சனி, 10 ஜனவரி, 2015

இபாரத்து

இபாரத்து  என்ற சொல்லைப் பயன்படுத்தி ஒரு சிறு கவிதை எழுதினேன்.
இது சுபாஷ் ஆனந்தன்  என்ற வழக்குரைஞரின் மறைவு குறித்த பாடலில்  இடம்பெற்றிருந்தது.


http://sivamaalaa.blogspot.com/2015/01/subhas-anandan-condolences.html இச்சொல் எழுத்து பேச்சு முறைகளைக் குறிக்கும்.

இச்சொல் அமைந்தது எப்படி?

எழுத்து பேச்சு  முதலியவை மென்கலைகள்,

கல் அரிசி மூட்டை போன்று பாரம் இல்லாதவை. பருப்பொருள் அல்ல

இல்  >  இ  :  இது கடைக்குறை.  இல்லாமை குறிப்பது

பாரத்து :  பாரம் +   து,  பாரத்தை உடைமை. 

ஆகவே இபாரத்து எனில் பருப்பொருள் அல்லாதது  அல்லது பாரம் உடையதாய்   இல்லாதது.

இச்சொல் யார் அல்லது எந்தக் குழுவினர் வழங்கிய சொல் என்று தெரியவில்லை.
(
The template in this blog seems to have been altered by some external forces/  Let us see if it comes back to normal.)

கருத்துகள் இல்லை: