செவ்வாய், 14 ஜூலை, 2015

MAS எண்ணாயிரவர் இழப்பர் வேலையை

எண்ணா  யிரவர்  இழப்பர் வேலையை
இரக்கத்திற்   குரியர் இவர்கள் அல்லரோ?
பன்னாட்   டுக்கும் பறந்து திரும்பிய
பணிசிற மலேசிய வானூர்  திகளே
இன்னா  ளிலும்இனி எந்நா  ளிலுமே
இயங்கும் பாதைகள் வறங்கூர் வளத்தினால்
குறைந்திடும்; அளவில் தொலைவில் என்றனர்.
இழப்பீடு என்பதே இருந்த போதிலும்
குழம்பி நிற்பவர் உழைப்பை இழந்தவர்!
ஊதியம் இன்றி  யாதுதான் செய்வர்.
மீண்டும் மலர்க   வாழ்வு!
தீண்டிய  துன்பம் யாண்டும் விலகவே.

http://says.com/my/news/more-than-8-000-people-will-be-losing-their-jobs-in-upcoming-mas-lay-off


புதுக் கவிதையாய் எழுத முற்பட்டு  ஆசிரியம்போல் ஆகிவிட்டது....படித்துக் கண்ணீரில்  பங்குகொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை: