வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

முன்வாழ்வைப் பின்பற்றும் இனிய புதுவாழ்வு.

 மறத்தலும் கூடுமோ மரஞ்செடி  கொடிகளை

அடுத்துமுன் அன்னவர் அடைந்துயர் வளவாழ்வு

அடுக்குயர் மாடியில் அகஞ்செலும்  நலத்திலும்

கொடுக்குபோல் பைஞ்செடிக் கொளுங்கலப்  பயிர்செய்வர்


அடுத்துமுன் அன்னவர் அடைந்துயர் வளவாழ்வு  ---

முன் இவர்கள் இருந்த இயற்கையை அடுத்த வளமான வாழ்வு;

அகஞ்செலும் -   மனம் ஆழ்ந்திருக்கும்.

நலத்திலும் -  வாழ்க்கை நலத்திலும் அல்லது உயர்விலும்

கொளுங்கலம் -   செடிவளர்க்கும் கலங்கள்

கொளும் -  கொள்ளும்.  தொகுத்தல்விகாரம்.:

கொடுக்குபோல்  -  முன்னைப் போக்கிலே போவதுபோல்


இக்கவி தொடுக்கபட்ட விதம்:  இரண்டாம் அடியின் நான்காம் சீரும்,  நாலாம் அடியின் நான் காம்சீரும், புளிமாங்காய்ச் சீர்களாகத் தொடுக்கபட்டன. மற்ற சீர்கள் ஆசிரியத்துக் கிசைந்த இயற்சீர்கள்,  ஆசிரிய அல்லது வெண்டளை. இக்கவியில் எழும் ஓசை. பிடிக்கிறதா பாருங்கள். பின்னூட்டம் இடவும். 

 


கண்டு மகிழ்க

.  மெய்ப்பு பின்

கருத்துகள் இல்லை: