ஞாயிறு, 5 ஜூலை, 2015

Sage Narada

நாரத முனிவரை இன்று நமக்குள்ள வேலைப்பளுவின் காரணமாக மறந்துவிடுகிறோம்.  அவர் நினைவு பழங்கதைகளைக் கேட்டாலே மீண்டு வருகிறது. வீணையை வைத்துக்கொண்டு இனிமையாக இசைபாடி, நன்கு பேசிப் பிறரை மடக்கக் கூடியவராகவே அவர் கதைகளில் வரலாறு வருகிறது.

சங்கதப் புலவர்கள் அவர் பெயர் மனிதனைக் குறிக்கும்  "நர(ன்)" என்பதிலிருந்து  வருவதாகச் சொல்லுவர். அவர் நடத்தும் வாதங்களைக் கேட்கையில்,  நரன் என்பதிலிருந்து அவருக்குப் பெயர் வந்தது  என்பது பொருத்தமாக இல்லை.  நாம் அனைவருமே நரர்கள் தாம்.

நாவினாலே யாரையும் அறுத்துப் பேசி மடக்குபவர் என்ற பொருளில் நா+றதர் >  நாரதர்  எனில் சரியாய் இருக்கும்.

றதர் என்பதைப் பார்ப்போம்.

அறு+ அதர் =  அறதர் =  அறுக்கும் வழி.
அதர் =  வழி.
நாவினால் அறுத்துப் பேசும் வழி அறிந்த கலைஞர்.

அறதர் என்பது தலையிழந்து றதர் > ரதர் ஆனது.

அரங்கன் > ரங்கன் ஆனதுபோல.

நா+அறு+அதர்= நாவறுதர் > நாறதர் >நாரதர் என்று தமிழ் முறைப்படி காணலாம்.

இது ஏனை இந்தோ ஐரோப்பியத்தில் இல்லாத சொல்

அது+ அர் என்ற பின்னொட்டுகள் அத(ர்) என்று வந்தன என்னினும் அமையும்.


நாவை ரதமாக உடையவர் எனினும் ஏற்புடைத்தே.  தச + ரதர் = தசரதர் என்பதுபோல நா+ரதர் = நாரதர்.

கருத்துகள் இல்லை: