ஞாயிறு, 19 ஜூன், 2022

நோய்க்கு நல்ல பானம். மருந்துகள் ?

 கொழுந்துநீரைக்  குடிக்கலாமே  குணமுண்டு கூறுவர்காண்

குளம்பிநீரும்  குடித்திடலாம்  குறையதனால்  இலைகாண்பீர்!

எழுந்துநட  மாடுதற்கோ  இயன்றிடாத நிலைவரினோ

சிறந்ததெனச்  செவிகொள்வது பசும்பாலே பிறிதுளதோ?.


பொருள்.-----  கொழுந்துநீர்  -  இது தேநீர். இதைக் குடிக்கலாம், இதிலும் குணமுண்டு என்று கூறும் மக்களும் நூல்களும் உள்ளன.  அதெபோல் குளம்பிநீர் என்னும் காபியைக் குடிக்கலாம், குறையொன்றும் ஏற்படாது என்போரும் உள்ளனர்.  ஆனால் மூப்பினால்  எழுந்து நடமாட முடியாத நிலையில் நாம் செவி வாயிலாய் அறிவது பசும்பால் நல்லது என்பது, வேறு குடிநீர் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

குடும்பத்துக்குப் பசுமையைத் தருவதனால்  பசு  -  பசு.  மாடல்ல மற்றையவை என்று வள்ளுவனார் விளக்கியுள்ளது காண்க,






படம்:  அன்பர் ஒருவர் கொழுந்துநீர்  அருந்துகிறார்,  அது நல்ல தேறல்தான். எதற்கும் மருத்துவரை நாடி  ஆலோசனை பெறுங்கள்.


இன்றுபோல பின்னாளில்  நன்றுபல மருந்துகளும்

மன்றுமனைமருதகங்கள் எங்கெனினும் கிடைத்திடவே

வென்றநிலை உலகினிலே  விலகாது நிலவிடுக.

சென்றிடுக போர்கலகம்  சீரமைதி  உலகினிலே..


பொருள்.------  இன்று மருந்துகளும் பிறபொருள்கள் போல எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. இது ஒரு வெற்றிபெற்ற நிலை என்று சொல்லலாம்.  பொருட்பகிர்வு என்று வரும்போது  மக்களுக்குப் பொருட்கள் சென்று சேராத நிலையை வென்றநிலை இதுவாகும்.  இது உலகில் தொடரவேண்டும். பயன்பாட்டுப் பொருள் பகிர்வுத்திட்டங்கள், உலகத்தில் தொடரவேண்டும். அதற்குத் தடைகளே நாம் ஏற்படுத்தக் கூடாது.  போர், கலகம் முதலியவை  உலகை  விட்டு நீங்கவேண்டும்.  உலக அமைதி முதன்மையாகும்.( Maintain supply chain ).



மருந்து அடுக்கும் பலகை


மருந்துகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பலகைவரிசை.

எதை உட்கொள்வதால் நோய் வருகிறது என்று உணர்ந்து கொள்வதை முதன்மையாகக் கருதினாலும், நோய் வந்த பின் மருந்துகள் உண்டு அந்நோய்களை விலக்கிக் கொள்வதும் முதன்மையானதே.  மருந்துகள் கிடைப்பதையும் உறுதி செய்க என்பது கருத்து.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.





கருத்துகள் இல்லை: