செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

சிங்கப்பூரில் ஒரு மும்பை!

டான் என்னும் சிங்கப்பூரர் இனச்சீனர்.  இவர் ஒரு நாள் ஒரு பேருந்தில் ஏறி அது ஜாலான் புசார் என்னும் சாலையின் வழியாய்ச் சென்றது.பேருந்துக்குள் நோக்கின போது அது மும்பையில் ஓடிக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டதாம். காரணம் வேறு ஒன்றுமில்லை. அதன் பயணிகளில் பெரும்பாலோர்  இந்தியாவிலிருந்து  வந்த இந்தியர்களாய் இருந்ததுதான். வெளி நாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரில் அதிகம், சில இடங்களில் பிலிப்பினோ பணிப்பெண்கள் கூட்டம்; சில இடங்களில் இந்தோனேசியர் கூட்டம்; வேறு தலங்களில் சீனா தேசத்தினர் கூட்டம்.

சிங்கப்பூர்க் காரர்கள் சில இடங்களில் குறைவாகவே காணப்படுகின்றனர். மேலும் இவர்கள் இப்படிக்கூட்டமாகச் செல்வதில்லை என்பதும் ஓரு காரணமாகும்.

திரு டான் என்பவர் சிங்கப்பூரில் அதிபர் பதவித் தேர்தலில் நின்றவர்.


Some online citizens don't see the big deal in Tan Kin Lian's "Mumbai" post

முழுச் செய்தி இங்குக் காண்க:


சிங்கப்பூர்  என்பது  பூந்தோட்டம்  -- காண்பவை 
செவ்வந்தி  முல்லை  கனகாம்பரம் ;
பங்கமில் மல்லிகை  பன்மலரே  --- நாவும் 
பயின்றது சொலலின்     மனம்தீம்பறும் 



தீம்பறும் - குற்றமற்றதாகும்..




கருத்துகள் இல்லை: