செவ்வாய், 26 மே, 2015

எழுத்தில் வரும் விலங்கு.

Ref:

http://sivamaalaa.blogspot.sg/2015/05/handcuffs.html


விலங்கு என்பது வளைவு குறித்தது என்பது முன் இடுகையில் விளக்கப்பட்டது.கைவிலங்கு,ஒரு வளைவான பொருள். இது உருவினால் வந்த பெயர்.

இப்போது  "கி"என்ற எழுத்தைப் பாருங்கள்.  க-விலிருந்து கி-யை வேறு படுத்திக் காட்ட  மேல் ஒரு வளை கோடு இடப்பட்டது. இந்த வளை கோட்டுக்கு "மேல் விலங்கு"  என்பர்.   அதேபோல் "கு" என்ற எழுத்துக்கு கீழ் வளை கோடு உள்ளது.  அதற்குக் கீழ்விலங்கு உள்ளது.

ககரத்தினின்று விலக்கி  கிகரம், குகரம் முதலிய உணர்த்துதலால்  விலங்கு  என்றனர் எனினும்  ஆகும்.  

கருத்துகள் இல்லை: