புதன், 11 ஜூலை, 2018

கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

சங்க இலக்கியங்களை வாசிக்கும்போது அக்காலப் புலவர் பெயர்களையும் அறிந்து இன்புறலாம்.

இவற்றுள்    " மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்"   என்பதுமொன்று.  கணக்காயனார் என்போர் ஆசிரியர்கள்.  இவர்கள் இலக்கணம் கணக்கு முதலிய சொல்லிக்கொடுத்தனர் என்பர்.

இப்போது ஆசிரியர் என்ற என்ற சொல்லைச் சுருக்கும் வழிகள் அறிவோம்:

ஆசிரியர் >   ஆரியர்.  இதில்  சி என்ற எழுத்து இடைக்குறைந்தது.

ஆசிரியர் >  ஆயர்.    இதில் சி ரி ஆகிய இரண்டும் குறைந்து இடைக்குறை ஆகிற்று.

ஆ  என்பது மாட்டையும் குறிக்கும்.  கோமாதா.   இதனுடன் அன் விகுதி இணைக்க  ஆயன்  ஆகும்.  அர் விகுதி இணைக்க ஆயர் ஆகும்.  மாட்டுக்காரப் பையன் என்பது பொருள்.

இடைக்குலத்தோர் என்றும் பொருள் கூறுவர்.

ஆய என்பது பின் ஐய என்றும்  ஆர்ய என்று திரிந்ததென்பர்.

தேஷ் பாண்டே, தேஷ்முக் முதலிய வட இந்தியப்பெயர்களும் கணக்காயர் என்றே பொருள்படும்.  குல்கர்னி என்பது தொடர்புடையது.  கணக்குப்பார்ப்போர், சொல்லிக்கொடுப்போர்.  புலவர்கள் இவர்கள்.  1062  காலக்கட்டதில் இவர்களின் நிலங்கள் பறிமுதலைக் காங்கிரசு என்னும் பேராயக் கட்சி மேற்கொண்டதாகச் சொல்வர்.

Maharashtra Revenue Patels (Abolition of Office) Act 1962,

இதனை விக்கிப்பீடியாவில் காணலாம்.

கருத்துகள் இல்லை: