செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

சிவ ராத்திரி

இரவு என்பது எப்படி இரா என்று வந்தது?  இதில் ஏதும் வியப்பு இல்லை,  காரணம் :

நிலவு  >  நிலா,
உலவு  > உலா
உணவு >  உணா
கனவு  > கனா.\

\பெயர்  வினை என்றில்லாமல் வடிவங்கள் இங்ஙனம் வருகின்றன,

நிலவு  என்பது  வு விகுதி பெற்றமைந்தது.   நிலா என்பது  ஆ என்னும் விகுதி பெற்று அமைந்தது. எனினும் வு விகுதி பெற்றவற்றுக்கு  ஆ பெற்றவை மாற்றுப் படிகள் .


நில் + வு  = நிலவு  ( இடையில் ஓர்  அகரம் தோன்றியது).
நில் + ஆ = நிலா.   

பார்க்கும்போது  நிற்பதுபோல் தோன்றுவது;  நிலையானது , அழியாதது  என்று பொருள்.   

ஆகவே இரவு இரா ஆனது இயல்பு

அடிச்சொல்  (இர் )
இர்  > இரவு.  ( இர் +அ +வு )  நிலவு என்ற சொல்லில்போல   ஓர்  அகரம்  தோன்றியது 

இர்  என்பதோர் மூலச்சொல்.  பிற சொற்கள்.

இர்  >  இருள். (உள்  இறுதி பெற்றது )
இர் > இருள் >  இருட்டு.  (இருள்+ து)   இரு விகுதிகள் உள் மற்றும் து.
இர்  >  இராகு.  ( விகுதிகள்:  ஆ  கு ,  அல்லது "ஆகு " என்னும் வினை). 

இராத்திரி  என்பது இராவுடன் திரியையும் கோத்து வைத்துக்கொண்டுள்ளது.  திரி என்பது திரிபு என்னும் பொருளது.

பகல் என்பதன் திரிபு இரவு,  திரிபு எனின் மாற்றம். பண்டை மக்கள் இரவைத் திரிபாகக் கருதியதையே இது காட்டுகிறது.
இரவு பகல் எப்படி ஏற்படுகின்றன என்று அவர்கள் காலத்தில்
தெரியவில்லை/  திரிபு என்று கருதியதில் வியப்பில்லை எனினும் இப்படிக் கருதியதிலும் பெருந்தவறு ஒன்றுமில்லை.

இரவாகிய திரிபு என்க, திரி என்பது முதனிலைத் தொழிற்பெயர்.


மாற்றுக் கருத்து:  திரி  என்பது  திரம்  என்பதன்  மாற்றுரு. இவை இரண்டும் திறம் என்ற சொல்லிலிருந்து பிறந்து விகுதிகளாய்ப் பயன்பட்டன.,  இராத்திரி  என்பதில் திரி  ஒரு விகுதி எனினும்  ஆகும்.



குழித்தல்  குழி என்று முதனிலைத் தொழிற்பெயர் ஆனது போல  திரிதல்  எனற்பாலது திரி என்றே நின்று  ஆனது. 

இராத்திரி என்பது நல்ல தமிழ் , இது வழக்கம்போல தலையிழந்து ராத்திரி ஆனது.

சிவ ராத்திரி என்பது சிவ என்ற இயல்பு எச்சச் சொல்லும் ராத்திரி என்ற உருத்திரிந்த சொல்லும்  கலந்த கலவைச் சொல்.
 இந்தக் கலவைச் சொல்லை நாம் சிவயிராத்திரி என்று எழுத வேண்டியதில்லை,

கருத்துகள் இல்லை: