வெள்ளி, 20 ஜூலை, 2018

வதந்தி சொல்லமைப்பு

தந்தி என்ற சொல்லைப் பற்றி நன்`கு தெரிந்துகொண்டிருக்கிறீர்கள்.

அதை ஈராண்டுகட்குமுன் எழுதியிருந்தோம்.  இங்கு:

இப்போது வதந்தி என்ற சொல்லை அறிவோம்.

வதந்தி என்பது ஒருவனால் அல்லது ஒருத்தியால் கொண்டுவரப்பட்டு, இன்னொருத்தனுக்குத் தெரியவருவதாகும்.  ஒருவன் இன்னொருவன் என்பதைப் பன்மையிலும் எடுத்துக்கொள்ளவேண்டும்; ஆண்பாலுக்குக் கூறுவது இதுபோலும் காரியங்களில் பெண்பாலுக்கும் பொருந்துவதே.

வ:  வருபவன் அல்லது வந்தவன்

த:  தருகிறான் ஒரு செய்தி.

இப்படியே அது பல மடிகள் செல்லுகின்றது.   மாறிச்  செல்லச்செல்ல வதந்தி ஆகிவிடுகிறது.

ஆனால் உண்மையும் இப்படிப் பரவுவதுண்டு.  ஒன்று வதந்தியா அல்லது உண்மைச்செய்தியா என்பதை  செய்தியின் வாய்மை கொண்டே தீர்மானிக்கமுடியும்.

பெரும்பாலும் வதந்திகள் வருமிடத்து உண்மைச்செய்திகள் வருவதற்கும் எப்போதுமுள்ள வழிகள் இருக்கும். அத்தகைய ஏற்புடைய வழிகளில் வராமல் வதந்தி என்பது அஃது இல்லாத வழியில் வருவதாகும்.  எடுத்துக்காட்டு: அரண்மனை முரசறைவோர் ஏற்புடைய வழியினர் ஆவர்.

வருபவன் என்பது போகிறவனையும் உள்ளடக்கும்.  இஃது வழக்கு ஆகும்.

வ: வருவோன் வந்து  த: தரும்  செய்தி.

ஓடுகிறவன் பாடிவிட்டுப் போவான் என்ற சிற்றூர்மொழியில்  ஓடுகிறவன் என்ற சொல்லாட்சியைக் கவனிக்கவும்.  அதுபோலவே வருவோனுமாவான்.

வ+த+ தி(விகுதி) =  வதத்தி > வதந்தி.   இது மெலித்தலாகும்.  வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும் என்பது உத்தியாகும்.

வருவோன் தரும் அதிகாரப் பற்றற்ற செய்தி  வதந்தி.  வ, த, மற்றும் விகுதி: தி.

அறிக. மகிழ்க
 திருத்தம் பின்


கருத்துகள் இல்லை: