வெள்ளி, 24 ஜூன், 2022

தமிழ் பரவிய நிலங்கள், மொழிகள்.

 பிரிட்டீஷ்  ஆட்சி  ஏற்படுவதற்கு முன்  இந்தியா ஒரு தேயமாக  இருக்கவில்லை. பல பகுதிகளாகப் பல்வேறு மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மொழி வழங்கிவந்தது என்று கூறலாம், தமிழ்நாடு என்ற ஓர் ஆட்சிப்பகுதியோ முழுநாடோ இருந்ததில்லை. அதனால் தமிழ்ப் பேசும் நிலப்பகுதிகளைத்  "தமிழ்கூறு நல்லுலகம்"  என்றது தொல்காப்பிய நூல்.. கிளைமொழிகளும் எழுத்தற்ற மொழிகளும் பல்கிக்கிடந்தன. ( நல்லுலகம் என்று விதந்து கூறியவதனால்,  நாடுகள் பலகொண்ட ஒரு பெருநிலப்பகுதியைக் குறித்தனர் என்றும் கொள்ளலாம்.) தமிழ் இலங்கைத் தீவிலும் வழங்கியது. பல்வேறு தரப்பினரும் அறிந்து கொள்ளுமாறு ஒரு பொதுமொழியை உருவாக்குவதற்கு  அரசியல் குமுகவியல் அழுத்தமுறுத்தும் ஒரு  தேவை பழங்காலத்தின் முற்பகுதியில் ஏற்படவில்லை என்று கூறலாம். என்றாலும் சமத்கிருதம்   ( சமஸ்கிருதம்) என்ற -  பொதுமொழி என்று கருதத் தக்க மொழியொன்று ஏற்பட்டிருந்தது. இதிற் சிறந்து விளங்கிய தொல் கவி வால்மிகி  இராமாயணத்தைப்  பாடினார். பாணரான பாணினி  இலக்கண நூல் புனைந்தார். வியாசர் என்ற மீனவப் புலவர் மகாபாரதம் ஆக்கினார். இந்நூல்களும்  இன்ன பிறவும் மக்களிடம் நன்கு பயின்று வழங்கின.

கல்வியிற் சிறந்தவர்களை அரசர்களும் உகந்தனர்,  அரசாட்சி செய்தவர்களும் சிலர் நூல்கள் பாடினர். எடுத்துக்காட்டு:  அதிவீரராம பாண்டியன் என்ற அரசர். மொகலாய அரச வழித்தோன்றல்களிலும் நூல்கள் எழுதியோர் உள்ளனர்.

சமத்கிருதத்தில் பல்வேறு மொழிச்சொற்களும் கலந்திருந்தன. சில சீனச்சொற்களும் திரிந்து புகுந்தன.   தமிழர் போருக்கென்று ஓர் இலக்கணம் வகுத்துக்கொண்டு, மற்ற மொழி பேசியவர்களை போருக்குள் உட்படுத்தி, "இமயவரம்பன்" போன்ற பட்டங்களைச் சூட்டிக்கொண்டு மற்றமொழி பேசுவோரிடம் ஓரளவு இனக்கலப்பு மேற்கொண்ட அரசாண்ட தமிழருக்கு, ஒரு பொதுமொழி ஏற்படுத்தும் தேவை இருந்தது.   அதனால் அவர்கள் சமத்கிருதமொழியை வளப்படுத்தி பிறபகுதிகளில் வழக்குக்கு ( பயன்பாட்டுக்கு) க் கொணரும் முயற்சி மேற்கொண்டனர்.( சீன உச்சரிப்புக்கு ஓரளவு ஒத்துவரும் பாலிமொழியைப்  படைத்து விரிவு படுத்தியதும் இத்தகு தேவைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இதைத் தமிழரோடு பிறரும் செய்திருக்கலாம்  ). பல்வேறு பண்டிதன்மார் இதில் ஈடுபட்டனர் என்பது அறியத்தக்கது. ( நளந்தா பல்கலைக்கழகம் இதற்கு உந்துதல் அளித்தது.)  இந்திய நிலப்பகுதிக்கு வெளியில், உரோமப் பேரரசு ஏற்பட்ட போது,  இலத்தீன் மொழி உருவாக்கப் பட்ட காலை, தமிழிலிருந்து பல சொற்களை நம்புலவர்கள் கொண்டு சென்று உதவினர்.  இந்த நெருக்கத்தின் காரணமாகப் பல தமிழ்ச்சொற்கள் இலத்தீனுக்குள் புகுந்தன. வணிகத்தின் மூலமாகவும் தமிழ் பரவிற்று. சுமேரியா முதலிய இடங்களிலும் தமிழ் வழங்கியுள்ளது.

இதையும் அறிந்துகொள்க:  மெசோபோட்டேமியா

https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_16.html  மிசைப்போதுமே(வி)ய

மிசைப்பொழுது  -  சூரியன் உயர்நிலையில் இருக்கை. (வெப்பமிகுதி)

ஈராற்று நாடு -  ஈராக்,    ஈராக்கு ( ஈராக்குதல் ) இரண்டாகுதல்.   ஆறு இரண்டாகப் பிரிதல். Land of Two Rivers 

நல்லது என்பதைத் தெரிவிக்கும் சொல்லே  bon, bona ( f),  bonus (m)  என்ற சொல்வடிவங்கள்.

பொல் ,  பொன்.  லகர நகரப் போலி

bon =  பொன்(னான).   cf  pawn.  (pawnshop).

செல்வம் என்பது பல உருக்கொள்ளும். அவற்றுள் நல்லது, உயர்ந்தது பொன் என்னும் உருவம்.   ஆகவே நல்ல என்ற பொருள் பெறுபொருள். derived meaning.

bona என்ற சொல்லின் ஆய்வில் இந்தோ ஐரோபிய ஆய்வாளர்கள் தடுமாறியுள்ளனர். இதைப் பின்னர் அறிவோம். அவர்களைக் குறை சொல்வதற்காக இது எழுதப்படவில்லை.

பொன்னான பயணம்,  இதுவே bon voyage என்று இந்தோ ஐரோப்பியத்தில் வருகிறது.

தோகை என்ற சொல் இஸ்ரேலின் மொழியில் சென்றது போலுமே இது.

P, B   p or b  என்பவற்றில் வேறுபாடில்லை.  சில ஐரோப்பிய மொழிகளை ஆய்ந்து காணவும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

சில திருத்தங்கள்: 26.6.2022  0625

கருத்துகள் இல்லை: