வியாழன், 12 ஜூலை, 2018

ஐயப்பனுக்கு ஒரு சிறு பாட்டு


இந்த உலகெல்லாம் நான் தேடினேனே
உடல் அலுப்பாலே நெஞ்சம்வாடினேனே.

எங்குப் போனாலும் உன்னைக் காணாக் கண்களே
எங்குப் போனாலும் உனைக் காணாத் துன்பமே

உன் தன் அருளொன்றே நானும் வேண்டும் போதிலே
நீ பொருளாக என் தன் முன்னே தோன்ற வா
சபரித் திருவாக என்  கண்கள் காணவா
சபரித் திருவாக என் கண்கள் காணவா.  ( உன் தன்)

குழுவினர் பாடுவது:

எங்கள் ஐயப்ப சுவாமி நாமம் வாழ்கவே
இந்தப் பூமிக்கு நன்மை யாவும் சூழவே
எங்கள் ஐயப்ப சுவாமி நாமம் வாழ்கவே.


உச்சி பொழுதாகி வெகு நேரம் ஆச்சே என்ற பாடலின் மெட்டு.
சிவமாலா இயற்றிய இசைப்பாடல்களில் ஒன்று.

கருத்துகள் இல்லை: