செவ்வாய், 27 ஜனவரி, 2015

வெள்ளப் பெருக்கினை.........

வெள்ளப் பெருக்கினைப்போல் == மூளை
வேலை செயத் தொடங்கி
நள்ளி  ரவுகழிந்தும் == எண்ணம்
நயமாய்க் குவிந்ததடி!

நுள்ளி விரல்களிலே --- வெல்லம்
நுகரக் கிடைத்ததுபோல்
கள்ளம் இலாததடி --- சுவை
காணப் பொருந்துவதே ,

கொழுந்துச்  சுடுநீ ரை   === அருந்தவிக்
கோலம் விளைந்ததுவோ?
எழுந்த கருத்துகளும் -=== கவியின்
விருந்தாய்  இனித்திடவே

கொழுந்துச் சுடு நீர் -  hot tea.




கருத்துகள் இல்லை: