ஞாயிறு, 24 மே, 2015

chuuriya aaRRal

உலகின் பாதியைச் சுட்டெரிப்  பதுபோல்
பலநா    டுகளிலும் தாங்கொணா வெப்பம்

வெப்பம் இத்துணையும் மனிதன் ஏற்படுத்த
எப்படி எரிபொருள்  இவனுக்குக் கிட்டும்;

ஆயிரம் ஆயிரம் விளக்குகள் போட்டாலும்
ஆதவன் அவனுக்குத் தாமவை ஈடாமோ

ஆகும் தவமெலாம் செய்தோன் ஆ தவன்;
வேகும் தீப்பந்து அவன்மேனி என்றனர்/

தன் தவ வலியினால் தான் அழியா நின்று
கண்போல் இவ்வுல கவன்காத்தல் வேண்டுமே

கருத்துகள் இல்லை: