில்  கலந்துள்ள சமஸ்கிருத மற்றும் திராவிடச் சொற்களை அறிந்துகொண்டால்,  நாம் ஒரு வேற்றுமொழிக்காரருடன் உரையாடுகிறோம் என்பதை மறந்துவிடத் தோன்றும்.  (மலாய் மொழியிலும் மிகுதியான சொற்கள் உள்ளன). இவ்வயற் சொற்களின் மிகுதியை  அம்மொழிகளின் அறிஞர்களும் ஆய்ந்து  விளக்கியுள்ளனர். சோழப் பேரரசர்கள்  கொண்டிருந்த அரசியல் மற்றும் கலாசார உறவுகள் ஒரு முன்மைக் காரணம் என்பது மிகையன்று.

இந்திய மொழிகளில் வழங்கும் "பரம்" என்ற சொல்லினின்று உருவாகிய "பரமிதா" என்பது ஓர் அழகான பெயர் ஆகும். இந்தப் பெயரை வைத்துக்கொண்டிருப்பவர்  ஓர் இந்தோனீசியப் பாடகி..  இதேபோல் தேசம் என்ற சொல்லிலிருந்து உருவானது "தேசி" என்ற பெயர்.  இது "டெய்சி" என்ற ஆங்கிலப் பெயருடன் ஒலிமயக்கம் உடைய அழகைக் கொண்டுள்ளது.  "இரத்தினசாரி" என்பது நன்கு உலகறிந்த பெயராகும்.

பரமிதா பாடும்  "ஜஞ்ஜி கு" மற்றும் " ஜாஙான் அடா ஆயர் மாத்தா" முதலிய பாடல்களை இணையத்தில் கேட்டு மகிழுங்கள். " நீ உறுதி சொன்னாயே எனக்கு"  என்றும்  "கண்ணீர் விட வைக்காதே" என்றுமெல்லாம் இவர் பாடுவார்.  காதல் பாட்டுக்களே முதலிடத்தில் உள்ளன - எல்லா மொழிகளிலும்.

வியாழன், 18 ஜூன், 2015

savam utsavam

உத்சவ என்ற சொல்லை இதுகாலை கவனிப்போம்.

இது  ஒரு  சமத்கிருதச் சொல்.

இதன் பொருளை நோக்கினால்:


1 சவ :  செடியிலிருந்து எடுக்கப்படும் சாறு.  ஊற்றுதல்:   நிலா . ;தேன் .
தொடங்குவோன்   பின்பற்றுவோன்  தூண்டுவோன்  தலைவன்; இன்ன பிற.  கட்டளை;  திருமுழுக்காட்டு முதலிய தொடக்கச் செயல்பாடுகள்; பலியிடுதல்  ஒரு வருடம்;  வழித்தோன்றல்கள் 


தமிழில் பிணம் என்று பொருள்தரும் சவம் என்ற சொல்லுக்கும் மேற்கண்டவற்றுக்கும் தொடர்பில்லை.

சவம் என்பது சாவு என்ற சொல்லினின்றும் பிறக்கிறது.

சாவு+ அம் = (சாவம்)  > சவம்.  இங்கு முதலெழுத்து குறுகிற்று.
சா >ச.   இதுபோன்ற குறுக்கங்கள் முன்பு ஈண்டு விளக்கப்பெற்றுள்ளன. (பழைய இடுகைகளைக் காணவும்).

உற்சவத்தில் உள்ள சவம், அல்லது ஸவம், சவத்துடன்  (பிணத்துடன்) தொடர்பில்லாதது.

சவை - சுவை;  சவைத்தல்- சுவைத்தல். 

சவை + அம்  =  சவம் (  ஐகாரம் கெட்டது )

ஓரிடத்தில் மக்கள் கூடி ஒரு நிகழ்வினைக் காணுதலைக் குறிக்கும் சொல்  இதனின்றும் தோன்றியிருத்தல் கூடுமென்பது ஆயத்தக்கது.

செவ்வாய், 16 ஜூன், 2015

பழமும் தோலும

வாழைப்பழத்தை உண்டுவிட்டுத்
தோலை ஆட்டுக்குக் கொடுத்தேன்;
ஆடு அதனைச் சுவைத்து உண்டது;

பழம் கொடுக்காமல் ஆட்டை ஏமாற்றிவிட்டேனே

என்று வருந்தி

இன்னொரு பழம் உரித்துப்
பழத்தை மட்டுமே கொடுத்தேன்;

பழத்தை விரும்பாமல் தரையில் போட்டது.
தோலைப் பார்த்தது

தோலை உண்டு மகிழ்ந்தது.

பழம் தரையில் கிடந்தது.     ஆட்டுக்கோ அதில் ஆர்வமில்லை.

பண்பறிந்து செயலாற்று என்ற வள்ளுவனின் குறள் நினைவுக்கு வந்தது






\\\



திங்கள், 15 ஜூன், 2015

சீரகம் என்றே சொல்லவும்

உடம்பினைச்  சீராக வைத்துக்கொள்வதற்கு உதவும் விதைக்குச் சீரகம் என்று பெயரிடப்பெற்றது. பின் இது சோம்பு என்ற சற்றுப் பெரிய விதையுடன் ஒப்பிடப்பட்டு  நச்சீரகமென்று பெயர்பெற்றது.

ந என்ற ,முன்னொட்டுப் பெற்ற து நல்லது என்றும் சிறியது என்றும் பொருள்படும்.  இது சில புலவர் பெயர்களிலும் வரும். நப்பின்னையார் நச்செள்ளையார் முதலியன  காண்க.

இன்று சீரகம் என்பது ஜீரகம் என்று  மாறிவிட்டது;  சீனி என்பது ஜீனி என்று மாறிவிட்டது போன்றதே இது.

இதைச் சீரகம் என்றே சொல்லவும் எழுதவும் வேண்டும்,

புதன், 10 ஜூன், 2015

வேகுமே உள்ளம்

இப்போது  நம் ஔவைப் பாட்டியின் ஓர் அழகிய சங்கப் பாடலைப் பாடி இன்புறுவோம்.  இது குறுந்தொகையில் 102வது பாடல் ஆகும்.

உள்ளின் உள்ளம் வேமே;   உள்ளாது 
இருப்பின் எம் அளவைத்து அன்று ;  வருத்தி 
 வான் தோய்வு அற்றே காமம்;  
 சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே. 

உள்ளின் உள்ளம் வேமே  -   காதலரை நினைத்தாலோ உள்ளம்  மிகத் துன்புறுகின்றது ;    வேமே என்பது வேகுமே என்பதாம்   இதிற் குகரம் தொகுந்து நின்றது .
 உள்ளாது இருப்பின் எம் அளவைத்து அன்று -  காதலரை நினைக்காமல் இருப்பது எமது  ஆற்றலுக்கு உட்பட்டது  அன்று  
வருத்தி  வான் தோய்வு அற்றே காமம்  -   இக்காதல் தந்த வருத்தமோ வானத்து மேல் சென்று முட்டியது போல்  நிற்கின்றது ;
யாம்  சொல்லத் தக்கது என்ன ?
சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே. -  எம்மை  மருவிப் பிரிந்தவர் நல்லவர் அல்லர் என்பது தவிர.
சங்க காலத்தில் காதல் மணங்களே .நிகழ்ந்தன  காதலித்த  பெண்களைக்  கைப்பிடிக்காமல் தொலைந்துவிட்ட ஆடவர்களால் நேர்ந்த  சீர்கேட்டைத் தவிர்த்தல் பொருட்டே  பெற்றோர் பார்த்துவைக்கும் மணவினைகள் நடப்புக்கு வந்தனவா என்பதை வரலாற்று ஆய்வாளர்களிடம் விட்டுவிட்டுப் பாடலை நுகர்வோம்.

edit later  



ஞாயிறு, 7 ஜூன், 2015

Malaysian Earthquake, reasons and beliefs,,,,,,

மலைவாழ்  ஆவிகளை
மதிக்காமல் படமெடுத்துக் 
கொலைசூழ் ஆத்திரத்தைக்
குத்திவிட்ட காரணமோ
நிலையாழ் பெரும்பாறை
நிலம்தளர்ந்து புரண்டிழிந்து
தலைகீழ்த் தடுமாற்றம்
தந்துயிர்கள் குடித்திடவே

இங்கு  மலை வாழ் ஆவிகள் என்றது கோத்த கினபாலு என்ற மலேசிய சபா  மாநில மலைப் பகுதிகளில் வாழ்வனவாக அவ்விடத்துப் பழங்குடியினரால் நம்பப்படும் ஆவிகளை,

ஐரோப்பியர் சிலர் அம்மணப் படங்களை அங்கு எடுத்து ஆவிகட்கு ஆத்திரம் ஊட்டியதாக ஒரு குறை எழுந்தது. அதனால்தான் நிலநடுக்கம் நேர்ந்ததாம்.  

காரணமோ என்றது இதுதான்   காரணமோ என்று வினவிய வாறு.

நிலையாழ் என்பது நிலை ஆழ் என்று பிரியும்,  இது ஆழ் நிலை என்று பொருள்படுவது.

ஆழத்தில் நிலை கொண்டிருந்த பாறைகளுக்கு இது அடையாக வருகிறது. உட்பதிந்திருந்த பாறைகள் நில நடுக்கத்தில் பெயர்ந்து வீழ்தல்  வரணிக்கப் படுகிறது.

இழிந்து என்பது இறங்கி  என்று பொருள் தரும்.

மற்ற  வரிகள் எளியவை


16 dead after Malaysia quake loosed 'rocks as big as cars'

https://sg.news.yahoo.com/singapore-says-5-students-1-teacher-killed-malaysia-060326050.html

https://sg.news.yahoo.com/democracy-great-game-musical-chairs-says-dr-m-160600748.html


வெள்ளி, 5 ஜூன், 2015

Malaysian PM and his critics' challenge

தோன்றின் புகழொடு தோன்றுக
வள்ளுவப் பேரறிவாளன்
வல்லோனாய்த்   தங்க  விழைந்தானுக்கு
 வழங்கிய அறிவுரை இதுவாகும்

தோன்றித் தொந்தரவுகளே வருமென்றால்
தோன்றுவதுதான் எதற்கு?
என்ன பயன் நாட்டுக்கு தனக்கு? பிறர்க்கு?
தோன்றாமையே யாண்டும் நன்று.

கணக்குகள் இன்னும் பார்த்து முடிக்கவில்லை
பிணக்குகள் ஆகையால் வருமே
மணக்கும் மல்லிகைக்  காடாகாதே
 மாந்தர் சேரும் இடமது:
நினைக்கும் இன்னல்களும்
நினைக்கவே  மாட்டாத இன்னல்களும்
ஊறும் இடமாகும் அது
மாறாது துன்பம்


https://sg.news.yahoo.com/malaysian-pm-slammed-failing-face-critics-scandal-074532124.html



செவ்வாய், 2 ஜூன், 2015

சுழல்சுடியும் தோட்டாவும்.

http://sivamaalaa.blogspot.sg/2015/06/blog-post.html


தொடுதல் என்பதன் பொருளை முன் இடுகையில் குறித்திருந்தேன்.  இவை நீங்கள் நன்கு அறிந்தனவே . தோண்டுதல் என்ற பொருளும் அங்கு சொல்லப்பட்டதேயாம் .  "தொட்டனைத் தூறும் மணற்கேணி " எனத் தொடங்கும் தெள்ளுதமிழ் வள்ளுவனாரின் குறளையும் நீங்கள்  ஈண்டு நினைவு கூர்தல் வேண்டும்.  இது (தொடுதல்) பல்வேறு பொருட்சாயல்கள் உள்ள சொல் என்பதறிக.

கேணி தோண்டினர் என்பதைக்  கேணி தொட்டனர் என்று உயர்தரத் தமிழில் எழுதலாம். இப்போது இது புரியாது போகலாம். உரை தேவைப்படும்.   மண் தொட்டேன், நீர் சுரந்தது என்றால்,   I touched the soil and water gushed forth  என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டு  இவள் ஒரு மந்திரவாதச் சாமியார் போலும் என்றும் கூறப்படும் சாய்கூறு  தோன்றலாம். நிற்க .

தோண்டினால் (தொட்டால்)  தொட்டபொருள் காதாக இருந்தால்,  துருவப்படும். துவாரம் அல்லது துளை உண்டாகும்.  அதில் அணியும் பொன் நகையை "தோடு" என்கிறோம்.

தொடு >  தோடு.

மண்ணில் தோண்டப்பெற்ற துளை  பாம்பு பூச்சிகள் முதலியன நுழைந்து கொள்ள  இடந்தரும்.  காதணிக்குத் தோண்டிய துளை போல் துருவி மறுபக்கம் வெளி வர இயலாது. அந்தத் தோட்டின் இறுதி மண்ணிற்குள் அமையும்.  இத்தகைய துளையும் "தோடு"  என்று சொல்லப்படும்

இதில்   நீங்கள்  கவனிக்க வேண்டியது:   தோடு என்ற சொல், துளைக்கும் பெயர்.  ( எ-டு : மண் தோடு )    துளையில் அணியும் அணிக்கும் பெயராகிறது.  இப்போது அணிகலன் குறிக்கும் தோடு என்பது மெல்ல மறைந்து வருகிறது. 

Revolver என்ற  சுழல்சுடியில் பன்னிரண்டு தோடுகள் உள்ளன. இவற்றுக்குள்  தோட்டாக்கள் நிரப்பப் பெற்று (loading revolver with ammunition)  கருவி சுடத் தயாராகிவிடும்.  For safety, just load 11,  say experts.  

தோட்டிற்குள் வைக்கப்படுவது "தோட்டா ".

தோடு >  தோடு+ ஆ =  தோட்டா.

"ஆ " என்பது தொழிற்பெயர் விகுதி.   கல் >  கலா.   உண்>  உணா.   நில் >  நிலா.  இவற்றை ஈண்டு விரித்தல் ஆகாது.

ஆ என்பது விகுதியாக இருப்பதோடு ஆதல் என்று குறிப்பால் உணர்த்துவதால்,  தோட்டிற்கு ஆவது தோட்டா என்று விரித்துணர்க.

=========================================================


toTu-tal01 1. to touch, come in contact with, feel or perceive by the touch; 2. to handle, take hold of use; 3. to be connected, united with or joined to; 4. to put on, as a ring, clothes; 5. to dig, scoop out, excavate; 6. to pierce through; 7. to begin; 8. to discharge, as an arrow or other missile; 9. to eat; 10. to think; 11. to play, as a musical instrument; to beat, as a drum; 12. to fasten, insert; 13. to strike, beat; 14. to strain, squeeze out, as juice; 15. to swear upon; 16. to take up, lift; 17. to wash, as clothes; 18. to have illicit intercourse, as with another's wife; 19. to wear, as shoes; to occur, happen, come into being   (Tamil Lexicon )

திங்கள், 1 ஜூன், 2015

சாக்கடை மூடி திருடி

சாக்-கடை மூ-டிகட்-கு  நல்ல  விலை!யே----  அவை
திரு-டியே விற்-பது-வும் என்ன கலையே!
பார்க்-கிற சாலையிரு பக்கம் வேட்டை --- அரசு
பணக்குவை நேர்தலையில் வீசும் சாட்டை.

காவல் துறைமாந்தர் கொண்ட விழிப்பு --- கள்ளர்
தமக்கு விளைத்திட்ட  கம்பி அழைப்பு
மேவும் பொதுவார்க்கு வந்த நலமே  -  நாடு
மேலில் செல்லல்குறிக்  கின்ற  புலமே.


https://sg.news.yahoo.com/red-handed-father-daughter-drain-cover-thieves-caught-224600645.html

Red-handed! Father-and-daughter drain cover thieves caught in the act

the root thodu and its offsprings

தொடு என்பதோர் அழகிய தமிழ்ச் சொல். இதுபோலும் பல சொற்கள் ஒவ்வொரு மொழியிலும் வாழ்கின்றன.  மனிதர்கள்  போலும் அவை  குடும்பமாக வாழ்கின்றன.  ஆகையால் ஒரு சொல்லின் குடும்பத்தை அறிந்துகொண்டால் அச்சொல் எந்த மொழிக்குரிய சொல் என்று  அறிந்துகொள்ளலாம் . குடும்பத்தை அறிய  அடிச்சொல் ஆய்வில் முனைந்து  ஈடுபடுதல் வேண்டும் .

தொடு>.தொடர்

தொடுதல் என்னும் நிகழ்ச்சி பலவாறு நிகழலாம்.  \தொடுகின்ற இடத்திலிருந்து  நீண்டு செல்வதை  தொடர்தல் என்கிறோம்.  அர்  என்னும் வினையாக்க விகுதியைப் பெற்று  இச்சொல் அமைந்துள்ளது.   இப்படி அமைந்த சொற்கள் பலவாம் .   இடு >  இடர்; படு >படர் ;   அடு > அடர்;   அர்  என்பது  பெயர்ச்சொல்லிலும்  வரும் 

தொடு  >  தொடை.

இது  ஐ என்னும் இறுதியைப் பெற்று அமைந்த சொல். உடம்பிலிருந்து தொடர்வது தொடை.
அசை , சீர், தளை  :   தொடுக்கப்படுவது தொடை.  

தொடு  தொ டி

கைகளைத் தொட்டு  நிற்பதுபோல் அணியப்படுவது தொடி  அல்லது வளையல். அன்றித்    தொடுதல் என்பது  தோண்டுதல் என்றும் பொருள்  பெறும் ஆதலின்  தோண்டப் பெற்று வளையமாக்கப் பட்டது  என்றும் பொருள் அமைதல் கூடும்.   நடுவில் உள்ளதைத் தோண்டி எடுத்துவிட்டால் சுற்றி இருப்பதோ வளையமாகிவிடும். இதற்கு மூங்கில் போலும் வட்டமான பொருள் வேண்டும் , பண்டையர் எப்படித்  தொடிகளைச் செய்தனர் என்பதை  இதிலிருந்து சொல்லலாம்  குறுக்கில் அறுத்து நடுவில் உள்ளீடுகளைத் தோண்டி எடுத்திட வேண்டும் .

தொடர்வோம்


வெள்ளி, 29 மே, 2015

இது என்ன குழப்படி

இது என்ன குழப்படி என்று விளங்கவில்லை. நீங்கள் படித்துப் பார்த்துப் புரிகிறதா என்று தெரிவியுங்கள். அமைச்சரவைக்கே  நேரம்  தேவைப்படுமாம்.
கட்டுரை எழுதியவர் சொல்கிறார்

http://blog.limkitsiang.com/2015/05/29/cabinet-should-be-given-adequate-time-for-ministers-to-understand-and-study-the-save-1mdb-roadmap-before-a-cabinet-decision-is-taken-while-najib-should-tell-all-about-his-1mdb-dealin/#more-31301



மண்டை  குழம்ப மசியாத வாசிப்பால்
கண்டதும் யாதென்று கண்டார்க்குத் தேனதுவாம்
பண்டு பொருட்கல்வி பற்றினார் பார்த்துரைத்தால்
உண்டு செரித்தாராய் நாம்

இப்பாடலின் பொருள்: 

மசியாத  வாசிப்பால்  -    வாசித்துப் பொருள் விளங்காமையினால் ; 
மண்டை குழம்ப  -   ஐயப்பாடுகள் மலிந்து தலை நோவு மிகுந்தது; ஒருவருக்கு   அப்படியாக இன்னொருவருக்கு ;,
கண்டதும் -   வாசித்து  முடித்தவுடன் ;
யாதென்று கண்டார்க்கு --  அதன் பொருள் கண்டுகொண்டவர்க்கு ;
தேன் அதுவாம்  -  அப்பொருள் அறிந்தமையினால்  அஃது இனிமை  உடையதாகும் ;
பண்டு  போருட்கல்வி பற்றினார்  -  முன்பே  பொருளியலைப் பயின்றவர்  ;
பார்த்து உரைத்தால் -   இக்கட்டுரையைப் படித்து  நமக்குப் பொருள் கூறினால்;
உண்டு  செரித்தாராய்  நாம் ---  உண்டபின் உணவு செரிமானம் அடைந்ததுபோல் பொருளை அறிந்துகொள்வோம் , பயன்பெறுவோம்  நாம்.
என்றபடி. 







வியாழன், 28 மே, 2015

vil, villA and village.

வில்லேஜ் என்ற ஆங்கிலச் சொல்  எப்படி ஏற்பட்டது என்பதை அறிஞர்கள் கூறுவதிலிருந்து  அறிந்துள்ளோம்.

villaticus "   (having to do with a farmstead or villa," from villa "country house" )   என்ற  இலத்தீன் மொழிச்சொல்லிலிருந்து வந்ததாகக் கூறுவர்.

வில்லா என்பது பெரும்பாலும் ஒரு  குன்றுபோலும் மேடான பகுதியில்  வளைவாகக் கட்டப்பட்டது,  இதன் நடுப்பகுதி உள்வளைவாகவும்
கடைக்கோடிகள்  பிறைபோலும் வடிவிலும் கட்டப்பட்டதாகத் தெரிகிகிறது.இதனைக் கவிழ்பிறைக் கோட்டினால் காட்டுதல் கூடுமென்று  நினைக்கின்றேன்.

வில்லா என்பது தமிழின் வில் என்ற சொல்லினின்று வருவது என்று  இலங்கை  கலாநிதி    (Dr) பரமு புட்பரத்தினம்  ஆய்ந்து கூறுகிறார்.   இங்கு வில்லா என்றது உரோமன் வில்லாவைக் குறிக்கும்.

இதிலிருந்து ஆங்கில "வில்லேஜ்" வந்ததென்பர்.    

வில்லா வளைவாகக் கட்டப்பெற்றது, படையெடுப்பு தாக்குதல் முதலியவற்றை நோக்கியே. '
 பாதுகாப்புதான்  முன்மைக் காரணமாய் இருந்துள்ளது.


notes:

வளை >  வளாகம் ;  வளை = வளைவு .  ஆய்வுக்குரியது.

villaticus "having to do with a farmstead or villa," from villa "country house"   Etymological dictionary.

செவ்வாய், 26 மே, 2015

எழுத்தில் வரும் விலங்கு.

Ref:

http://sivamaalaa.blogspot.sg/2015/05/handcuffs.html


விலங்கு என்பது வளைவு குறித்தது என்பது முன் இடுகையில் விளக்கப்பட்டது.கைவிலங்கு,ஒரு வளைவான பொருள். இது உருவினால் வந்த பெயர்.

இப்போது  "கி"என்ற எழுத்தைப் பாருங்கள்.  க-விலிருந்து கி-யை வேறு படுத்திக் காட்ட  மேல் ஒரு வளை கோடு இடப்பட்டது. இந்த வளை கோட்டுக்கு "மேல் விலங்கு"  என்பர்.   அதேபோல் "கு" என்ற எழுத்துக்கு கீழ் வளை கோடு உள்ளது.  அதற்குக் கீழ்விலங்கு உள்ளது.

ககரத்தினின்று விலக்கி  கிகரம், குகரம் முதலிய உணர்த்துதலால்  விலங்கு  என்றனர் எனினும்  ஆகும்.  

திங்கள், 25 மே, 2015

விலங்கு என்ற சொல் handcuffs

.பொதுவாகக் காவல் துறையினர் குற்றாவாளியின் முன் கைக்குழைச்சில் அல்லது கணுக்கையில் இடும் வளையக்கைப்பூட்டுக்கு "விலங்கு" மாட்டுதல் என்று சொல்வர்.

இந்த "விலங்கு" என்பது  மிருகம் என்றும்  பொருள் படும். அதைப்பற்றி இங்கு பேசவில்லை.

விலங்கு என்ற சொல் வில் என்பதிலிருந்து வருகிறது.  வில் என்பது வளைவு உள்ளதென்பது நீங்கள் அறிந்ததே. விலங்கு என்பதும் வளைவு என்ற கருத்தினடிப்படையில்  ஏற்பட்டு வளையம்போல் கைகளில் பூட்டப்படுவதனால் ஏற்பட்ட சொல்தான்.
 வில்+கு = விலங்கு ஆனது.   இச்சொல் இடையில் ஓர்  அம்  என்ற சொல்லைப் பெற்றுள்ளது, இது சொல்லாக்கத்திற்குப் பயன்படும் ஓர் இணைப்புச்சொல் ஆகும்.  இதை இப்படியும் காட்டலாம்:

வில் > ( விலம் )>  விலங்கு..   விலம் என்பது இங்கு சொல்லாக்கத்தில் ஓர்  இடைத்தோற்ற வடிவம் ஆகும்.  கருப்பைக் குழந்தை போலும் தோற்றம்,

நேராகச் சென்றால்  தடை அல்லது முட்டு நிலை ஏற்படும்போது நாம் சற்றே  விலகிச் செல்வோ,ம்.  விலகிச் செல்வதை மாறிச் செல்வது என்று மலையாள மொழியில்  சொல்வர்.  நேர் கோட்டில் செல்வோன் ஒருவன் முட்டு நேராதபடி சற்று வ:ளைந்துதான் போகவேண்டும். இந்த விலகு என்ற சொல்லில் வளைவுக் கருத்து அடங்கி இருப்பதை இப்போது நன்கு அறிந்து கொள்ளலாம்.

வில் + கு:>  விலகு .  இங்கு சொல்லாக்க இடைச்சொல்லாக ஓர் அகரம் தோன்றியுள்ளமை அறியலாம்.   கு என்பது  வினைச்சொல் ஆக்கத்துக்குரிய விகுதி ஆகும். மூழ் >  மூழ்கு  என்பதனுடன் ஒப்பிடுக 

அடுத்து வில்லேஜ் என்ற சொல்லைப் பார்ப்போம்.

ஞாயிறு, 24 மே, 2015

chuuriya aaRRal

உலகின் பாதியைச் சுட்டெரிப்  பதுபோல்
பலநா    டுகளிலும் தாங்கொணா வெப்பம்

வெப்பம் இத்துணையும் மனிதன் ஏற்படுத்த
எப்படி எரிபொருள்  இவனுக்குக் கிட்டும்;

ஆயிரம் ஆயிரம் விளக்குகள் போட்டாலும்
ஆதவன் அவனுக்குத் தாமவை ஈடாமோ

ஆகும் தவமெலாம் செய்தோன் ஆ தவன்;
வேகும் தீப்பந்து அவன்மேனி என்றனர்/

தன் தவ வலியினால் தான் அழியா நின்று
கண்போல் இவ்வுல கவன்காத்தல் வேண்டுமே

புதன், 20 மே, 2015

போர் குறுகிவிட்டதைக் குறிப்பதே குறுவஞ்சி

குறுவஞ்சி என்பது புறப்பொருளில் ஒரு துறை ஆகும். இது வஞ்சித் திணையில் வரும்.

போருக்குச் செல்பவன் வஞ்சி மன்னன். வஞ்சி மாலையைத் தலையில் மலைந்துகொண்டு புறப்படுவான்.  கூடார்தம் மண்ணினைக் கொள்வேன் என்று முழங்கிக்கொண்டு செல்வோன். கூடார் எனில் பகைவர். அப்படிப் புறப்பட்டு வந்த மன்னனுடன் போர் செய்யப் பின்வாங்கியவனாய், அவனுக்குக் கப்பம் கட்டித் தன் மண்ணையும் குடிகளையும் காத்துக்கொள்ளுதலே  குறுவஞ்சி என்ற துறை. இப்படிப் பணிந்துபோய்த் திறைசெலுத்தியதைப் பாடும் பாடலை, வஞ்சித்திணை, குறுவஞ்சித் துறை என்று பகுத்துரைப்பர்.

விலை யுயர்ந்த யானைகள்,  அழகிய குதிரைகள் என்று தன்பால் உள்ள ஏற்கத்தக்க   எப்பொருளையும் முன்வைக்கலாம்.   வணங்கி இறைஞ்சலாம்.

வீரம் பேசிப் பலரைக் கொல்வதினும் இது நல்லதென்றே தெரிகிறது. ஆனால் தமிழ் மன்னர்கள் இதனை விரும்பியதாகத் தெரியவில்லை.

மடுத்தெழுந்த மறவேந்தர்க்குக்
கொடுத்தளித்துக் குடியோம்பின்று

என்பது கொளு.

கனல் கக்கும் போர் குறுகிவிட்டதைக் குறிப்பதே "குறு" என்ற அடைமொழி.

குறுவஞ்சி வேறு;   குறவஞ்சி வேறு.


திங்கள், 18 மே, 2015

thiAvuthal திராவுதல்

மடைப்பள்ளியில்  ஒருவர் மற்றவரிடம், "குழம்பைக்  கொஞ்சம் "திராவி"  விடு  என்றார்.  எனவே  எனக்குத் தெரியாத இந்தச் சொல்லை அகரவரிசைகளில் தேடினேன். திராவுதல் என்ற வினைச் சொல் கிடைக்கவில்லை.

இன்றைய நிலையில்,  அகரவரிசை என்பவை பெரும்பாலும்  பகர்ப்புகளே .(copies)  நிகண்டுகளிலோ முன் வெளியிடப் பட்ட அகரவரிசைகளிலோ இடம்பெறாத புதியவாகக் கேட்ட  சொற்களைத்  தேடிப் பிடித்துச்   சேர்ப்பது  அரிதேயாம்.

இப்போது வெளிவந்துள்ளவற்றில் இங்ஙனம் கண்டெடுத்துச் சேர்க்கப் பட்டனவாகக்  குறிக்கப்பட்ட சொற்கள்  எவற்றையும் காண முடியவில்லை.

வட்டாரப் பேச்சுகளில் திரிந்து வழங்கும்  சொற்களைச்  சில கல்லூரி ஆசிரியர்கள் திரட்டிப் பதிப்பித்துள்ளனர்.  இவற்றைக் கிளைமொழிச் சொற்கள் என்றனர். இத்திறத்தன சீரிய முயற்சிகளென்போம்.

திராவுதல் என்பது அகப்பையினால் குழம்பையோ அல்லது வேறு கீரைச்சாறு போன்றவற்றையோ சுற்றிக் கிண்டிவிடுதல் என்று தெரிகிறது.
திருப்பு,  திருகு,  திறம்பு, என்பவற்றுடன் இச்சொல் தொடர்பு பட்டதாகவே தோன்றுவதாலும், வேறுபாடு நுண்ணிதாகவே திகழ்வதாலும், இச்சொல் இருந்தது,   ஆனால்  அகராதிகளில் அகப்படாமல்  போயிற்று என்று முடித்தலே பொருத்தம் உடையதாம்.


சனி, 16 மே, 2015

கத்தரிக்கோல்

ஒரு துணியையோ அல்லது வேறுபொருளையோ  கடித்து,  வேறு உருவோ அளவோ கொள்ளும்படி செய்வதற்குக் கத்திரிக்கோல் உதவுகிறது,   இரு வெட்டுக் கோல்கள்  ஒரு தலை இணைப்பைப் பெற்று கைவிரல்களுக்குள்  மாட்டுதல் பெற்று வெட்டும் பொருளைக் கடித்தல் போல் வெட்டுவது கத்திரிக்கோல் ஆகும்,  ஆங்கிலத்தில் "a pair of scissors"   -  வெட்டு இணைகோல்கள் எனப்படும் இது  தமிழில் கத்திரிக்கோல் என்று ஒருமையில் சொல்லப்படுவது ஆகும்.

கடித்து  உருவை அல்லது அளவைத் திரிப்பதால் அதாவது மாற்றுவதால் அது கடித்திரி ஆயிற்று  பின் அது  நடுவில் உள்ள  "டி"யை இழந்து  கத்திரி ஆனது

கடித்தல் என்பது வெட்டுதல் குறிக்கும் என்றார் அறிஞர்  கால்டுவெல்..   இது கத்திரி எனப்பட்டது  ஓர் இடைக்குறை , கத்திரி -  கத்தரி . --- கத்தரிக்கோல்

சப்பாத்து கடிக்கிறது என்னும் வழக்கை நோக்குக

கடித்து அரி  என்பது கடித்தரி >  கத்தரி  என்றாயதெனினும் ஏற்புடைத்தே.
இந்த  "அரி "  என்னும் சொல் அரிவாள்  என்ற பதத்தில் உள்ள "அரி "  என்பதுதான் .  கடிப்பதும் வெட்டுவதுதான்.  பின் அரிதல் என்பதும் வெட்டுவதுதான்;   இஃது கூறியது கூறலாகாதோ எனின் , ஆகாது;  வெட்டுவது  ஒன்றிரண்டாய் வெட்டுதல் என்றும்  அரிதல் எனற்பாலது மிகச் சிறியனவாய் நுணுக்கித்  துணித்தல் என்றும் வேறுபடுத்திக் கொளலாகும்.  இதிற் பொருளமைதி காணார் கடித்திரி >  கத்திரி  >  கத்தரி எனக் கோடல் நன்று.

மொழி பொருட் காரணம்  விழிப்பத் தோன்றா  என்ற  தொல்லாசிரியர் தொல்காப்பியனார்  அறிவுரை காணின்,  இங்ஙனம்  இருவேறு வகையிலும் கூறியுள்ளதனை  வரவேற்பர் என்பதெம்  துணிபு.

----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு:

கடித்திரி >> கத்தரி  என்பதனை  மாதிரி என்பதனோடு ஒப்பு நோக்குக.   மா:  அளவு. திரி= திரித்தல், அமைத்தல்.  இன்னொன்றன்  அளவுக்கு அமைத்தல் " மாதிரி:."   இது பிறரும் கூறினர் .    We are here adverting to the common ending in these words: "thiri".