செவ்வாய், 28 ஜூன், 2022

பலம் உடையவர் : பலவர்> பவர் ( வலிமை)

ஒரு பழைய திரைப்பாடல் : " எளியோரைத் தாழ்த்தி  வலியோரை வாழ்த்தும் ,  உலகே உன்செயல்தான் மாறாதா" ( கவி கா.மு. ஷெரிப் அவர்தம் அழகான வரிகள் , நெஞ்சைத் தொடுவது)   தொண்சுவைகளில் ஏக்கச்சுவை பொங்கிவரப் பாடுவார் பாடகர்.  இதனை  நாடகத்துக்காகப் பாடலாம்,  அது மாறப்போவதில்லை. அப்படியே மாறிவிட்டாலும்,  பிறரைக் கட்டுக்குள் வைத்திருக்கும்  திறனற்றவர்களால்  மன்பதையில் ( சமுதாயத்தின்) ஒழுங்கு முறையை நெறிப்படுத்த இயலாமல் அதனால் சரிவினைச் சந்திக்கவேண்டி நேரலாம்!! பலம் வாய்ந்தவர்கள் பலம்தேவைப்படும் வேலைகட்குத் தேவைப்படுகிறார்கள். But don't bully the weak. 

சாதுவானவர்கள்,  மென்மையான வேலைகளில் ஒளிதருவர். சாது என்ற சொல் எவ்வாறு தோன்றியதென்பதைப் பின் பார்க்கலாம். நிற்க.

நாம் இப்போது "பவர்" என்ற ஆங்கிலச் சொல்லைக் கவனிப்போம்.  

சுருங்க விளக்கினால் இவ்வாறு வரும்:

பலம் + அர் >   பல + அர் >  பலவர் >  ( இதில்  லகரம் இடைக்குறையாகிவிட்டால்), >  பவர் ( power) :  ஆகிவிடும்.

பலம்  ( வலிமை), இதில் இறுதி குன்றி  எச்சம் ஆகிவிடும்.

பல ஆன் > பலவான்.  இதில் பல என்பது எச்சச் சொல்.  அது போலவே இதுவும்.

'புத்திமான் பலவான் ஆவான்'

வந்தான் சென்றான் என்பதில் வரும் ஆன் விகுதிதான் இது.

பலவான் >  balwant  ( வட இந்திய மொழிகள் ).

ஓ மல்லா   :  ஓ பலம் பொருந்தியவனே!  என்பது.

மல் > வல் > பல்.

வல்லோன்,  மல்லன்,  பலவன்.

பல் >  பல்+ அவன் >  பல்லவன்:   பலமுடைய மன்னன்.

அரையன் > அரசன்.   பல்லவ அரையன் > பல்லவராயன்  (திரிபு)

பல்லவன் <> வல்லவன்.

புத்திமான்:  மான் என்பது இங்கு மகன் என்ற சொல்லின் திரிபு.  மக>  மா.

மேலும் பலம் என்பது  வலம் என்பதன் திரிபு.  வல் > பல் + அம் > பலம்,

புத்திமான் புத்தம்புதிய சிந்தனையில் செயல்படுபவன்.  புது அன் >புத்தன்.  புது இ > புத்தி. புத்தர் என்ற பாராட்டுப்பெயர் தென்னாட்டார் கொடுத்தது.  அதுவே சிறந்த பெயராய் நின்றது.

வலம்படு என்று பழந்தமிழில் வந்தால்,  அது "பலம் படு"  அதாவது வலிமைப்பட்ட என்று பொருள்.

இழிநிலை இலத்தீனில் potere  போட்டு அறை என்பதுபோல் உள்ளது. பழம் பிரஞ்சு மொழியில் pouair  என்று வந்தது.  மொழிதோறும் திரிபுகள் ஊரும்.

ஐரோப்பிய வடிவங்கள் போடு என்பதனுடன் தொடர்பு காட்டினும்,  போடுகிறவனும் வலிமை  உடையவன் தான். அதாவது உதைகொடுப்பவன்.  வாங்கிக்கட்டிக்கொள்பவன் வலிமை இல்லாதான்.

என்றாலும்,  பலம் அர் >  பலவர் >  பவர் என்று,  ஒரு பலம் பொருந்தியவனை முன் வைத்து எழுந்த சொல் இதுவென்பது பொருத்தமாகிறது. 

தமிழ்ச்சொற்களை ஆராய்ந்தால் இன்னொரு மெய்ம்மையும் விளங்கும். அதாவது இடையிடையே, இப்போது  கிடைக்காத,  அகரவரிசைகளில்  இல்லாத  சொற்களும் கிடைக்கும்.  அது நம்மிடம் இல்லாமல்,  வெளியுலகில் பலவிடங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும். அடிச்சொற்கள் மூலங்கள் வழியாத அவற்றை அறிந்து அவற்றின் வாழ்விடங்களை அறியலாம். உறவு துண்டித்துப் பிரிந்திட்ட சொற்கள். நாம் அவற்றை நம் ஆய்வுப் பாதையிலிருந்து விலக்கிவிடலாகாது.  மேலும் ஆய்ந்து  தொடர்புகளை வெளிக்கொணர்க. ஆய்வை விரிவுசெய்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


கருத்துகள் இல்லை: