செவ்வாய், 16 ஜூன், 2015

பழமும் தோலும

வாழைப்பழத்தை உண்டுவிட்டுத்
தோலை ஆட்டுக்குக் கொடுத்தேன்;
ஆடு அதனைச் சுவைத்து உண்டது;

பழம் கொடுக்காமல் ஆட்டை ஏமாற்றிவிட்டேனே

என்று வருந்தி

இன்னொரு பழம் உரித்துப்
பழத்தை மட்டுமே கொடுத்தேன்;

பழத்தை விரும்பாமல் தரையில் போட்டது.
தோலைப் பார்த்தது

தோலை உண்டு மகிழ்ந்தது.

பழம் தரையில் கிடந்தது.     ஆட்டுக்கோ அதில் ஆர்வமில்லை.

பண்பறிந்து செயலாற்று என்ற வள்ளுவனின் குறள் நினைவுக்கு வந்தது






\\\



கருத்துகள் இல்லை: