திங்கள், 13 ஜூன், 2022

தாடி, தவ்வு, தாடகை

 தவ்வு என்பது இப்போது இப்போது ஓர் அரும்பதமாகவே தோன்றுகிறது. இதை தடு என்ற வினையிலிருந்து அறிந்து போற்றலாம். 

தடுத்தல்  வினை.

தடு > தடுப்பு  ( பு விகுதி),  தடை ( ஐ விகுதி), தடங்கல் ( தடு+ அம்+ கு+ அல்,  இரண்டு இடைநிலைகளும் ஒரு விகுதியும்).

வு என்பதும் ஒரு விகுதிதான்.  அறி -  அறிவு.

தடு > தடு+ வு>  தடுவு.

டு என்பது இடைக்குறையாக,  

தடு > தடுவு > த + வு > தவ்வு,   அல்லது  த(டு)வு> தவ்வு> தௌவு என்றும் எழுதினர்.

தாடி என்பதும் முகத்திற்கு ஒரு தடைதான். (குழந்தையை முத்தமிடத் தடை, வேறு தடைகளும் இருக்கலாம்).

தடு >  தாடு.  ( இது சுடு > சூடு என்பது போல).

தாடு +   இ >  தாடி. 


இனி இராமாயணத்தில் எப்படி தாடு என்பதிலிருந்து பிறந்த சொல் ஒரு பேயின் பெயராய் வருகிறது, காண்போம்.

தாடகை யாகம் இயற்றுவோரின் முயற்சிகட்கு ஒரு தடையாகவிருந்தாள்.

தாடு :  தடை.  தடுத்தல்.

தாடு + அகம் + ஐ.

அகம் என்பதை அக என்று குறைக்க,

தாடு + அக+ ஐ  > தாடகை ஆகிறது.

தவமியற்றும் இடத்தில் இருந்துகொண்டு ( "அக")  தடைசெய்யும் பேய்.

வான்மிகி ஒரு சங்கப்புலவருமாவார். இராமாயணத்தில் பல பெயர்கள் தமிழ் மூலம் உடையவை.


கருத்துகள் இல்லை: