சனி, 4 ஜூன், 2022

இறக்கும்போதும் உமக்காகத் துடிக்கும் நாயின் இதயம்.

 

நேரிசை வெண்பா


அன்பினோர்    ஊற்றாக வாழ்ந்தே,   உயிர்விட்டால்

அன்புக்  கெனநின்ற  நாய்தனை ---- தன்பக்கல்

என்றும்நீக் காதீர் இதயம் உமக்கன்றோ 

கொன்றும் துடிக்கும்  அது.


அன்பினோர் -  அன்பின் ஓர்;   உயிர்விட்டால் - இறக்கும்போதும்; 

அன்புக் கென நின்ற =  உயிர் இருக்கும்போதும் உமக்காக;  அது 

போம்போதும் உமக்காக என்பது;   தன் பக்கல் -  தன் பக்கத்திலே; ( தன் பக்கத்திலிருந்து )

எந்தக் காலத்திலும்;   நீக்காதீர் - உம்  அரவணைப்பிலிருந்து விலக்காதீர்

என்பது;    இதயம் உமக்கன்றோ  -  அதன் இதயம் முழுமையும்

உமக்கு என்பதில் ஐயமில்லை;   கொன்றும் துடிக்கும் அது -   நீர் அதைக்

கொன்றாலும் அதன் இறுதித் துடிப்பு உமக்காகத்தான்.

உமக்கன்றோ என்பதை இருபுறமும் இணைத்துப் பொருள் கொள்க. இச்

சொற்றொடர் " நடுநாயகம் ". ( இருபக்கம்  மாட்டும்படி நட்டு 

நயக்கப்படுவது).  

நடுநின்ற  " நாயகம்".   நய அகம் - நயமுடைய உட்பகுதி. அல்லது நயக்கப்பட்ட ~.

Pl click: செய்தி.

https://theindependent.sg/shiba-inu-loyal-dog-runs-8km-back-home-after-owner-gives-him-up-due-to-asthma/

..................At one point, it appeared that Saisai was crying, so Zhao gently caressed his head and told him not to cry. She, too, sniffled at the end of the video......................


நம்  வலைபூவின் ஆதரவாளர் திருமதி ரெதி  அவர்களின் நாய்,  நோய்வாய்ப் பட்டு இறக்கும் தறுவாயில் செய்திவர,  விலங்கு நோய்மனைக்கு ஓடினார்,  இன்னும் இறக்கவில்லை, போய்ப் பாருங்கள் என்றனர்  மருத்துவர்கள். அருகே சென்று ரெ பெயர்சொல்லிக் கூப்பிட, தலையைத் தூக்கி  அது அவரைப் பார்த்துவிட்டு தலையைக் கீழே போட்டுவிட்டு ஒரு பெருமூச்சு விட்டது.  தலையை மீண்டும் தூக்க இயலாமல் இன்னொரு மூச்சுடன் நின்றுவிட்டது.   என்னே கொடுமை.

இவ்வாறெல்லாம் அன்புகாட்டும் நாயை  நாய் என்பதே தவறு. அதுதான் உண்மை இதயக்கனி.

 




கருத்துகள் இல்லை: