திங்கள், 28 பிப்ரவரி, 2022

பணவழங்கி முன் பதற்ற உரையாடல்

 தவறான எண்களை அழுத்தி,  அதனால் பணவழங்கி  ( ATM  ) எந்திரம் உங்கள் தொடர்பு  அட்டையை விழுங்கிவிட்டால், அதனால் பதற்றம் அடைவோர் உண்டு. நீங்கள் ஒரு குற்றமும் அற்றவர்,  ஞாபகக் கோளாற்றினால் தவறான எண்களைப் பலமுறை அழுத்திவிட்டீர் என்பது அந்தப் பணவழங்கிக்குத் தெரிய வழியில்லை. என்னதான் செய்வதென்பதை அந்த இயந்திரங்களின் ஒரு புறத்திலே எழுதிவைத்திருப்பார்கள். அங்கும் தெரிந்துகொள்ளலாம்,  அறிந்தோரிடம் கேட்டும் தெரிந்துகொள்ளலாம். அதிக வயது ஆனவர்களுக்குத் தாம் இத்தகு தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன போலும்.

இதுதொடர்பாக, இங்கு இன்னொரு படமும் உள்ளது. கண்டு மகிழ்க; இதுபோலும் நிகழ்வுகளின்போது இளைஞர்கள் உதவலாம் என்பதை முன் இடுகையில் பரிந்துரைத்திருந்தோம்.

அந்த இன்னொரு படம் இங்கு:-



உந்துகள் நிறுத்திடத்துடன் இந்த இயந்திரங்கள் உள்ளபடியால் யாவர்க்கும் வசதியாய் உள்ளது.. மறுபுறம் கடைகள் உள்ளன.

கருத்துகள் இல்லை: