சனி, 21 ஜூலை, 2018

ஒளிபொருந்திய முகம் - சொல் வதனம்.

வதனம் மதனம் என்பன மிக்க அழகாய் அமைந்த சொற்கள்.

இவை உண்மையில் செந்தமிழ் அல்ல என்று இன்று ஒதுக்குறவும் கூடிய சொற்கள்.

முதலின் யாம் முன்னரே விளக்கியுள்ள மதனம் என்னும் சொல்லை நுணுகி மீண்டும் ஆய்வோம்.

எண்ணம் நிறை மதனா  --- எழில் சேர்
ஓவியம் நீர் மதனா
பஞ்ச பாணன் நீரே என் மதனா
பாவை ரதி நானே

என்பது கண்ணதாசன் வரிகள்.  1951

மயங்குவது மது.  அதாவது நீங்கள் போதுமான  அளவு உட்கொண்டு விட்டால் ஒரு மயக்கம் தருவது.  உண்டால் மயங்குவது!!  இதில்  'யங்குவ' என்ற எழுத்துக்களை நீக்கிவிட்டால் மீதமிருப்பது மது.  இச்சொல் ஒரு இடைக்குறைச் சொல்.

இச்சொல்லை மயக்குத் தேறல் குடித்தவர்கள் தமக்குள் புழங்கி அதன்பின் அது பரவியிருக்கக் கூடும.

மதனன் என்பது:

மது > மதன் >  மதனன்  மதனி .

மது + அன்+  அன்  =  மதனன்
மது+ அன்+  இ  =  மதனி
மது + அன் =  மதன் .

மன்மதன் :  மன் -  நிலைபேறு ;  மதன்:  மயங்குதலைத் தருவோன் .

"இரதியும் மதனும் பவனி வரும் விழா  வசந்த விழா."

இடைநிலை அன் :  அன் இரட்டித்து வருகையில்  இடை வரவு சொல்லாக்க இடைநிலை என்று கொள்க ;  இறுதிநிலை அன் ,  விகுதி ஆண்பால் காட்டும்.
இரட்டிக்காமல் வருகையில் ஆண்பால் விகுதி ஆகும்.


ஓர் இடைக்குறையில் இடையில் உள்ள ஒன்றோ பலவோ எழுத்துக்கள் மறைந்து சொல் அமையும்.

தாமரை மலர்கள் தண்ணீரின்  மேலே கொஞ்சம் தலை நீட்டிக்கொண்டிருப்பதுபோல் இருந்தாலும் அவ்வப்போது  தண்ணீரால் கழுவப்படுபவை.  சில நீர்த்திவலைகள் அப்பூக்களின்  மேலும் நின்று அழகும் குளிர்ச்சியும் தரும்.  அதனால் தமிழர்கள் அதைப்  பழங்காலத்தில் கழுமலர் என்றனர்.  கழு = நீரால கழுவப்பெறும்  மலர் = பூ.   அப்புறம் கழுமலர் என்பதில் ழு-வை எடுத்துவிட அது கமல  ஆனாது.  பின் அம் விகுதி பெற்றுக்  கமலம் ஆனது.    இத்தகைய சொல்லமைப்புகள் எப்போதும்  நடைபெற்றுக் கொண்டுதான்  வந்தன. இந்தச் சொல் எங்கிருந்து கிட்டியது என்று  கடாவினவனுக்கு, மேலோகத்திலிருந்து கிட்டியது என்று சொல்ல, கேட்டவன் மடையன் ஆனான்.  சொந்தமாக ஆய்வு செய்யுங்கள்.

மடையன் என்றால் சோறுண்பவன்.  மடை = சோறு என்றும் பொருள்.

இடையிலோ முதலிலோ இறுதியிலோ நிற்கும் எழுத்துக்களை நீக்கிச் சொல்லை உண்டாக்கிக்கொள்ளலாம்.  பொருளழிவு இல்லாதிருக்குமாயின்,

இனி வதனம் என்ற சொல்லுக்கு வருவோம்.

வயங்குதல்:  ஒளிவீசுதல்.  ஒருமனிதனை வெளிச்சம் போட்டுக் காட்டிப்  பிறருக்கு அவனுடைய அடையாளத்தை ஈயும் உறுப்பு முகம்தான்.  முகத்தின் ஒளியே ஒளி.  ஒளியற்ற இருளில் யாரையும் கண்டுகொள்ள முடிவதில்லை. மிக்கப் பொருத்தமாக. முகமே வயங்குவது என்று முடிவு செய்துள்ளனர் நம் முன்னோர்.  வயங்குவது -   வது.  வயங்குவது என்பது தெளிதல், மிகுதல், விளங்குதல், நடத்தல் என்று பல பொருத்தமான பொருள்தரும் சொல்லாகும்.

வது > வது+அன்+அம் = வதனம்.  அன்: இடைநிலை /விகுதி;  அம்: விகுதி.

இது நல்ல பாடல்:

வதனமே சந்திர பிம்பமோ
மலர்ந்த ச............மோ

---- பாபநாசம் சிவன் எழுதிய பாட்டு.  முகத்தில் ஒளி இருக்கிறது என்பதை இப்பாடல் காட்டுகிறது.  முகத்தில் ஒளி இருப்பதாக அரபுமக்களும் கூறுகின்றனர். நூர் -  ஒளி.

வதனம் என்பது ஒளிமுகம்.

அந்திப்பெண்ணாளின் முகம் ஒளிமுகம் என்பர். பாரதிதாசன் உருவகம்.

உண்மையைச் சொன்னால் இப்படி அமைந்த சொற்கள் தொல்காப்பியனார் காலத்திலே இருந்தன.  தப்பு > தபு. ஒரு துறவி இவ்வுலகத் துன்பங்களிலிருந்து விடுபட்டுவிடுகிறான். மனைவியிடமிருந்தும்  தப்பி விடுகிறான்.  அவனுடைய தவத்தின் நோக்கம் உலகக் கட்டிலிருந்து தப்பித் தாம் அடையவேண்டியதை அடைவதுதான்.  தப்பு> தபு.  அப்புறம் ஒரு தல் தொழிற்பெயர் விகுதி சேர்த்துத்  தபுதல் என்ற சொல் அமைந்தது.  தபு+அம் = தபம்.  தபம்>தவம்: ப=வ போலி.

இது   இந்தச்சொல் அது அந்தச்சொல் என்று வாதமிட்டுக்கொண்டிருப்போனுக்கு  விளங்குவதில்லை.

அறிந்து மகிழ்க .

Some lines went missing after posting and this has been re-edited now.

கருத்துகள் இல்லை: