சனி, 4 ஜூன், 2022

துர்க்கையம்மன் அருள்


 எத்துணை மாட்சிமை துர்க்கையம்மா!

இத்தனை அழகும் சன்னிதியில்.

உத்தமச் சத்தியக் கருணையிலே

எத்தனை நாட்கள்யாம் இணைந்துநின்றேம்

பத்தருக் கினியும் அருள்புரிவாய்

பனிபக  லோன்முன்  மறைந்துவிடும்

நித்திய வாழ்வினில் எமைநிறுத்தி 

நேரு  மின்னல்களும்  இலவாக்குவாய்..


சிவமாலையின் கவி.


பொருள்

எத்துணை மாட்சிமை துர்க்கையம்மா!

--- மாட்சிமை என்பது பெரும்பாலும் மன்னரவையில் நிலவும் மேன்மை நிலை.  இது அலங்காரங்கள் மக்கள் அஞ்சுதலன்புடன் நிற்றலைக் குறிக்கும். இறைவிக்கும் ஏற்றசொல்தான்.

மாட்சி மை துர்க்கையம்ம  மை  my என்றுகூட வைத்துக்கொள்ளலாம்.

இத்தனை அழகும் சன்னிதியில்.===  தெய்வம் நிற்குமிடம்  சன்னிதி.

உத்தமச் சத்தியக் கருணையிலே  (  சத்தி - சக்தி;  அக் கருணையிலே என்று இருவாறு பொருள் கொள்ளவும் இடமுண்டு.)

அதாவது சக்தி அக் கருணையிலே என்றும் வரும்,

கருணை என்பது  கருநெய் என்றுகூட வைத்துக்கொண்டாலும் ஒரு பொருண்மை உண்டு.  அக்கினிக்கு வத்திரங்கள் உணவெல்லாம் கொடையாக்கியபின் எரிந்த கருப்பில் கொஞ்சம் எடுத்து நெய்விட்டு,  பொட்டுவைத்துக் கொள்வதுண்டு.   கருணை - என்பதைக் கருநெய் என்று எடுத்துக்கொண்டாலும் அதையும் குறிப்பாகக் கொள்ளலாம்.  இதைப் பலமுறை பெற்றுள்ளேம்.  நீங்களும் பெற்றிருப்பீர்கள்.

எத்தனை நாட்கள்யாம் இணைந்துநின்றேம்  -  இவ்வாறு ஈடுபாடுகள் உள.

பத்தருக் கினியும் அருள்புரிவாய்  : இனியும் என்றால் முன்னும் அருள் கிட்டியபடி. இனியும் வேண்டும் அந்த இனிமை என்பது.

பனிபக  லோன்முன்  மறைந்துவிடும்  அவ்வாறு அருள் கிட்டினால் இன்னல்கள் மறைந்துவிடும்.

பக -  வெட்டிவிட, பக எனில் அது பெய்யாத இடம் செல்லுதலுமாம். ( என்றும் பொருள் )

கடவுள் ஒரு லோன் (கடனாக அருள்) கொடுத்தாலும்  தாழிருஞ்சடைகள் தாங்கி தாங்கருந்தவமேற்கொண்டாவது கட்டிவிடலாமே.  அப்படியும் கொள்ளலாம்.

நித்திய வாழ்வினில் எமைநிறுத்தி   நித்தியம் என்பது நிற்றலுற்ற தன்மை.

நில் . நிற்றல் > நித்த(ல்)  :>  நித்தி(யம்.).

நேரு  மின்னல்களும்  இலவாக்குவாய்..  நேரும் இன்னல்.

இல என்பது பன்மை, இல்லை என்பது  தற்காலத் தமிழில்.

இல்லை - ஒருமையும் இல்லை; பன்மையும் இல்லை.

இல என்பது பன்மையில் மட்டும் வருவது.

நின்றேம் என்பது தம்மைச் சார்ந்தோரை மட்டும் உட்படுத்த, நின்றோம் என்பது  முன்னிலையில் உள்ளோரையும்  ( இங்கு துர்க்காதேவி) உட்படுத்தும்/. ஆதலால் நின்றேம் என்பதே ஏற்றுக்கொண்டேம்.  ஏம் விகுதி இப்போது வழக்கு குன்றியுள்ளது.)

மறைமலையடிகள் பெரிதும் ஏம் விகுதியைப் பயன்படுத்தியுள்ளார்.

நின்றேன் >  நின்றேம் (பன்மை)

நின்றோன் >  நின்றோம்  (")

வழக்கில் சற்று வேறுபடுதல் உண்டு. இதை ஒருமுறை விளக்கவேண்டும்.

இம்மில் முடிவது பண்டைத் தமிழில் பன்மை.

சீனமொழியில் மகர ஒற்றில் முடியும் பன்மை உண்டு. அது இன்னும் ஓர் அன் பெற்று ஆங்கு முடியும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்





கருத்துகள் இல்லை: