வெள்ளி, 20 ஜூலை, 2018

சிவன்முன் ( விளக்கம்).

சென்ற இடுகையின் தொடர்ச்சி:  http://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_56.html


சென்ற இடுகையிலிருந்து தொடர்வோம்:

http://sivamaalaa.blogspot.com/2018/07/blog-post_56.html 


பாட்டு: உரை வடிவில்:


பிரம்மனிந்   திரனைச் சார்ந்து  பேச்சிலா விரதம்    பூண்டும் உரம்நிகர் பத்தி மூண்டும் உலகிதை உணர்ந்  தரன்தன் திறம்திகழ் சிவமாலைதான்
சேர்ந்தவண் பணிந்து  நின்றார்;
வரம்தரப் பெற்றார் ; 
எற்கே  வந்த  கனாவே நேற்றே.

பொருளுரை:

பிரம்மன்  இந்திரனைச் சார்ந்து ----  பிரம்ம தேவனானவன் இந்திரனிடத்துச் சென்று சேர்ந்து;
உரம் நிகர் பத்தி பூண்டு  ---  ஆன்மாவுக்கு உரம் போன்ற  பக்தியினை
மேற்கொண்டு; 
பேச்சிலா விரதம் மூண்டும்  ---  மோனம் என்னும் விரத்தத்தை 
அவனுடன்  தொடங்கியும்;
உலகிதை உணர்ந்து ----   இவ்வுலகில்  மக்கள் போற்றுதலை அறிந்து;

அரன் தன் திறம் திகழ் சிவமாலைதான் சேர்ந்து  ---சிவனாரின் வல்லமை விளங்கும் சிவமாலையை அவர்கள் பார்வை அடையும்படியாக;

அவண் --- அங்கு சிவபெருமானின் முன்;

பணிந்து நின்றார் ---  வணங்கி நின்றனர்;

வரம் தரப் பெற்றார் ---  அதனால் சிவனின் வரம் பெற்றனர்;

நேற்றே ---  இன்று முன் நாளில்;

எற்கே  வந்த கனாவே    --- இது எனக்கே வந்த கனா ஆகும்.



அடிமுடி காணாப் பெரியோனாகிய சிவத்தையே பிற தெய்வங்களும்
வணங்கலுற்றன.

கருத்துகள் இல்லை: