வெள்ளி, 29 மே, 2015

இது என்ன குழப்படி

இது என்ன குழப்படி என்று விளங்கவில்லை. நீங்கள் படித்துப் பார்த்துப் புரிகிறதா என்று தெரிவியுங்கள். அமைச்சரவைக்கே  நேரம்  தேவைப்படுமாம்.
கட்டுரை எழுதியவர் சொல்கிறார்

http://blog.limkitsiang.com/2015/05/29/cabinet-should-be-given-adequate-time-for-ministers-to-understand-and-study-the-save-1mdb-roadmap-before-a-cabinet-decision-is-taken-while-najib-should-tell-all-about-his-1mdb-dealin/#more-31301



மண்டை  குழம்ப மசியாத வாசிப்பால்
கண்டதும் யாதென்று கண்டார்க்குத் தேனதுவாம்
பண்டு பொருட்கல்வி பற்றினார் பார்த்துரைத்தால்
உண்டு செரித்தாராய் நாம்

இப்பாடலின் பொருள்: 

மசியாத  வாசிப்பால்  -    வாசித்துப் பொருள் விளங்காமையினால் ; 
மண்டை குழம்ப  -   ஐயப்பாடுகள் மலிந்து தலை நோவு மிகுந்தது; ஒருவருக்கு   அப்படியாக இன்னொருவருக்கு ;,
கண்டதும் -   வாசித்து  முடித்தவுடன் ;
யாதென்று கண்டார்க்கு --  அதன் பொருள் கண்டுகொண்டவர்க்கு ;
தேன் அதுவாம்  -  அப்பொருள் அறிந்தமையினால்  அஃது இனிமை  உடையதாகும் ;
பண்டு  போருட்கல்வி பற்றினார்  -  முன்பே  பொருளியலைப் பயின்றவர்  ;
பார்த்து உரைத்தால் -   இக்கட்டுரையைப் படித்து  நமக்குப் பொருள் கூறினால்;
உண்டு  செரித்தாராய்  நாம் ---  உண்டபின் உணவு செரிமானம் அடைந்ததுபோல் பொருளை அறிந்துகொள்வோம் , பயன்பெறுவோம்  நாம்.
என்றபடி. 







கருத்துகள் இல்லை: