புதன், 18 பிப்ரவரி, 2015

சீனர்தம் நிலவு தொட்ட பெரு நாள்

சீனர்தம் நிலவு தொட்ட பெரு நாள்
காணும் கடைகள் யாவும் அடைப்பு
காய்கறி வாங்க \வேண்டுமென் றாலும்
போய்த்தான்  தேடணும் அல்லார் கடையை.
வளம் பல கண்ட வணிகர் மூன்று
வாரங்கள் கழித்தும் வந்து திறப்பார்
சிங்கை முதலாய்ப்  பினாங்கு வரைக்கும்
பங்கமில் காட்சி பரந்து பட்டதே.
ஜோ கூர்1 செல்லும் சிங்கை வண்டிகள்
சோதனைக் காக ஆயிரக் கணக்கில்
யாதும் அறியாது கடப்பு நிலைகளை
நிரப்பும் தமக்கு நேரம் வரும்வரை
கிடக்கும்  எப்போது கடப்போம் எனவே
என்றோ தொடங்கிய பண்டை வழக்கம்
இன்றும் அவர்களின் மூச்சாய் உள்ளது
பெரு நாள் காலம் ஒருதொழில் செய்யா
திருவென எந்த   அரசுப் பெரியோன்
உத்தரவு தந்துசென்  றானோ
மெத்த மகிழ்வொடு  கடைப்பிடித் தனரே,

ஜோகூர் :   a city next to Singapore.  Written as:    Johor or  Johore

See the congestion for yourselves at this link

http://www.onemotoring.com.sg/publish/onemotoring/en/on_the_roads/traffic_cameras0/woodlands.html

The original of this poem written in puthukavithai format was lost due to software error.  It has been reconstructed and edited, now has fallen into Asiriyap pA format. It was not intended. வெண்சீர்களும் வந்துள்ளன. இவற்றை மாற்றவில்லை /

கருத்துகள் இல்லை: