புதன், 14 ஜனவரி, 2015

மூர்த்தி.

முகிழ் என்ற வினைச்சொல் மூர் என்று திரியும்.  புகு என்பது பேச்சு வழக்கில் பூர் என்று திரியவில்லையா?

அந்தப் பூனையால் அந்த இடுக்கிலே "பூர"  முடியலே

என்று பேசுவர்.

முகிழ்த்தலாவது :  தோன்றுதல்.  மேலெழுதல்.  

முகிழ் > மூர் >  மூர்த்தி.  

மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது.

"வாரும் வடமுந் திகழு முகிழ்முலை வாணுதலே " என்பதும் காண்க.  (யாப்.)

கருத்துகள் இல்லை: