திங்கள், 15 ஜூன், 2015

சீரகம் என்றே சொல்லவும்

உடம்பினைச்  சீராக வைத்துக்கொள்வதற்கு உதவும் விதைக்குச் சீரகம் என்று பெயரிடப்பெற்றது. பின் இது சோம்பு என்ற சற்றுப் பெரிய விதையுடன் ஒப்பிடப்பட்டு  நச்சீரகமென்று பெயர்பெற்றது.

ந என்ற ,முன்னொட்டுப் பெற்ற து நல்லது என்றும் சிறியது என்றும் பொருள்படும்.  இது சில புலவர் பெயர்களிலும் வரும். நப்பின்னையார் நச்செள்ளையார் முதலியன  காண்க.

இன்று சீரகம் என்பது ஜீரகம் என்று  மாறிவிட்டது;  சீனி என்பது ஜீனி என்று மாறிவிட்டது போன்றதே இது.

இதைச் சீரகம் என்றே சொல்லவும் எழுதவும் வேண்டும்,

கருத்துகள் இல்லை: