திங்கள், 28 பிப்ரவரி, 2022

சாமிக்குச் செய்தது கேசரி.


சாமிக்குச்  செய்தது கேசரி  -----  சீனிச்

சார்பினில் இனிக்கும் கேசரி!

நேமித்துத்  தந்தனர்  பேறிது ---- இதை

நித்தலும் கொள்வ தெடைதரும்.


இறைவன் தந்த  தென்பதால் ---  தீமை

ஏதும் கூடாமல் காப்பதால்,

குறைவாய்க் கொஞ்சம் உண்ணலாம் --- ஆத்தும

குதூக  லம் மகிழ்ந்  தெண்ணலாம். 


சீனியை  மிஞ்சிய இனிமையில் ---  இதைச்

செய்து முடித்தது  மடைப்பளி, 

மேனிலை ஏய்ந்ததும் எப்படி  --- அறிவார்

சீனியை ஆய்ந்தவர் காண்கிலம்.


சார்பினில் -  ( சீனி அதிகமான ) பாங்கினால்

நேமித்து -  எம்  ஏற்பாட்டினால் பூசை செய்து,

நித்தலும் -  தினமும்

கொள்வது - உண்பது

பேறிது -  பேறு இது : இது எம் பாக்கியம் என்றபடி.

மடைப்பளி,  மடைப்பள்ளி, கோயிலில் சமைக்கும் இடம்

மேனிலை ஏய்ந்தது ---  (சீனி) கூடிய  நிலையை அடைந்தது

அறிவார் சீனியை ஆய்ந்தவர் --- சீனி ஆய்வு செய்தவர்களுக்கே தெரியும்.

இவ்வளவு இனிப்பாக இருப்பது எப்படி என்பது தெரியவில்லை.  சீனைய

மிஞ்சிய இனிப்பாய் உள்ளது.

காண்கிலம் -  எமக்குத் தெரியவில்லை.



கேசரி என்ற சொல்:

கூழ் என்பது முன்பாதியில் உள்ள சொல்.  இன்னொரு பின்பாதிச் சொல்: சரி.

அதிகமாகக் கூழாகிவிடாதபடி,  சற்று இளகிய நிலையிலே  :" சரியாகச்" 

செய்யப்படுவது.   கூழ் என்ற சொல்,  

கூழ் வரகு என்பதில் கூழ் -   கேழ் ஆகிற்று. அதுபோலவே இங்கும் சொல் திரிந்துள்ளது.  கேழ்வரகு என்பது பின்னும் கேவர் என்ற் திரிந்து வழங்குகிறது.

 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

[இரண்டு எழுத்துப் பிறழ்வுகள் திருத்தம்

02032022 1126]






தனிக்குறிப்பு

==========================================================

இது தனிவாசிப்புக்காக எழுதப்பட்டாலும் கவனக்குறைவான்  வெளியோரும் வாசித்துவிட்டனர்.  ஆகவே இந்தப் பகுதி இங்கு கைவிடப்படுகிறது. அழிக்கப்படவில்லை.


ஆசிரியர்க்கு not for public - do not read

 பஞ்சமி

வலை -  வளை  தொடர்பு

சாம்பவன் - ஜம்பவான்

கருத்துகள் இல்லை: