சனி, 7 ஜூலை, 2018

தாழ்வரு பொருள்கள்: தாவரம், தாபரம்.

கேரள மொழியில்  "கீழே" என்பதை "தாழ"  என்றுதான் சொல்வார்கள்.  தாழ்தல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இதுவும் பொருத்தமானதே ஆகும்.  தமிழிலும் கதவின் கீழ்ப்பக்கத்தில் இடப்பட்டு  அது  திறப்பதைக் கட்டுப்படுத்தும் கோலுக்கு " தாழ்க்கோல்" என்று சொல்வதுண்டு.

தாழ்க்கோல் என்பது பேச்சில் தாக்கோல் என்றும் திரிந்து வழங்கும். இதற்கு மற்ற பெயர்கள்: தாப்பாள், தாழ்ப்பாள் என்பன.  சிலர் தாப்பா என்றும் சொல்வதுண்டு.

தாழ்ப்பாள் என்பது:  

தாழ் > தாழ்ப்பு >  தாழ்ப்பு+ ஆள் >  தாழ்ப்பாள்.

முற்காலங்களில் தாழ்ப்பாள் என்பது மரத்தினால் அல்லது கட்டையினால் ஆனதாக இருந்தது.  இன்றும் சில பழங்குடிகள் வாழும் சிற்றூர்களில் மரத்தினால் ஆன தாழ்ப்பாள் இடப்படுவதுண்டு.

தாழ இடப்படும் கோல்போல் இன்னும் பாதுகாப்பாக மேற்பக்கத்திலும் கதவில் ஒரு கோல் இடப்படுவதுண்டு.  இதற்கும்  "தாழ்ப்பாள்"  என்றுதான் பெயர்.  இதற்கு மேற்பாள் என்று பெயர் ஏற்படவில்லை. இதற்கு ஒரு புதுப்பெயர் தேவையற்றது என்று மக்கள் கருதிவிட்டனர்.  தாழ் என்ற சொல்லில் உள்ள இடக்குறிப்பைக் கருத்தில் கொள்ளாமல் தாழ் இருந்தாலும் மேலே இருந்தாலும் தாழ்க்கோல் என்று குறித்தால் போதுமானது என்று முடிவு செய்தனர்,  அச்சொல்லினைப் பயன்படுத்துவோர்.

இப்படி மொழியில் பயன்படுத்துவதை இலக்கணம் தவறு என்று ஒதுக்குவதில்லை. அந்தப் பொருளைக் குறிக்க ஒரு சொல் வேண்டும். அது தாழ்க்கோல் என்று இருந்தால் என்ன?  டுங்டோங்க்  என்று சீனச்சொல்போல் இருந்தால் என்ன? இன்றிலிருந்து நான் டுங்டோங்க் என்று சொல்லும்போதெல்லாம் நீ தாழ்க்கோலைக் குறிக்கிறேன் என்று தெரிந்துகொள். அதற்கு வேறு பொருளில்லை என்று வரையறுத்துவிட்டால் அதுவும் கடைப்பிடிக்கப்படுமானால் அது அதற்குப் பெயர்.  அவ்வளவுதானே. ஒரு மொழியின் நோக்கம் என்பது நன்றாகவே நிறைவேறிவிட்டது அன்றோ? டுங்டோங்கை விடச் சிறந்த சொல் உலகில் வேறில்லை. இப்படி ஒவ்வொரு சொல்லும் எதைக் குறிக்கிறது என்று வரையறுக்கப்பட்டதுதான் மொழி எனப்படுகிறது. பேசுவோரிடையே ஒவ்வொரு மொழியிலும் ஓர் வரைவறவுள்ள ஒப்பந்தம் இருக்கிறது, அது எழுத்திலில்லா ஒப்பந்தம். அதைக் கடைப்பிடிக்கின்றனர். அதனாலும் மொழி வாழ்கிறது.

தாழ் என்ற சொல் தாழ்விடம் குறிக்காமல் மேலிடத்தையும் உளப்படுத்துமாயின் அச்சொல் தன் வரையறையை மீறிப் பொருள் விரிந்தது என்பதை இலக்கணம் ஒப்புக் கொள்கிறது.  ஒரு காரணத்தால் அப்பெயரில் "தாழ்" போய்ப் புகுந்தது.  அப்போது அதற்குக் கீழ் என்று பொருளாய் இருந்தது,  அப்புறம் அது மேலையும் குறிக்குமானால் அந்நிலையில் அது காரண இடுகுறி  ஆகிவிடுகிறது.  அறவே காரணம் அறியமுடியாத பெயர்களும் மொழியில் உள்ளன. அவை வெறும் இடுகுறிகள் எனப்படுகின்றன.

சொல்லாய்வின்  மூலம் முன்னர் காரணம் அறியப்படாத பல சொற்களின் பொருளை நாம் இன்று கண்டு மகிழ்கிறோம். இப்படி அறிவதன்மூலம்  ஒரு பொருள் உண்மையில் எதைக் குறிப்பிடுகிறது என்று நமக்கு ஏற்படும் மாறாட்டத்தை மாற்றிக்கொண்டு சொல்லினைத் தக்கவாறு வாக்கியங்களில் பயன்படுத்தச் செய்கிறோம்.  நம் எழுத்துத்திறன் மேம்படுகிறது. கருத்தறிவிக்கும் நம் மொழியின் நோக்கமும் செவ்வனே நிறைவடைகின்றது.  இனி வரும் புதிய பொருள்களுக்கும் எப்படிப் பெயரிடலாம்,  பெயரிடுவதில் என்னென்ன உத்திகளையும் தந்திரங்களையும் கையாளலாம் , எப்படி இனிய சொற்களைப் படைத்து  இன்புறுத்தலாம் எனப்  பல்திறன் அடைகின்றோம்.

நல்ல பெயரானால் மக்கள் விரும்பும் மனிதராக வாழலாம் என்பதைத் தலைவர்கள் பலர் கண்டு பயன்படுத்திக்கொண்டுள்ளனர். காந்தி என்ற பெயர் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகிறது.

பாணன் என்பது ஒரு குலத்தொழிலரின் பெயர்.  பெயரில் குலம் பற்றி ஒன்றுமில்லை.  பாண் என்றால் பாட்டு.  பாடுகிறவன் பாணன். அவ்வளவுதான்.  ஆனால் இவர்கள் ஒரு குழுவினராக வாழ்ந்து குமுகத்தில் தொழில் நடத்தினர். அதனால் ஏற்புடைமை பெற்றனர். ஒரு பாணர் வடமொழிக்கு இலக்கணம் எழுதப் புகுந்தார்.  தம் இயற்பெயரால் தமக்குமட்டும் பெருமை தேடிக்கொள்ளாமல் தம் கூட்டத்தினருக்கும் பெருமை தோன்றும்படி விளங்க எண்ணினார்.  ஆகவே தம் குலப்பெருமை மேலோங்குமாறு  பாண்+இன்+இ  =  பாணினி என்று வைத்துக்கொண்டு,  பாணினியின் இலக்கணம் என்று தம்  இலக்கண நூலை
வெளியிட்டார். எழுதியோன் பாணர் குலத்தினன் என்பது இதன் திரண்ட பொருள். இவ்வியல்  இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றது.  இதேபோல் வால்மிகியாரும் தம் இனப்பெயராலே தம்மைக் குறித்துக்கொண்டு இராமயணக் காவியத்தை இயற்றினார்.  மீனவப் புலவனான வேதவியாசனும் தம் மீனவக் குலப்பெயர் விளங்க மகா பாரதம் என்று தம் நூலுக்குப் பெயரிட்டார்.  பரதவர் எனின் மீனவர் என்பது.  பரந்தது விரிந்தது அகன்றது என்றால் அது கடல். பர > பரதவர் என்றால் கடலில் தொழிலுடையோர். அவர்கள் பின் ஆட்சியாளர்கள் ஆயினர்.பாண்டிய மன்னருக்கும் கொடியில் மீன் இடப்பட்டுள்ளதையும் கருதவேண்டும்.  பண்டை இருந்தோர் பாண்டவர் எனப்பட்டனர்.  இப் பண்டை நிகழ்வுகளிலிருந்து நமக்குப் "பாரதம்" என்ற நாட்டின் பெயரும் கிட்டியது. ஆனால் காலக்கழிவினால் பரதவர், பரவை, என்பதில் உள்ள மீன் தொடர்பு இன்று மறைந்துவிட்டது.  மனித நாகரிகம் என்பது பெரிதும் கடலையும் ஆறுகளையும் வனங்களையும் சார்ந்து எழுந்ததாகும்.  இதனைத் தமிழ்ச்சொற்கள் இன்றும் காட்டுகின்றன.   சொற்களை ஆய்ந்து நாம் வரலாற்றையும் சிறிது கண்டுணர லாகும்.

ஆரியர் என்போர் இந்தியாவிற்குள் வந்தனர் என்ற கதையும் சொற்களை ஆய்ந்ததன் பயனாய்க் கூறிய தெரிவியலே ஆகும்.

 

இனித் தாழ்ப்பாளுக்கு வருவோம்.  தாழ இருக்கும் கோல்தான் கதவை ஆள்கின்றது,  அடைத்தல் திறத்தல் தடுத்தல் விடுதல் எல்லாம் அதன் ஆட்சிச் செய்கைகள்.  அச்சொல்லின் ஆள் என்பது நன்றாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது, பழைய பாட்டுப்பெட்டிகளில் இருந்த சுருள்விரி எந்திரம் தகுந்தமுறையில் சுற்றுகின்ற இயக்கத்தை ஏற்படுத்த "கவர்னர்"  என்றோர் கட்டுப்பாட்டுக் கருவையை வைத்திருந்தனர். இன்றும் வேறு இயந்திரங்களிலும் மட்டுறுத்தும் உறுப்புக்ள் உள்ளன.

தாழ்ப்பாள் என்பது தாப்பாள் ஆனது திரிபு.  ழகர ஒற்று மறைந்தது. இதேபோலத் தாழ்வரம்  ( தரையில் முளைத்து வருபவை)   ழகர ஒற்று இழந்து தாவரம் என்றாகும். இனி, வகரம் பகரமாகுமென்பதால்  தாவரம் என்பது தாபரமும் ஆகும்.

தாபரம் என்பதற்குத் தாழப் பரவும் செடிகொடிகள் என்று பொருள்.  பர என்பது பரமாகும்.  பரத்தல் :  பர+ அம் = பரம்.  தாழ்+ பர + அம் =  தாபரம்.  (ழ்)

தாழ அணியப்படுவது தாழ்வணி:  இது தாவணி ஆனது. ழகர ஒற்று வீழ்ந்தது. தாழ்மதித்தல் தாமத்தல்  ஆனது.  தாழ ( நீருடன்) மருவி நிற்பது  தாமரை என்றனர்.  தா+மரு+ஐ.

அறிந்து மகிழ்வோம்.

பிழைத்திருத்தம் பின் கவனிக்கப்படும்.

வெள்ளி, 6 ஜூலை, 2018

முகமாவு பூசிக் கவின்பட்ட சொற்கள். word cosmetics

வாஸ்தவம்:

வாஸ்தவம் என்பதை பலமுறை பேச்சில் கேட்டிருக்கிறோம்.  வாய்மை என்ற சொல்லும் அதையே குறித்தது.  என்றாலும் அது பெரும்பாலும் இலக்கிய வழக்கில் மட்டுமே உண்டு.  ஓய்வாக நண்பர்கள் வந்து பேசும்போது வாய்மை என்று சொல்வதில்லை. ஒருவேளை இலக்கியத்தைப் பற்றிய உரையாட லானால் வாய்மை என்ற சொல்லைக்  கற்ற நண்பர்கள் பயன்படுத்துவ துண்டு,

வாய் > வாய்மை.

வாய் >  வாய்த்துவம் > வாஸ்துவம் > வாஸ்தவம்.

இதில் இறுதியில் வந்த தவம் என்ற சொல்லை நோக்குங்கால், வாயினால்கூட ஒரு தவம் மேற்கொள்ளலாம்போல் தெரிகிறது!!   உயர்த்தி என்பதை ஒரு தொழிற்பெயராகக் கொண்டு இதுவரை யாரும் போதிக்கவில்லை என்று தெரிகிறது.  எல்லா போதனை இடங்களிலும் யாமில்லை ஆதலால் எமக்குத் தெரிந்தவரை இல்லை.  உயர்> உயர்த்தி என்ற சொல் நாளடைவில் ஒரு முகமாவு பூசி அழகடைந்த பெண்ணைப் போல் ஒஸ்தி என்று சிலரால் உச்சரிக்கப்படுகிறது.   உயர்த்தி இல்லையென்பது அவர்களுக்கு  ஒஸ்தி யாகவே உள்ளது. அது எவ்வாறாயினும் வாய்த்துவம்  (வாய் > வாய்த்து;  இங்கு து = உரியது உணர்த்தும்;   +அம் என்பது விகுதி. ) பின் வாஸ்தவம் ஆனது. துவம்> தவம் . தவமொன்றுமில்லை; து அம் > துவம் தான்.  இரண்டு விகுதிகள்.

வாய்த்துவம் என்பதே முன்வடிவு ஆதலின்  வாஸ்தவம் என்பதை வாய்த்துவம் என்றே எழுதினால்தான் என்ன?  வாய்மை என்ற செந்தமிழ்ச் சொல்லின் "வாய்" என்ற அடிச்சொல் கொண்டுதானே  வாய்த்துவம் எனற்பாலதும் அமைந்துள்ளது காணீரோ?

 நெய்த்தோலி:

நீங்கள் நெய்த்தோலி சாப்பிடுவதுண்டோ?  அப்படியானால் நெய்த்தோலியில் யகர* ஒற்றுத் தொலைந்து,  நெத்தோலி > நெத்திலி ஆனதை  வாய்த்தி > வாத்தி   (teacher ) யுடன் ஒப்பிட்டு மகிழ்ந்துகொண்டே சாப்பிடுங்கள்.

ஓகாரம் இகரமாகுமோ?  ஆகாது என்றால்  நெய்த்தோலியின் தோ(ஓ) பின் தி (இ) ஆனதைப் பார்த்து ஆகுமென்று உணர்வது கடனே.

உடல்,  தேகம். :

நம் உடலின் உள்ளுறுப்புகள் மேலாடைபோல் தோலைப் போர்த்திக்கொண்டு  , அதாவது உண்மையில் தோலை உடுத்துக்கொண்டிருப்பதால்,  அது உடலாகிவிட்டது.  உடு> உடல்.  அல் என்பது ஈற்று விகுதி,  என்புதோல் போர்த்த இவ்வுடல் தேய்வு கண்டு தேவு காணும்.  தேய்ந்து அழிவதாகலின், அது தேய்+கு+அம் =  தேய்கம் ஆனது.  வழக்கம்போல் இதுபோலும் சொற்களில் யகர ஒற்று வீழ்தலின்,  தேகம் என்று இருக்கை கொண்டது.   யாக்கை நிலையாமையைத் தமிழ் நூல்கள் பல்லாற்றானும் கொணர்ந்து நிலைநாட்டுகின்றன.  இதன் பின்னணியில் அமைந்த சொல்லே தேகம். ஏனை மொழியிலும் சமயங்களிலும் வலியுறுத்தப்படுவதும் இதுவாகும்.  சொல்லமைந்த தொடக்கத்தில் இது இறுதியழிவு வலியுறுத்தும் சொல்லாதலின் பெரிதும் வழங்கப்படவில்லை.  ஒரு மணமகன் புதுப்பெண்ணைத் தொடும் காதல் காட்சிக்கு இச்சொல் பொருந்தாத சொல்லே.  காரணம் ஆயிரம் காலத்துப் பயிரான மணத்தைக் குறிக்க எழும் காட்சியில் மங்கலமற்ற எண்ணத்தை அது முன்னிறுத்துகிறது.  காலம் செல்லச் செல்ல அதன் தேய்வு அல்லது அழிவுக் கருத்து  மறைந்தபின்னரே இது வழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதே பொருத்தமாகும்.  இச்சொல் ஏனை மொழிகளில் ஏறிய காலை இம் மனத்தடை இருக்கவில்லையாதலால் அவ்விடங்களில் இச்சொல் நன்`கு  ஏற்றுக்கொள்ளப்பட்டதென்று கருதுதலே உண்மையோடு ஒட்டியதாகும்.

இராமலிங்க அடிகள் இச்சொல்லை நன்`கறிந்து பயன்படுத்தியுள்ளார். அவர்:

"உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உன்னை மறவேன்..."

என்று இறையிடம் இறைஞ்சுகின்றார்.  அழிவு பற்றிக் கூறுமிடத்து இச்சொல் பெய்யப்பட்டிருப்பதால் மிகுந்த பொருத்தமுடைத்தென்று ஒப்புதலே அறிவாம்.

இந்த உள்ளுறுப்புகள் யாவும் தோலை மேலாகப் போர்த்திக்கொண்டதனால் உடலாகியும்   தேய்ந்தழிதலால் தேகமும் ஆனது.   இன்னும் சொல்லப்போனால் ய ர  ல வ ழ ள ஆகியவற்றில் ஒற்றுக்களும்  பிற ஒற்றுக்களும் கெட்டுத் திரிசொற்களும் அமையும்.   எவனாவது வந்து சொல்வான் தெரிந்துகொள்ளலாம் என்றிருக்காமல் சொந்தமாகவே கண்டுபிடியுங்கள். அதுவே நன்று.

உடலின் மேற்புறத்தையே நாம் கண்டு அதனை உடல் என்று அறிகிறோம்.  அதற்கு அழகுப் பூச்சுக்களும் வாசனைகளும் தடவுகின்றோம்.  அதனால் மேனி என்ற சொல் இத்தகு சூழ்நிலைகளில் பொருத்தமுடைய சொல்லாகும்.  சந்தனத்தைத் தேகத்தில் பூசிக்கொண்டாள், யாக்கையில் பூசிக்கொண்டாள் என்பதை விட  மேனியிற் பூசிக்கொண்டாள் என்பது பொருத்தமான சொல்லாட்சியாகும்.   மேல்> மேலி> மேனி என்றமைந்தது இது.  "மேல"  என்ற முற்றுச்சொல் மேன என்றே தொல்காப்பியனாரால் ஆளப்படுகிறது.  லகரம் னகரமாவது சொன்னூல்படி அமைந்தது ஆகும்.  பிற மொழிகளிலும் இத்திரிபு உள்ளது. மேலோன் என்ற சொல்லும் மலையாளத்தில் மேனோன் எனவும்,  மேலன் என்பது மேனன் எனவும் வருமென்பதறிக.

மேனகை என்ற பெயருக்கு வேறு சொல்லமைப்பைப் பிறர் தந்திருப்பினும்,  மேல்+நகை = மேனகை எனவரும்;  அது ஆகுபெயராய் மேலான நகை அல்லது சிரிப்புடையாள் என்று பொருந்தும் பொருள் தரும்.  ஆனால் இதில் வரும் "ன" என்பது புணர்ச்சியினால் தோன்றியதாகும். மேனகை என்பது கிட்டாதவருக்கு மேல் வருத்தம் தருபவள் என்றும் தமிழ்வழிப் பொருள் கூற ஒக்குமெனினும் அது ஈண்டு சொல்லப்படாது.

யாக்கை என்பது யாத்தல் அல்லது கட்டுதல் என்ற பொருளி லமைவுற்றதாகும். யா+கை என்று கூடிய இச்சொல்லின் கை என்பது தொழிற்பெயர் விகுதி.

சோகம்,  மேகம், வாத்தியம்,

சோர்தல் என்பது உடல் சோர்தல், மனம் சோர்தல் என்றிரு வகை.இதைக் குறிக்க எழுந்த சொல்லே சோகம்.  சோர்+கு+அம் =  சோர்கம் ஆகி, பின் ரகர ஒற்று வீழ்ந்து சோகம் ஆயிற்று. (  ரகர ஒற்று ).   மேலிருப்பது மேகம். மேல்+கு+அம் =  மேகம்  ஆயிற்று.  (  லகர ஒற்று ).   பழங்காலத்தில் இசைக்கருவிகளை எல்லாம் ஒன்றாக வைத்து இயக்கி  மணவிழா போன்றவற்றில் வாசித்தார்கள்.  இயம் என்றாலே இசைக்குழு.   வாழ்த்திப் பாடி இசைத்தால் அது வாழ்த்தியம்.   அது பின் திரிந்து வாத்தியமானது.  (  இங்கு ழகர ஒற்று வீழ்ச்சி ).  பின்னாளில் செத்தவீட்டில் வாசித்தாலும் வாத்தியம் ஆகிவிட்டது.  இது ஒரு சிக்கன நடவடிக்கை.  வாழ்த்தி இசைக்கும் கருவிகள் வாழ்த்தியமானால் அழுது இசைக்கும் கருவிகள்  அழு+ இயம் =  ஆழியம் என்றோ சோர்+கு+ இயம் = சோர்கியம் > சோகியம் என்றோ ஒரு சொல்லை நம் மக்கள் படைத்துக்கொள்ளவில்லை. உள்ள சொற்களையே பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்.   பிழைத்த வீட்டில் தேநீர் அருந்தினால் அது தேநீர்; இறந்த வீட்டில் தேநீர் அருந்தினால்  அதுவும் தேநீர்தான். இன்னொரு சொல் தேவை இல்லை.  வாழ் என்பதில் ழகரத்தை எடுத்துவிட்டால் போதும் என்று விட்டது ஒரு கெட்டிக்காரத் தனம் என்றே நாம் சொல்லிக்கொண்டிருப்போம்.

ஆனால் எல்லா இசைக்கருவிகளும் பங்குகொள்ளும்படியாக முழுமையான குழுவாய் வாசிப்பது ஆரியம் என்று சொல்லப்படும்.  அப்போது ஆடும் கூத்து ஆரியக் கூத்து.   ஆர் = நிறைவான; இயம் = வாத்தியங்கள் அமைந்த;  கூத்து = நடனம்.  ஆரிய என்பது   ஆர் இய(ம்).  மனிதர் எவரையும் குறிக்கவில்லை.

ஆரிய என்பது உயர்ந்தோன்; அறிவாளி என்ற பொருளில்தான் இந்திய நூல்களில் காணப்படுகிறது.  அதுவே சரியான பொருள்.  ஆர்   -  வந்தார் போனார் என்பதும் தமிழில் பலர்பால் விகுதியாய், இன்றளவில் பணிவுப் பன்மையாய் அன்றோ பயன்படுகிறது.   ஆர்தல் என்பது நிறைவை அன்றோ குறிக்கிறது.  வளமார் தமிழகம் என்றால் வளம் நிறை தமிழகம்.   வளம் ஆர்ந்த தமிழகம்;  வளம் ஆர்கின்ற தமிழகம்;  வளம் ஆரும் தமிழகம் என்று முக்காலத்திலும் வரும்.  அறிவார்ந்த விளக்கம் இதுவே.

ஆரிய என்பது இனப்பெயர் அன்று.  வெளிநாட்டான் எப்போதும் வந்துகொண்டிருப்பான்;  முன்னும் வந்தான். இப்போதும் வருகிறான்; இனிமேலும் வருவான்." வந்தவன் "  எல்லாம் அறிவாளி என்று ஒப்புவீரோ?  அவர்களில் எத்தனை அறிவாளிகள்?  எத்தனை மடையர்கள்?

ஆரியமும் ஆசிரியமும்.

ஆரியன் என்ற சொல்லும் பலவழிகளில் உருப்பெறும்.   எடுத்துக்காட்டாக ஆசிரியன் என்பதன் இடைக்குறையாக  ஆரியன் என்றாலும் அச்சொல் வந்துவிடுகிறது.  வாத்தியார் அறிவாளி என்பதை  ஆசிரியன் அறிவாளி என்று மாற்றிச்சொல்லி,  ஆசிரியறிவாளி என்றாக்கி,  அறிவாளி என்பதற்குப் பதிலாக ஆசிரியாரியன் என்று சொல்லி,  ஆசிரிய+ஆரியன் = ஆச்சிரியார்யன் என்றும் பின்னும் திருத்தி ஆச்சாரியன் என்று குறுக்கினால் நல்ல களிப்பாக்குமன்றோ?
ஆசிரிய மேதகை என்பதினும் வேறன்று  அது.

எழுத்துக்களைத் திருப்பிப்போடும் தந்திரம்

 பல சொற்கள் வெறும் ஏமாற்றுவேலைகளாகியுள்ளன என்று எண்ணத்தக்கவை யாகலாம், இவற்றில் எப்படி விளையாடியிருக்கின்றனர் என்று உணர்ந்தால் உலக முற்றுகாறும் ஆனந்தமாய் இருக்கலாம்.  எ-டு:  காவல் (கா)   ஆகும்  (ஆ)     இல்லம் (  இல் ) >   (திருப்பிப் போட்டு)  இல்+ஆ+கா =  இலாகா.  நடவடிக்கைகள் தொடருமாறு அத்தொடர்வினைக் காக்கும் இல்லம் : இலாகா. .   இது எந்த மொழிச்சொல் என்று கேட்டவன் மடையனானான்.  அவனை ஏமாற்றியவன் அறிவாளி,


*பிழைத்திருத்தம்.

பிழைகள் பின் திருத்தம் பெறும்.



வியாழன், 5 ஜூலை, 2018

ஆரூடம்.

இன்று ஆரூடம் என்பதென்னவென்று அறிந்துகொள்வோம்.

ஆர்தல் என்ற தமிழ்ச்சொல்லுடன் ஊடு, அம் என்ற பிற தமிழ்ச்சொற்களும் இணைந்து உருவான சொல்லே ஆரூடம் ஆகும்.  இவற்றுள் ஊடு என்பது துருவிச் செல்லுதல்போல புகுந்து செல்லுதலைக் குறிக்கும்.  ஊடகம் என்ற சொல்லில் இந்த ஊடு என்ற சொல் முன் நிற்பதை அறிந்திருப்பீர்கள்.  ஊடுருவுதல் என்ற சொல்லிலும் இச்சொல் இருக்கின்றது.

அம் என்பது பல சொற்களில் இறுதிநிலையாய் இருப்பதனால் அதை விளக்கத் தேவையில்லை என்று நினைக்கின்றோம்.

ஆர்தல் என்பதை அறியவேண்டியது அகத்தியமாகிறது.

நுகர்தல் அல்லது அனுபவித்தல்;
அன்புகாட்டுதல்
நிறைதல்
உண்ணுதல்
பொருந்துதல்
அடைதல்
குடித்தல்
ஒத்தல்
தங்குதல் 
அணிதல்

இதன் பிறவினை ஆர்த்தல் என்பது.  இது அணிதல், ஆட்டுதல், ஆரவாரம் செயல், ஒலித்தல். கட்டுதல் , பொருதல், பொருத்துதல், தொகுத்தல், ஒளிவீசுதல், மின்னுதல் என்றும் பொருள்தரும்.

மொத்தத்தில் ஆர் என்பது உயர்செயல்களைக் குறிக்கும்.  ஆரியர் என்ற சொல்லும் இதனின்று வந்ததாக பிற தமிழறிஞர் கூறியதுமுண்டு.

வந்தார், சென்றார் என்பன போலும் வினை முற்றுக்களில்  வரும் ஆர் விகுதி இச்சொல்லே ஆகும்.  ஒரு வினைச்சொல் விகுதி என்னும் தகுதி பெறுவதென்றால் அச்சொல் மொழியில் மிக்கப் பழமை தொட்டே வழங்கி வந்துள்ளது என்பது சொல்லாமலே புரியும்.  

ஆரியர் என்ற சொல் ஆங்கிலத்திலுள்ள "ஏரபல்"  என்ற சொல்லுடன் இலத்தீன்வழித் தொடர்புடையது என்று வரலாற்றாசிரியர் ரோமில தாப்பார் கருதுகிறார்.  ஏர்த்தொழில் தொடர்புடைய ஏர் என்ற தமிழ்ச்சொல்லும் ஆர் என்பதனுடன் தொடர்புடையதாய் இருந்தால் அதில் வியப்பில்லை.  ஏர்த்தொழில் ஒரு காலத்தில் மிக்க உயர்வானதாகக் கருதப்பட்ட தொழில். இதற்குக் காரணம் அது மக்களுக்கு உணவளிக்கும் தொழில். உணவின்றேல் மனிதர் மடிவர்.

ஆர் என்ற சொல் தரும் பல பொருள்களில் பொருந்துதல் அல்லது நிறைவு என்ற பொருளைக் கருதுவோம்.  ஆர  ( நிறைவாக ) ஊடு சென்று கண்டுபிடித்துச் சொல்லும் திறனே ஆரூடமாகும். ஆரூடத்திலுள்ள மூன்று  துண்டுச்சொற்களும் தமிழே ஆகும். உதாரணமாக வீட்டில் கெட்டுப்போன சாமான்`களை வைத்திருந்தால்  அவற்றிலுள்ள ஒரு மறைவான ஆற்றல் வெளிப்பட்டு நன்றாக இயங்குபவையும் கெட்டுப்போகும் என்பது ஆரூடம்.  இது சீனாவில் "ஃபோங்க்  ஸ்வே" என்று சொல்லப்படுகிறது.  இதைப்பற்றி எழுதப்பட்ட நூல்களும் உள்ளன. உங்கள் உந்துவண்டியின் கெட்டுப்போன பகுதிகளை அதன் பின்னடைப்பில் போட்டு வைத்துக்கொண்டிருந்தால் உங்கள் வண்டி மேலும் மேலும் கெட்டுப்போகும் என்பது  சொல்லப்படுகிறது.  இது மூட நம்பிக்கை என்று நீங்கள் நினைத்தால் நாலைந்து கெட்டுப்போன சாமான்`களை வண்டியின் பின்புறத்தில் போட்டுவைத்து ஓட்டிக்கொண்டிருங்கள்.  அடிக்கடி கெட்டுப்போனால் அது ஆரூடத்தில் ஏதோ உண்மை இருப்பதைப் புலப்படுத்தக்கூடும். இன்றிலிருந்து இதை நீங்கள் ஆய்வுசெய்யுங்கள். அப்புறம் முடிவு மேற்கொள்ளுங்கள். வீட்டில் மின்`குமிழ் எரிந்துவிட்டால் உடனே சிலர் மாற்றிவிடுவர். இதுதான் காரணம் என்று சொல்வர்.  கெட்டுப்போவதைச் சீர்ப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை ஆரூட அறிவாளிகள் சொல்கிறார்கள்.  நாம் முற்றிலும் அறியாதவையும் உலகில் இருக்கக்கூடும் அன்றோ?   அம்மையார் ஒருவர், கோவில் பூசைக்காக நூற்றைம்பது வெள்ளிகள் கேட்டார். என்னையும் சேர்ந்துகொள்ளும்படி கேட்டார்.  நான் உடனே அதைக் கொடுத்துவிட்டேன். அது அப்படி இது இப்படி என்று சாக்குப்போக்குச் சொன்னால் நாளை ஒரு சளிக்காய்ச்சல் வந்து அது செலவாகிவிடத்தான் போகிறது.  ஆகும் என்பதுதான் ஆரூடம். நோய்க்குச் செலவிடுவதைவிட ஒரு பூசைக்குச் செலவிட்டால் நன்மை விளையும் என்பதும் ஒருவகை ஆரூடமே.  கடன்பத்திரங்களைச் சேமித்து வைத்துக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தால் மேலும்  கடன்பல வரக்கூடும்.  இதுவும் ஆரூடமாகும்.

இப்போது ஆரூடம் என்பதை நன்றாக விளக்கிவிட்டேன் என்று நினைக்கிறேன்.இவற்றிலெல்லாம் சிந்தனை செலுத்தி அதை  ஓர் ஆய்வுக்கலையாக்கி உள்ளனர்.

எனவே  ஆர = நிறைவாக;  ஊடு = உள் நுழைந்து மறைந்துள்ள ஆற்றல்களை;  ----அறிந்துகொள்வதே ஆரூடம் .  அம் விகுதி என்பது முன்னரே சொல்லப்பட்டது. 

வீழ்ச்சி வருவதாயின் அது வரத்தான் செய்யும். சில முன்னறி குறிகளைக் கண்டு அவற்றை விலக்கிக் கொள்வது அறிவுடைமையே ஆகும்.

சில பொருள்கள் நிறைவலைகளை ஏற்படுத்துகின்றன;  சில பொருள்கள் அழிவலைகளை ஏற்படுத்துகின்றன.  இவை கண்காணா அலைகள். இப்போது இவற்றை உணரத்தான் முடிகிறது.  பின்னொரு காலத்தில் கண்டுபிடித்துப் பயன் பெருக்கும் அறிவை மனிதர்கள் அடையக்கூடும்.  யான்  அறியேன். இன்று நாமறிந்துள்ள பலவற்றை ஆயிரம் ஆண்டுகட்குமுன் வாழ்ந்த மனிதர் அறிந்திருக்கவில்லையே.


புதன், 4 ஜூலை, 2018

கம்மல் கம்மி என்பன கருமைத் தொடர்பு

வானம் கம்மலாக இருக்கிறது என்பதைப் பேச்சுவழக்கில் நீங்கள் எதிர்கொண்டிருக்கக் கூடும்.  கம்மல் என்பது ஒரு காதணியையும் குறிக்குமென்றாலும் இன்றைய நம் பார்வை அது பற்றியதன்று,  மழை வரும்போல் தோன்றுகிறதென்பதற்குக் கம்மல் என்பார்களே அதையே இங்கு எடுத்துக்கொள்கிறோம்.

சிறிது இருட்டிக்கொண்டிருப்பது போன்ற நிலை ;  அதாவது கருமேகங்கள் மூடி வானம் ஒளிகுறைந்த நிலை.  அதுவே கம்மல் ஆகும்.

இதற்குமுன் வந்த இடுகைகளில் கரு என்பது கம் என்று திரிவதை உரைத்துள்ளோம்.  ருகர மறைவை அறிந்துகொண்டோம்.

கருங்கண் >  கருங்கணம் > கங்கணம் என்று திரிந்தமை போல,  கம்மல் என்பதும் கரு என்று தொடங்கும் ஒரு சொல் திரிந்ததனால் ஏற்பட்டதே என்பது தெளிவு.

கரு > கருமல் > கம்மல் என்றாகிறது.

பண்டைத் தமிழ்ப் பேச்சில் வானம் கருமைகொள்வதைக் கருமல் என்று கூறினர் என்பதை ஆய்ந்து தெளிந்துகொள்ளலாம்.  பேசியோரும் மறைந்து அவர்கள் எப்படிப் பேசினர் என்பதும் மறைந்துவிட்ட நிலையில் நுட்பங்களை நுணுகி ஆய்ந்துதான் தெரிந்துகொள்ளமுடியும்.

வட்டக்கரிய விழி ---- கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ

என்ற பாரதியின் பாட்டில் வானக் கருமை குறிப்பிடப்படுகிறது.

கம்மல் என்பது ஒளி வீசிக்கொண்டிருந்த நிலை மாறி, வானம் கருமை கொண்டு மாறுவதைக் குறிக்கும்,

கம்மி என்ற  சொல்லும் தொடர்புடையதே.  முதலில் இது ஒளி குறைந்த நிலையைக் குறிக்க வழங்கிப் பின்னாளில் பொதுவான குறைவைக் குறித்ததென்பதை அறிந்துகொள்ளலாம்.

கரு என்பதே கம் ஆகும்.

கரு+ ம் + அல்  =  கருமல் > கம்மல்.

மல் என்பதைச் சொல்லிறுதியாகக் கொள்வதில் தப்பில்லை. அது ஆய்வினை எளிதாக்கும் என்பதை உணரலாம்,

மான் என்ற ஆண்பால் சொல்லிறுதியும் இப்படி அமைந்ததே ஆகும்.

பெரு + ம் + ஆன் =  பெருமான்.     இய  + ம்  + ஆன் =  இயமான் > எசமான் > எஜமான்.
இயக்கும் திறமுடையோன் ஆதலின் இய என்ற சொல் பயன்  கண்டது.  இய> இயவுள் என்பது காண்க.

மான் என்பது ம்+ஆன் என்பதே;  ம் தொடர்புறுத்த வந்த இணைப்பு ஒற்று ஆகும்.  ஆன் என்பதே ஆண்பால் விகுதி.  ஆனாலும் மான் என்பதோர் இறுதி எனக்கொள்ளுதலில் பெரிய தவறொன்றுமில்லை.

கம்மல் என்பதில் இறுதி விகுதி அல் என்பதே.   கம் என்பது பகுதி என்பதினும் கரு என்பதே பகுதி என்று உணர்தல் தெளிவு ஆகும்.

கஞ்சன் என்பதும் கரு என்பதனடிப் பிறந்த சொல்லென்பது முன் இடுகையில்
கண்டு உவந்தோம்.


செவ்வாய், 3 ஜூலை, 2018

"கங்கணம்" அமைந்த விதம்

கங்கணம் என்ற சொல் அமைந்த விதம் வெகு சுவைதருவதாகும்.  அதை இப்போது அறிந்து மகிழ்வோமாக.

இது கருங்கண் என்ற சிற்றூர் வழக்கிலிருந்து வருகின்ற சொல்.  திட்டினால் பலிக்கக் கூடிய நாவு உள்ளவனை  கருநாக்கு உடையவன் என்பர்.  சிலருக்கு நாக்கின் ஒருபகுதியில் கருநிறம் படர்ந்திருக்கும்.  இவர்களுக்குக் கோபமூட்டி அதன் காரணமாகச் சாவ(சாப)மிடும்படி நடத்தலாகாது என்பர். மூக்கில் கருப்பு விழுந்திருந்தால் தரித்திரம் என்பர்.  (சாபம், தரித்திரம்) என்பவற்றை விளக்கியதுண்டு.  அவை இங்கு  இருக்கின்றனவா என்று தெரியவில்லை.  பார்வையிலும் கெடுதல் ஏற்படுவதுண்டு என்பர்.  தீயபார்வை பார்க்கும் கண் கருங்கண் ஆகும்.  கருங்கண்ணால் பார்த்தால் போகும் காரியம் தோல்வியில் முடியும் என்பர்.

இவை மூட நம்பிக்கை என்பாரும் இல்லாமல் இல்லை,

அதுவன்று நமது ஆய்வு.  கருங்கண் என்பதிலிருந்து கங்கணம் என்ற சொல் அமைந்ததை விளக்குவதே ஆய்வாகும்.

கருங்கண்+ அம் =  கருங்கணம்.
இதில் ருகரம் கெட,
கருங்கணம் >  கங்கணம் ஆகிறது.

கருங்கண்ணால் பட்ட பார்வை பாதித்துவிடாமல் இருக்க,  கையில் காப்புக் கட்டிகொண்டனர்.  காப்பு என்பது காவல் என்று பொருள்படும்.  காவலுக்காகக் கட்டுதல் என்னும் வினை,  அதற்காகக் கட்டப்படும் நூலையும் வளையையும் குறித்தது ஆகுபெயர்.  கண்ணைக் குறிக்கும் கங்கணம் என்ற சொல், பின் வளையை அல்லது காவல் நூலைக் குறித்ததும் ஆகுபெயரே.

பிறகாலத்தில் கண் தொடர்பாக மட்டுமின்றி வேறு இடர்களைத் தடுக்கவும் கட்டிக்கொண்டனர்.  மனவுறுதிக்காவும் கட்டிக்கொண்டனர்.  இப்படிப் பொருள் விரிய விரிய,  கங்கணம் என்ற சொல் தன் முதற்பொருளை இழந்து வேறு பொருள் காட்டத் தொடங்கிற்று என்பதை அறிக.

தொல்காப்பிய இலக்கணப்படி தன் முதற்பொருளிழந்து வேறுபொருளில் வழங்கும் சொற்கள் திரிசொற்களே.  மேலும்  ஓர் எழுத்தும் இழந்த சொல் கங்கணம் ஆகும்.

இவை யாவும் அறிந்து மகிழ்வாக இருங்கள்.

====================================

அடிக்குறிப்பு:

காப்பு என்பதை,  திரு . வி. க அவர்களால் போற்றப்பட்ட ஆசிரியர் க.ப. மகிழ்நன் விளக்கினார் ( தமிழ்க் களஞ்சியம்).<1950 .="" br="">

திங்கள், 2 ஜூலை, 2018

Rahul Gandhi and Islam


You may wish to read this amazing story:

https://www.parhlo.com/rahul-gandhi-has-been-proved-a-muslim-by-birth/

On Nehru family background:

https://nehrufamily.wordpress.com/ 

கஞ்சன்

இன்று கஞ்சன் என்ற சொல்லின் அமைப்பை அறிந்தின்புறுவோம்.

கஞ்சன் என்பதற்கு இன்னொரு சொல்:  கருமி என்பது. 

கருமி என்பது விளக்கப்பட்டுள்ளது.


கரு என்பது கருமை குறிக்கும் தமிழ் அடிச்சொல்.  அது சிலவிடத்துக்  கரு என்றே நிற்கும்;  சிலவேளைகளில் கிரு என்று  திரியும்.  எடுத்துக்காட்டு:

கரு >  கருமி.  (  வெளிப்படையாக இல்லாமல் செல்வத்தை இருட்டில் வைப்பதுபோலப் பதுக்கிவைப்பவன் எனவே செலவுகளையும் சுருக்கிக் கொள்வான்.),  கருமியின்  நடத்தை:  கருநிறமானது என்று
மக்கள் கருதுவர்.

கருப்புச்சந்தை என்ற தொடரையும் காண்க.

கருப்பு என்பதன் அடி கிரு என்றும் திரியும்.

கரு> கிரு > கிருட்டினபட்சம்  ( கருப்புப் பகுதி).   கிருட்டினன் என்பது கருப்பன் என்பதே.

இந்தியச் சாமியர் செம்மையாகவும் ( சிவன், முருகன் )  கருமையாகவும் ( கிருஷ்ணன், விஷ்ணு என்னும் விண்ணு) இருவேறு விதங்களில் இருப்பர்.   சாய்ந்து நின்றோ கிடந்தோ வணங்குவது  சாய்+ம்+இ  =  சாய்மி > சாமி ஆகும். யகர ஒற்றுக் கெடும், இன்னொரு எ-டு:  ஆய்த்தாய் > ஆத்தா;   வாய்த்தி > வாத்தியார்.

கருமை கெடுதல்மட்டுமின்றிப் பிற பொருள்களும் தழுவும்:
எடுத்துக்காட்டு:

கருங்கழல்  -  வீரக்கழல் (  பொருள்:  வீரம்)
கருங்கை -  வன் தொழில் ( பொருள்:  வன்மை)
கருந்தாது -   இரும்பு   ( பொருள்:  வலிமை, வளையாமை)
கருக்கிடை -  ஆலோசனை  ( பொருள்:  சூழ்தல்)
கருநாள் -  ஆகாத நாள்:  (பொருள்: பொருந்தாமை)
கருங்கலம் -  மண்பாத்திரம் ( பொருள்:  அடுப்புக்கு உரியது).

இங்கனம் கருமை பலபொருள் சுட்டும் அடிச்சொல் ஆனது காண்க.

கஞ்சன் என்போன் கருமி.   அவனும்  கருஞ்செயல் செய்வோன்.  கருஞ்செயலாவது விரும்பத்தகாத நடபடிக்கை ஆகும்.

கருஞ்செயன் >  கஞ்சென் > கஞ்சன்.

ருகரம் கெட்டது.
செ என்பது ச ஆனது.

செ பெரும்பாலும் ச ஆகும்.  எடுத்துக்காட்டு:

அகஞ்செலி >  அஞ்செலி,>  அஞ்சலி.

இனிக் கருஞ்செயன் என்பது கஞ்சன் என்றாவது  உணரலாம்.

கருஞ்செயன் என்பது  கஞ்~ சென்  என்றிருப்பின் அதைத் தமிழாசிரியர்கள்   கஞ்~  சன் என்றே திருத்துவார்கள்,  செயன் என்பதும் பேச்சில் சன் என்றே திரிதற்குரியது,

இனி  கருஞ்சன்      (  கரு+ சு  + அன் )  என்று காட்டி,  சு  அன் என்பன விகுதிகள் எனினும் ஏற்புடைத்தே ஆகும்.  கருஞ்சு என்பது கஞ்சு என்று வருதலும் ஆகும்.

இவை போல்வனவற்றில் மூல அமைப்புகள் அழிந்தன.  பேச்சு வழக்கில் பெரும்பாலும் அவ்வாறு அழியும்.

இது அகங்கை என்பது அங்கை என்று வந்தது போலாம்.  சகக்களத்தி என்பது சக்களத்தி என்று வந்ததும் காண்க.  ருகரமும் கெடும்:  பெருமான் > பெம்மான்.  தருமம் > தம்மம் ( பாலித்திரிபு)

 திருமையா என்று தமிழரிடைக் காணப்பெறும் இயற்பெயர், பிற மாநிலத்தாரிடை திம்மையா என்றன்றோ வழங்குகிறது?  வெவ்வேறு மாநிலத்து வழக்குகள் ஆதலின்  முதலமைப்பு நிலைபெற்றுள்ளது.

அரிசியை வறுத்துக் காய்ச்சிய கஞ்சி,   கரு என்பதனடியாகப் பிறந்து அமைந்த சொல். அது கருஞ்சி என்றிருந்து கஞ்சி ஆனதென்பது தெளிவு, பின் அது வெண்கஞ்சியையும் உள்ளடக்கியது, இதுவும் பேச்சுச்சொல்லே.  இவை போல்வனவற்றுக்கு முன்னமைப்பு  கிட்டுவதில்லை.

இதுகாறுங்கூறியவற்றால்  கஞ்சன் என்பதும் கருமி என்பதும் ஓரடியிற் பிறந்த சொற்கள் என்பதை உணரலாம். 







சனி, 30 ஜூன், 2018

சால சாலி சாலினி சாலமோன் சாலை பிற

சாலமோன் என்ற சொல்லை முன்னர்ச் சிலமுறை யாம் விளக்கியதுண்டு.

சால -  மிகுந்த. நிறைவான.

இதன் அடிச்சொல் சாலுதல் என்பது.  இச்சொல் ஒரு வினைச்சொல்.

சால என்பதை ஓர் உரிச்சொல் என்பதுண்டு.   சாலச் சிறந்த என்ற தொடரில் சிறந்த என்ற எச்சச் சொல்லை சால என்பது தழுவி நிற்றல் காணலாம்.  இது உரிச்சொல் எனப்படினும் இது "சாலுதல்" என்னும்போது வினைவடிவெடுப்பதை அறியலாம்.

இது எவ்வாறாயினும், சால என்பது பிறமொழிகளிலும் பரவிச் சொற்களைப் பிறப்பித்துள்ளது.

சாலை என்பது   சால்+ஐ என்றமைந்த சொல்.   இப்போது வாகனங்கள் செல்லும் பெரும்பாதையை நாம் சாலை என்`கிறோம்.  எடுத்துக்காட்டு:  விரைவுச்சாலை.


பாடம் என்பது தமிழ்ச்சொல்.  படி+ அம் =  பாடம் எனவரும்.  படி என்பதில் உள்ள பகரம் நீண்டு பாகாரம் ஆனது.  டி என்பதில் உள்ள இகரம் கெட்டு ட் என்று நின்று வரும்  அம் என்னும் விகுதியுடன் இணையப் பாடம் என்ற சொல் அமைகிறது.

பாடம் + சாலை என்பனவற்றைச் சேர்க்கப் பாடசாலை ஆகிறது,  இதன்பொருள் பாடம் படிக்கப்  பிள்ளைகள் கூடியுள்ள இடமென்பது. இப்போது பள்ளி என்ற சொல்லே இதற்குப் பயன்படுகிறது.  பாடசாலை என்பது பிறமொழிக்குச் சென்று பயன்பட்டதால் அதன்பால் ஏற்பட்ட ஐயப்பாட்டில்  அது இப்போது விலக்கப்படும்.

அறியாது அகராதி வெளியிடும் சிலர்கூட பாடம்  சாலை என்பன தமிழல்ல என்று கூறிக்கொண்டிருப்பதுண்டு.  இக்கூற்று  உண்மையன்று என்பதை மேலே விளக்கியுள்ளோம்.

சால என்ற சொல் எபிரேய மொழிக்குள்ளும் சென்றது.  சாலமோன் என்ற மன்னன் பெயரில் சால என்பது இருக்கிறது.  பெயருக்கேற்ப அவன் சாலச் சிறந்தவனாகத் திகழ்ந்திருந்திருந்தான்.  மன் என்பது மன்னன் என்பதன் அடிச்சொல்.   சாலமன் என்பது சாலச் சிறந்த மன்னன் என்று பொருள்படும்.
மன் என்பதன்றி அதை சாலமோன் என்று பலுக்கிடில் மோன் எனற்பாலது மகன் என்பதன் திரிபாகவும் கொள்ளுதற்கிடனுண்டு என்பதறிக.  மகன் என்பது மோன் எனவருதல் பேச்சுத் திரிபு.  தமிழ் நாட்டின் சில வட்டாரங்களிலும் சேரலத்திலும் இது இவ்வாறு உருக்கொண்டு வழங்கும்.  இதைப் பற்றி மேலும் வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2016/05/solomon-tamil.html

ஆனால் சாலமோன் சாலமன் என்று ஓர் அரசன் இல்லை என்று சிலர் கூறியுள்ளனர்.  பண்டைக்காலத்தில் பல கதைகளைக் கற்பனைக் கேற்ப எழுதிப் பரப்பியோர் பலர்.  சில செய்திகளை ஈண்டு அறியலாம்,

https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0ahUKEwiikfatk_vbAhUEQH0KHbn7CXgQFggoMAA&url=http%3A%2F%2Fwww.jesusneverexisted.com%2F&usg=AOvVaw3KzUp6-ujV7qhhPUpzPcOp

சாலமன் பற்றிப் பல வியத்தகு கதைகள் உள; அவர் இருந்திருந்தாலும் இல்லாதிருந்தாலும் செய்யத்தகுந்தது ஒன்றுமில்லை.  கதைகளை அறிந்து மகிழ்வேண்டியதுதான் நம் வேலை.


சாலிவாகனன்,  சாலியவாகனன் என்பன சிறந்த வாகன வசதிகள் உடையோன் என்று பொருள்படுதல் கண்டும் ஆனந்த மடைக.  வேறுபொருள் கூறிய வரலாற்றாசிரியர்  உளர்.  பண்டைக்காலத்தில் வாகனவசதியுடையோன் பெரிதும் மதிக்கப்பட்டுப் போற்றப்பட்டான்.  பத்து இரதங்களுடைய மன்னன் தசரதன் பெரிதும் மதிக்கப்பட்டு அவனியற்பெயர் மறக்கப்படுமாறு தசரதன் என்ற பெயரே வழக்குப்பெற்றுள்ளது.

இரதம் என்பது எப்படி அமைந்த சொல்? ( இரு+அது+ அம் :  இருந்து செல்வதற்கு அது அமைப்பு )

நடந்து திரிபவனுக்கு அத்துணை மதிப்பு இல்லை.

சிறந்த நெற்பெயர் சாலி   என்ற பெயர் பெற்றதும்  தமிழ்மொழியின் சிறப்பை உணர்த்தும்.

தேவிக்குச் சாலினி என்ற பெயருண்மை முன்னர் நம் இடுகையில் சொல்லப்பட்டதே.  இப்போது இது ஷாலினி என்று மெருகேறி  ஒப்பனை நிலையில் வழங்கிவரும் சொல் ஆகும்.

பிழைத்திருத்தம் பின்.
மெய்ப்பு: 16122022

வெள்ளி, 29 ஜூன், 2018

விற்றலும் வாங்குதலும்

விற்றலும் வாங்குதலும் பண்டைக்காலத்திலே தொடங்கிவிட்டன. வில் என்ற சொல்லும் தமிழிலே உண்டானது,   அது தல் விகுதி பெற்று,  வில்+தல் =  விற்றல் ஆனது. தமிழில் விற்றல் என்பதற்கு விலைக்குக் கொடுத்தல் என்பது அர்த்தமாக அல்லது  பொருளாகக் கொடுக்கப்படுகிறது.

வாங்குதல் என்பதற்கோ இப்படியமையாமல்  வளைதல் என்றே பொருள்பட்டது,  இன்றும் எதையாவது இன்னொருவரிடம் பெற்றுக்கொள்பவர், சற்றுக் கையை நீட்டி, உடல் வளைந்து நின்று பெற்றுக்கொள்கிறார்.  வாங்கு  என்பது வளைதல் குறிக்கும் பெயர். பழங்காலத்தில் வளைந்து நின்றுதான் பொருளைப் பெற்றுக்கொண்டனர். ஆனால் இற்றை நிலையில் வாங்குதல் என்பது விலைக்கு வாங்குதலையும் அல்லாது வாங்குதலையும் குறிக்கும். இடம் நோக்கிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

வில் என்பதோர் அடிச்சொல். அது விர்>விய் என்றும் திரியும்.

விர் என்பது விரி > விரிதல் என்றும் திரியும்.  

விர்> விய் என்று திரிந்தபின் பல சொற்களை அவ்வடிச்சொல் பிறப்பித்துள்ளது.

வி> விய்> வியன் = விரிவு என்பது பொருள்>

விரிநீர் வியனுலகு என்று குறளில் வருவது காண்க.

விர்> விய் > விய >வியன்.

விய > வியா.

வியா > வியாபித்தல் =  விரிந்து பரவுதல்.

வியா என்பது வியாபாரம் என்ற சொல்லின் முதலாக நின்றது.

பாரம் என்பது உண்மையில் பரத்தல் என்ற அடியிலிருந்து வரும்.

பர > பரத்தல்.   எங்கும் பரவுதல்.

பர> பரவு.   பர> பார்.  

பார் என்பது பரவுதல் என்பதே.  அது முதனிலை நீண்டு பெயரானது,

பர+அம்,= பாரம்.  இதன் பொருள் பரவுதலைச் செய்தல் என்பது.

வியாபாரம் என்ற சொல்லில் பொருளுக்கு விற்றல் அல்லது வாங்குதல்  என்ற பொருளில்லை ஆயினும் அது சொல்லின் வழக்கில் ஏற்பட்டது,

பண்டைக்காலத்தில் பண்டமாற்று வணிகமிருந்தது.  விலை என்பது தெளிவாக ஏற்பட்டிருக்கவில்லை. பல இடங்களுக்கும் பொருளைச் சுமந்து சென்று பரவச் செய்தல் என்பதே வியாபாரம் என்பதன் பொருளாம்.

இன்று அதன் பொருள் வேறுபட்டுள்ளது.  இன்று வாங்குதல் விற்றல் என்று பொருள்.

வருத்தகம் என்பது இப்போது வர்த்தகம் என்று எழுதப்படுகிறது,  ஆனால் சொல் அமைந்தது:  வருத்து + அகம் என்றபடியே ஆகும்  பொருளை வெளியிலிருந்து வருத்தி விற்பதே வருத்தகம் ஆகும்.  அது பின் வர்த்தகம் என்று மெருகுபெற்றது.

வருத்துதல் என்றால் வருந்தச் செய்தல் என்றும் பொருள்.  அதனால் குழப்பம் தவிர்ப்பான் வேண்டி,  வருத்தகம் என்பது உண்மை வடிவமெனினும் அதை வர்த்தகம் என்று எழுதுவதே நன்று என்று தோன்றுகிறது.

சில வேளைகளில் முன்னமைப்புச் சொல் பொருந்தாவிடில் திரிபையே ஆளுதல் நன்றாகும்.

தமிழ்ச்சொற்களே திரிந்து   வழங்குகின்றன.  அது தமிழனுக்கு ஒருவகையில் பெருமையே ஆகும்.

பிழைத்திருத்தம் பின்பு.
மூலத்திலிருந்து வேறுபட்டுப் பிழையாகத்
தோன்றியவை: 11.7.2018 ல் திருத்தம்பெற்றன


புதன், 27 ஜூன், 2018

சமஸ்கிருதமும் இந்தியாவும்.

இதுபோது சமஸ்கிருத மொழி பற்றித் தெரிந்துகொள்வோம்.

முதலில் நாம் அறியவேண்டியது, இந்தியத் துணைக்கண்டத்து மொழிகளில் எல்லா மொழிகளும் ஒன்றின்சொல் இன்னொன்றில் வழங்கத் தக்க அளவுக்கு பெரிதும் உறவுடையவை.  இதற்குக் காரணம் மக்கள் யாவரும்  அடுத்தடுத்து வாழ்ந்ததும் தங்களுக்குள் உறவுடையவர்களாய் இருந்தமையும் சண்டையும் தங்களுக்குள் போட்டுக்கொண்டதும் ஆகும்.   பழக்கவழக்கங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் பல ஒற்றுமைகளும் இருக்கின்றன.

வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கியவர்களும் வாழ்ந்தனர்.  இந்தியாவிலே மறைந்தனர்.  பிள்ளைகுட்டிகள் மூலம் முன்னர் இவண் வாழ்ந்தோருடன் கலந்தனர்.   யவனரும் ஊனரும் வந்து பணிபுரிந்ததும் உண்டு,  கலந்ததும் உண்டு.

ஆரியப் புலம்பெயர்வு, ஆரியப் படையெடுப்பு முதலியவை நடைபெற்றதற்கான சான்றுகள் இல்லை.  சமஸ்கிருத மொழியில் வழங்கும் சொற்கள் ஏனை நண்ணிலக் கோட்டு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் முதலியவற்றிலும் திரிந்து வழங்குவதால்,  மக்களிடை நீண்டகாலத் தொடர்பிருந்தமை அறியலாம்.

சமஸ்கிருதம் நன்றாகத் திருத்தியமைக்கப்பட்டு, வெளிநாட்டிலிருந்து வந்து வழங்கும் சொற்களும் உள்நாட்டுத் திரிபுச் சொற்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இப்படி அமைக்கக்காரணம்  அது பல்வேறு மக்களிடைப் பொதுமொழியாய் வழங்குவது நன்மைதரும் என்பதாலே ஆகும்.

டாக்டர் லகோவரி மற்றும் அவர்தம் ஆய்வுக்குழுவினர் கண்டறிந்தபடி மூன்றில் ஒருபங்கு திராவிடச் சொற்களும் ஒரு பங்கு அடிப்படை அறியப்படாத சொற்களும் இன்னும் ஒருபங்கு மேலைமொழிகளுடன் தொடர்புடைய சொற்களும் இருந்தன.  மொத்தம் உள்ளவை 166434 சொற்களுக்கு மேலாகும்.

டாக்டர் சுனில்குமார் சட்டர்ஜி கண்டறிந்தபடி  சமஸ்கிருதத்தில் ஒலியமைப்பு திராவிட மொழிகளைத் தழுவியவை.  தமிழில் உள்ள சில எழுத்துக்கள் சமஸ்கிருதத்தில் இல்லை; சமஸ்கிருதத்தில் உள்ள சில எழுத்துக்கள் சில தமிழில் இல்லை.

மொழிநூற் பெரும்புலவர் தேவநேயப் பாவாணரின் ஆய்வுப்படி சமஸ்கிருதமென்பது  தென்மொழியின் வழிப்பட்ட மொழி ஆகும். ஆரியர் வரவுக் கோட்பாடுகள் காரணமாக,  அவர் சமஸ்கிருதம் வெளிநாட்டிலிருந்து வந்தமொழி இங்கு வளம்பெற்றதென்று நம்பினார்.  இது ஒரு தெரிவியல்தான். (theory.  ) 

வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பாரின் ஆய்வுப்படி,  சமஸ்கிருதத்தில் காணப்படும் வெளிநாட்டுச் சொற்கள் மக்களிடையே ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக வந்தேறியவை.  அவை "பெறப்பட்ட" சொற்கள்.  இவ்வமைப்பினால் அதை வெளிநாட்டு மொழியெனல் பொருந்தாது.

சமஸ்கிருதம் என்பது உள்நாட்டுப் புனைவுமொழியாகும். மொழியில் சில இயல்புகள் உள்நாட்டில் அமைக்கப்பட்டவை அல்லது வெளியிலிருந்து வந்தவை. பல சொற்கள்  மக்களால் பேசப்பட்டவைதாம்.  பாகதச் சொற்கள் இவையாம்.

சமஸ்கிருதம் என்ற வழக்குச்சொல் முதன்முதல் இராமாயணத்தில் உள்ளது. அதற்குமுன்  அது வேறுபெயர்களால் அறியப்பட்டது.   அதன்பெயர்களில் சந்தாசா என்பது ஒன்று.  சந்த அசைகளால் ஆன மொழி என்ற பொருளில் அப்பெயர் அமைந்தது.    சம என்பது சமை என்ற தமிழ்ச்சொல்லுக்கு நேரானது. கிருதம் என்பது  கத்துதல்,  கதறுதல்,  கழறுதல்  என்ற சொற்களின்  வேருடன் தொடர்புள்ளது.   கத்து > கது ( இடைக்குறை) >  கது+அம் = கதம் > கிருதம்.
கத்து> கது > கதை> காதை. கத்து >கது > கீது > கீதம்.  வேறு இத்தகு திரிபுகளும் நேரமிருக்கும்போது ஒப்பாய்வு செய்து காட்டுவோம். முன்னரும் காட்டியுள்ளோம்.  (கத்து > கது > கதறு > கதறுதல்.)   கத்து என்பதன் கத்  அரபு மொழியிலும் உள்ளது ஆகும்.  அது குமரிக்கண்டக்காலத்துச்  செலவாயிருத்தல் கண்கூடு.

ஆரியர் வந்த ஆதாரம் இல்லை; ஆரியர் என்ற இனமும் இல்லை. ஆரியர் என்றால் மேலோர்.  ஆர் என்பது உயர்வு குறிக்கும் பலர் பால் விகுதியாகும்.  ஆர்தல் நிறைவு குறிப்பதும் ஆகும்.

ஆரியர் வெளி நாட்டிலிருந்த வந்த ஓர் இனத்தினரென்பது பிரிட்டீஷ் ஆய்வாளர்களால் புனையப்பட்ட செய்தி. இஃது   ஒரு தெரிவியல்(theory). ஆகும்.  அவர்கள் நாடோடிகள்(nomads)  எனப்பட்டதால், அவர்கள் பல்லாயிரம் சொற்களைத் தம்முடன் பேச்சில் கொண்டுவந்தனரென்பது  நம்ப இயலாது.  மாடோட்டி வந்திருந்தால் அவர்களுக்கு  நாடோறும் வழங்கும் சில சொற்களைத்  தவிர பிற அறிந்திருக்க இயலாது. அவர்களிடை குறுகிய சொற்றோகுதியே இருந்திருத்தல் கூடும். மயில் என்ற பறவைக்கு அவர்களிடம் சொல் இல்லை என்று கண்டு,  மாயூரம் என்பதை மயில் என்பதினின்றே படைத்துள்ளமையால் அவர்கள் வெளி நாட்டினர் என்றனர். இது ஒரு பொருத்தமான காரணம் ஆகாது. இதே காரணத்திற்காக அவர்கள் உள் நாட்டினராகவும் இருக்கலாமே.  கடைதல்  அம் என்ற இரண்டையும் சேர்த்துத் திரித்துக் கஜம் (கடை + அம் =  கடம் >  கஜம் ) என்ற சொல்லைப்  படைத்துக்கொண்டமையால் அவர்கள் யானைகள் இல்லாத உருசியப் பகுதிகளிலிருந்து வந்தனர் என்பதும் பொருத்தமற்றது .  புதிய சொற்களை மொழிக்குப் படைக்கும் ஆர்வத்தால் உள்நாட்டினரும் இதைச் செய்திருக்கலாமே.

பிராமணருக்கு எந்த மாநிலத்திலிருந்தனரோ அந்த மாநிலத்து மொழியே தாய்மொழியாகும்.   சமஸ்கிருதம் ஒரு  தொழிலுக்குரிய மொழியே ஆகும்.   பிராமணருக்குள்ளே 2000 சாதிகள் உள்ளன என்பதால் அவர்கள் பல்வேறு வகைகளில் தொழிலால் ஒன்று  சேர்ந்தவர்கள். ஓர் இனத்தவர் அல்லர்.  வெளிவரவினர் அல்லர். எல்லாச் சாதிகளிலும் கலந்துள்ளமை போல வெளிவரவினர் அவர்களுள்ளும் கலந்திருப்பர்.

பின்னொருகால் இதைத் தொடர்வோம்.

பிழைத்திருத்தம் பின்.


செவ்வாய், 26 ஜூன், 2018

தகராறு தகரால் தகரார் வேறுபாடு.

இன்று தகராறு என்ற சொல்லைப் பற்றி அறிவோம்.

தகர்த்தலாவது ஒன்று இடித்தெறிதல்.  ஓர் கட்டிடத்தைத் தகர்த்தல். ஒரு திட்டத்தைத் தகர்த்தல் .   என்றிப்படிப் பயன்படும் சொல்.

ஆறு என்பது வழி.

தகராறு பண்ணுவது என்பர்.  அதாவது ஒரு திட்டத்தைச் செயல்படுத்தும்போது அதற்கு இடையூறு செய்தலாகும்.

இது இன்னும் வேறு விதமாகவும் எழுதப்படும்.  

 meaning: dispute or squabble in Urdu.

தகரார்.

தகரால்.

தகரார் தகரால் என்பன வேற்றுமொழித் திரிபுகள். அல்லது சொற்கள்.
 

தகராறு என்பதும் தகரால் என்பதும் நுண்பொருள் வேறுபாடுடையன,  தகராறு என்பதே சரி.

திங்கள், 25 ஜூன், 2018

கள்ள மென்பொருள்கட்கு ஒரு கட்டு! Andriod security

கள்ள மென்பொருள்களையும் மறைபொருள்களைத் திருடுவதையும் இது தடுத்துவிடுமா?  பொறுத்திருந்து பார்ப்போம்.

MOUNTAIN VIEW, Calif.—Google is prepping the Android world for its next upgrade, code-named Android P, with an array of security and privacy enhancements. But even locking down a long-criticized Android privacy flaw won’t help the operating system beat its biggest security flaw: its own success.
Android P, expected to be released this fall, locks down privacy in a way no other Android version has. Until now, Android has allowed apps running in the background to access the camera and microphone without user permission. Android P will force background apps to ask for user permission before tapping into those sensors. It will also force apps to include an icon on the taskbar indicating that they are using the camera or microphone.
“That gives users a lot more control and more transparency into which apps have access to their sensors,” Xiaowen Xin, Android security product manager, said at Google’s annual I/O developer conference on May 10.
 https://www.the-parallax.com/2018/05/18/fragmentation-hinder-android-p-security/

நீர்த் தகராறுகள்: இந்தியா சிங்கை மலேசியா..

ஓங்குமிவ் வுலகமும் தாங்கிநிற் கின்றது  நீரை;
ஏங்குதல் இலாமல் எடுத்தது குடிப்பதற் கூறும்;
வீங்கிள வேனிலில் வெம்மை தணித்திட வாரி
யாங்கிருப் பாரையும்  ஈங்கென விளித்திடும் பாரும்.

செடிகொடி மரம்பிற எல்லா உயிர்களும் விடாயில்
மடிவதைத் தடுத்திடக் கிடைத்திட   வேண்டுமிந்  நீராம்;
ஒடிவதும் இலாத இகநா கரிகமும் நிலையாய்
நடைபெறத் தருவதும் பிறவல அதுதனி   நீரே.

தமிழ்தரு மாநிலம் கருநடம் இவற்றிடை  மாறாய்க்
குமிழ்தரு துயரமும்  பிறவல  அதுவுயிர்  நீராம்;
இமிழ்தரு கடல்கடந்  துளமலை நாட்டொடு சிங்கை
நிமிர்பெறு தனித்துயர் எதுவெனின் அதுவிலை  நீரே.
 

ஞாயிறு, 24 ஜூன், 2018

சாரளம்> சாளரம்.

சாளரம் என்ற சொல்லை நாம் ஆய்வு செய்வோம்.

புரட்சிக் கவி என்று பாராட்டப்பட்ட பெரும்பாவலரும் பாரதியாரின் சீடருமான பாரதிதாசன் :

"கதவைச் சாத்தடி --- கையில்
காசில்லாதவன் கடவுள் ஆனாலும்
கதவைச் சாத்தடி"

என்று தொடங்கும் பாடலை கதைக்கேற்பப் பாடிக்கொடுத்திருந்தார்.

சாத்து என்ற சொல் இலக்கியத்திலும் இடம்பெற்ற சொல்.  தீமைகளைத் தடுக்க அவை வரும்வழிகளைச் சாத்தும் ஒரு தெய்வம் "சாத்தன்"  எனப்பட்டது.  சாத்தன் என்ற இப்பழைய தெய்வம்தான் ஐயப்பன், ஐயனார் என்பர்.  சாத்தன் என்ற சொல் மெருகூட்டப்பெற்று :  சாத்தா > சாஸ்தா என்றுமாகியது.  சாத்தன் என்ற தமிழின் எழுவாய்ச் சொல்லுருவிற்கு சாத்தா என்பது விளிவடிவமாகும்.

"காதலுக்கு வழிவைத்துக் கதவைச் சாத்த,
கதவொன்று கண்டறிவோம் இதிலென்ன குற்றம்"  என்று

சாத்துதல் என்பதைப் பயன்படுத்தியுமிருந்தார் பாரதிதாசன்.    சாத்துதல் என்ற சொல் இன்றும் வழக்கிலுள்ள தமிழ்ச்சொல் ஆகும்.

இது "சார்> சார்த்து > சாத்து"  என்று பண்டைக்காலத்திலே திரிந்துவிட்டது.  இடைநின்ற ரகர ஒற்று பல சொற்களில் மறைந்துள்ளமையைப் பல இடுகைகளில் எடுத்துக்காட்டியுள்ளோம்.  அவற்றை மறுவாசிப்புச் செய்து மகிழவும்.  வாய்விட்டு ஒன்றைப் படிப்பதுதான் வாய் > வாயிப்பு> வாசிப்பு ஆகும்.
இனி வாசி+அகம் =  வாசகம். உண்மையில் இங்கு அகம் என்று வருவது:  கு+அம் என்ற விகுதிகளுடன் அகரம் புணர்ச்சியில் தோன்றி நின்றதாகும்.  இங்கு அகம் என்றது மனம் அன்று.

வாசி +கு+அம் = வாசி+அ+கு+அம் =  வாசகம்.  இந்த அகரம் இணைப்பில் தோன்றியது.  ஆனால் அகத்துக்குள்ளேயே வாசித்துக்கொள்வது வாசகம் என்று சிலர் சொல்லக்கூடும்.  வாசித்தல் என்பது சில திராவிட மொழிகளில் வாயித்தல் என்றே வழங்கும்.

சாத்து என்ற சொல்லை ஆய்வு செய்யப்புகுந்து பிறவும் கூறினோம். எழுதுவனவற்றை அழிப்போர் நடமாடுவதால் அவ்வப்போது வாய்ப்பு நேர்கையில் பலவும் சொல்வது அவர்களை முறியடிக்க ஓர் உத்தியாகும். அது இனிமேல் வேண்டியாங்கு கடைப்பிடிக்கப்படும்.

இனி சாத்து, சாளரம் என்பவற்றின் தொடர்பு விளக்குவோம்.

சார் > சார்த்து > சாத்து.
சார்> சார்+அள+அம் = சாரளம்  (சாத்தவும் திறக்கவும் பயன்படும் ஒரு சிறு சுவர்க்கதவுடன் கூடிய காற்றதர்.)

இதில் :  சாரளம் என்பது பின் எழுத்து முறைமாற்றத்தால்:  சாளரம் ஆனது.

இப்படி அமைந்த பிற சொற்கள் எடுத்துக்காட்டு:  மருதை> மதுரை; விசிறி>சிவிறி.

பதநிரல்மாற்றுச் சொற்கள்:   வாய்க்கால் > கால்வாய். இங்கு முழுப்பதங்கள் முறைமாறின.

சாளரமென்பது ஓர் அளவுடன் இருக்கவேண்டியது முதன்மையாகும். பண்டைக்காலத்தில் வெளியாட்கள் கதவு சாத்தியிருக்கும்போது சாளரத்தின் வழியாய் உள்ளே குதித்து வருவதைக் கட்டுப்படுத்த ஓர் அளவைக் கடைப்பிடித்தனர் என்பதைச் சொல் நமக்குத் தெரிவிக்கிறது, அளத்தல் - எட்டுதலும் ஆகும்.  அதரடைப்பு எட்டிச் சுவரைத் தொடவேண்டுமே. அதுவும் நன்று.   வெளியாரைத் தடுக்கக் கதவு சாத்திக் காற்றுக்காக பலகணியைத் திறத்தல் இதன் உத்தியாகும்.பலகணி என்ற சொல்லுக்குத் தனி இடுகை உள்ளது. அங்குக் காணலாம்.  பலகண்கள் அல்லது பல துவாரங்கள் உள்ள சாளரம் :  பலகணி.   துவை+ஆர்(தல்)+அம் = துவாரம்.   அம்மி துவைத்தல், அம்மி பொழிதல் எல்லாம் கேள்விப்பட்டதுண்டா? இடித்து உண்டாக்குவது துவாரம். இப்போது இடிக்காமல் குடைந்து உண்டாக்கிய துளையையும் குறிக்கும்.

சாரளம் > சாலகம் > சாலம் என்பன திரிபுகள்.  சார்<> சால்.

சாலேகம் என்பது மற்றோர் சொல்லுரு.   சாலகம் > சாலேகம் (பலகணி).

சாலுதல் என்பது அமைத்தலையும் குறிக்கும்.வீடு என்பதை முதல்முதலாக அமைத்த மனிதன் அதை மரங்களில் மேல் அமைத்தான்.  அப்போது அவனுக்கு வாசல் கதவு எல்லாம் தேவையற்றவை.  ஒரு பரண்போல  அமைத்து அதன்மேல் இருந்துகொண்டான்.  விலங்குகளிடம் இருந்து தப்பவும்  மழை காற்று வெயில் முதலிய இயற்கைத் துன்பங்களிலிருந்து விடுபடவும் அவன் வழி தேடினான்.  பின்னர் காடுகளிலிருந்து விலகி, நிலங்களைச் சமன் செய்து குச்சிகளின்மேல் பரண்போல் மேடையமைத்து அதில் வாழ்ந்தான்,  அப்போது கதவு செய்வது கூரை வேய்வது முதலியவற்றில் பட்டறிவு உடையவனானான். ஆகவே சுவர், கூரை முதலியவை அமைக்க அறிந்துகொண்டான்.  சுவர் என்பது சுற்றி வரும் தடுப்பு.   கூராக மேல் அமைக்கப்பட்டது கூரை.  சு+வர். (சுற்றி வருவது).  கூர்+ஐ = கூரை.  சுற்று, சுழல், சூழ் முதலிய சொற்களின் தொடக்கத்தை நல்லபடியாக சிந்திக்கவும்.  சுற்றுவரு > சுவரு > சுவர்.  அல்லது சுத்துவரு என்று பேச்சுப்படி நோக்கலாம்.  சுவரில் காற்றுக்காக பல கண்களை அமைத்தான்.  வீட்டுக்கு அவை கண்கள். கண்  என்றால் துவாரம்.  பூச்சி கடித்துச் சேலை கண்ணு கண்ணாகப் போய்விட்டது என்பாள் கிழவி.  கண் - சிறு பொத்தல்.  பல கண் உள்ள திறப்பு, பலகண்+இ.= பலகணி.  சுவர் எனபதன் மூல அடிச்சொல் சுல் என்பது ஆகும்.  சுட்டடிச் சொல்.  பலகணிக்கு முந்தியது வாயிலும் கதவும்.  சால்>சார் ( ரகர லகரப் போலி).

இதைச் சார் என்பதிலிருந்து தொடங்கினால் புரிந்துகொள்வது எளிது.  சால் என்பதிலிருந்த்ம் தொடங்கியும் சொல்லலாம்.  பின் பேசி மகிழ்வோம்.

இருக்கும் எழுத்துப்பிழைகளும் பின் எழுதியினால் தோற்றுவிக்கப்படும் auto correct பிழைகளும் சரிசெய்யப்படும். எக்கச்சக்கமான கள்ள மென்பொருள் கலாய்த்துக்கொண்டிருப்பதால் விரைந்து செய்தாலும் பயனில்லை. பொறுமையுடன் வாயிக்கவும்.  வாசிக்கவும்.  யி-சி.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

ஊழல் அலுவலர் மாட்டிக் கொண்டார்

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு பெரிய அலுவலர் சில குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். அதிலொன்று ஊழல் பற்றியது.
இன்றை நிலையில் அவர் கதையைப் பாடல்களாய் எழுதினால் அவற்றிலொரு பாடல் இப்படி இருக்கக்கூடும்.

என் கணக்கில் எப்படியோ பணத்தைப் போட்டார்;
எனக்குப்பின் தெரிந்ததையா யான் என் செய்வேன்?

தன்வரவாய் வந்தபணம் கேட்ட தில்லை;
தனக்கென்றே அதிலேதும் எடுத்த தில்லை;

வன் கணமாய் வாய்த்தபணம் இதுவோ இல்லை;
வாழ்வில்நான் திருடியதோ இல்லை இல்லை;

துன் குணத்தார் எனைக்குற்றம் சொல்வ தென்னே
தோன்றியவை சொல்லி எனை வதைக்கின் றாரே.

இப்படி எல்லாம் அவர் அழுது புலம்பினாலும் யாரும் அதைக்
கேட்பதாய் இல்லை.  மக்கள் தீர்ப்பில் அவர் மடங்கி வீழ்ந்தார்.

சனி, 23 ஜூன், 2018

மரியாதை என்னும் பதம்.

 வடகொரிய  அதிபர் கிம்மும் அமெரிக்க அதிபர் திரம்பும் சிங்கப்பூரில் எதிர்கொண்டு தழுவிக்கொண்டனர் என்று செய்திகள் கூறுகின்றன. கிம் தாம் அணுவாயுதத் தயாரிப்பிலும் வெடியாய்வுகளிலும் ஈடுபடப்போவதில்லை என்ற  உறுதியை அமெரிக்க அதிபருக்கு வழங்கினார் என்றனர்.  உலகம் மகிழ்வடைந்தது என்று சொல்லத்தேவையில்லை.

இத்தகைய தழுவுதல்கள் பணிவன்பு காரணமான நல்லெண்ணப் பரிமாற்றம் என்னலாமா?

இன்னும் பல உலகத் தலைவர்கள் எதிர்கொள்ளுதலின் போது தழுவிக்கொள்வது இப்போது வெகு இயல்பானதாகிறது.

கைகுலுக்குதலும் வேண்டியாங்கு நடைபெறுகிறது.

தழுவிக்கொள்ளுதலுக்கு மருவுதல் என்றும் தமிழில் இன்னொரு சொல் உள்ளது.

இருகைகளாலும் எதிர்நிற்பவரை மருவிக்கொள்ளுதல்.

மருவியபடி இறுக்கிப் பிடித்துப் பணிவு தெரிவித்துக்கொள்வது "யாத்துக்கொள்ளுதல்"  ஆகும்.  யாத்தல் - கட்டுதல்.

கைகளால் சுற்றிக் கட்டுதல்.

மருவு+ யா+தை.  

மரு+ யா + தை.

இங்கு தை என்பது விகுதி.  நட > நடத்தை என்பதில்போல.

ருகரமும் யகர வருக்கமும் எதிர்கொள்ளும் புணர்ச்சியில் ரு என்பது ரி என்று திரியும்.

மரு+யா+தை > மரியாதை.     பெரு+யாழ்=  பேரியாழ் என்பதில்போல.

மருவு என்பதன் அடிச்சொல் மரு.   வு என்பது வினைச்சொல்லாக்க விகுதி.

யாத்தல் என்பதில் யா என்பது அடிச்சொல்.

மரியாதை என்பதில் இரு அடிச்சொற்களும் ஒரு விகுதியும் உள.

மரியாதை என்பது சிற்றூர்களிலும் வழங்கும் சொல்.

முன்னர் இதை விரித்ததுண்டு.  இங்கு மாற்றம் எதுவும் இல்லை.

அறிந்து மகிழ்க. 

குறிப்பு:

பொருள் பதிந்துள்ள சொல் பதி+அம் =  பதம் ஆகும். பதி (பதிதல்) என்பதன் ஈற்று இகரம் கெட்டு பத் + அம் என்று நின்று  தகரத்தில் அகரமேற பதம் என்றானது. இதில் வியப்பும் இல்லை, விளக்கெண்ணெயும் இல்லை. அறியாருக்கு இரங்குவதன்றி யாது செய்வோம்?


கொடுவா மீன்

https://bishyamala.wordpress.com/2018/06/23/கொடுவா-மீன்/

https://bishyamala.wordpress.com/2018/06/23/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/

கொடுவா மீனைப் பற்றிய ஒரு சொல்லாய்வு இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

வியாழன், 21 ஜூன், 2018

அடிமேல் அடியடித்தால்

அடிமேல் அடியடித்தால் அம்மி நகருமென்றார்
கடிமேல் கடிகொடுத்தால் இம்மியே  னும்கிழியும் 
கடிநாய் அறிந்தவற்றைக் கள்வர்  அறிந்தவரே
ஒடிவார் தமையொடிக்க உள்ளுவார் வல்லவரே.

இ-ள்:

நம் மென்பொருள் கள்வர்கள் பற்றிய கவிதை இது.
இங்கு ுு   தரப்பட்டுள்ள பழமொழிகள் படி, அவர்கள் 
எல்லாம் அறிந்தவர்களே ஆவர்.  எத்தனையோ வகையில் 
இடையூறுகளை விளைவித்துக்கொண்டுள்ளனர். 
கடைசியாக அவர்கள் எம் எழுதிகளைச் செயலிழக்கச்
செய்துள்ளனர்.  எனவே முன்வரைவுகளும் சரிபார்த்தலும்
இயலாதவை ஆகின்றன.  

நாய்போல் கடித்துக்கொண்டிருந்தால் ஓர் இம்மியேனும்
கிழிய வேண்டுமே. அப்போது தசையைத் தின்றுவிடலாம்
என்று நாய்கள் நினைப்பதைக் கள்வர்களும்  தெரிந்துதான்
வைத்துள்ளனர்.  ஆனால் ஒடிந்துவிடக் கூடியவர்களை
ஒடித்துவிடுபவர் வல்லவர்தாம் என்று சொல்லவேண்டும்.

புதன், 20 ஜூன், 2018

எழுதி மென்பொருள் படுத்துக்கொண்டது.......

எம்  "சொல்"  எழுதி  எதையும் சேமிக்கமுடியாது  என்று போராடிக்கொண்டிருக்கிறது. தமியேம் யாது செய்வேம் இப்போது?

கணினியை நிறுத்தி வைக்குமுன் உங்களுக்குத் தெரிவிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது.  அது கட்டுரையாக வராமல் ஒரு கவிதையாக வந்துவிட்டது. கண்டமாதிரி வரைந்துள்ளேம்,  கண்டுமகிழவும்.

சொல்லென்னும் எழுதிக்குச் சோர்வு தோன்றி

சூழ்ந்தெழுதும் அனைத்தையும் சேமிக் காமல்

ஒல்லேதான் குவித்திட்ட குப்பை மேட்டில்

ஒதுக்கியவை அழித்தற்கு முன்னிற் கின்ற

நல்லதலா நடப்பைத்தான் மேற்கொண் டாடி

நலிவிலெமைஅழுத்திற்றே என்செய்கோ யாம்?

வல்லவொரு கணினிசார் மேதை தன்னை

வரவழைக்கக் கலிதானும் வந்த தாமோ?


எழுதி :  எழுதும் மென்பொருள்
சொல்லென்னும் எழுதி:
The word processor known as  MS  WORD
 சோர்வு:  failing to function; giving error messages.
சூழ்ந்து : யோசித்து
ஒல்லே = விரைந்து
நலிவு :  துன்பம்
செய்கோ : செய்வேம்
கலி :  பேரிடர்

கடல் தீங்கும் மாலுமியும்.


உமி என்பது யாது:

மாலுமி என்ற சொல்லை அறிவதற்குமுன் உமி என்றால் என்ன என்பதை  யறிந்துகொள்வோம்.

குத்துமி என்ற சொல்லில் உமி என்பது செங்கல் வேலை குறிக்கும்,
அதுவே  சலிக்கப்பெறாத உமியையும் குறிக்கும்.

குற்றுமி என்று வந்துஒரு வரியையும் ஒரு நெல்லின் நீங்கிய உமியையும் மற்றும் குற்றுயிரையும் குறிக்கும்.

குற்றுயிர் என்றால் இனிக் குறுகிய காலமே இருக்குமென்று அறியப்பட்ட உயிர்.
"குற்றுயிரும் கொலையுயிரும் என்பது வழக்கு.

கூருமி என்பது சிறுநீரினினின்று வெளிப்படும் உப்பு.

உமிதல் -  துமிதல். (ஆக்கத்தொடர்புடைய சொற்கள்.) 
உமிதல் =  உமிழ்தல் என்பதுமாம்.  உமிழ்நீர் என்பது உமிநீர் என்றும் குறிக்கப்பெறுவதுண்டு.  உமிழ் என்பதை உமி என்பது பேச்சு வழக்கு.

மெல்லிய நகம் உமிநகம் எனப்படும்.

உமி நீக்கிய அரிசிக்குத் தொலியல் என்றும் பெயர்.

உமியல் என்பது வசம்பு.

உமாவின் கணவன் சிவனாதலின் அவற்கு உமி என்றும் பெயர்.  உமாவை உடையோன்.   உமா+ இ =  உமிஆ என்ற எழுத்து மறைந்ததுஉம்+ஆ என்பதில் இறுதியில் நிற்பது ஆஅதாவது: உமாஉம்+ஆ > உமா+இ > உமி.   இது சொல்லமைப்புப் புணர்ச்சிஇதில் முழுச்சொற்கள் புணர்ச்சி இல்லை.

உமாவிலிருந்து வெளிப்படுவோன் சிவன்; உமாவே ஆதிப்பரம்  ஆகும். (ஆதிபராசக்தி)

இவற்றை மனத்தில் இருத்திக்கொள்க.  உமி என்பது பெரிதும் வெளிப்பாடு குறிக்கும்  சொல்.  கலஞ்செல்வோனும் நிலத்தினின்று வெளிப்படுவோனே ஆவான்,

மையக்கருத்து:   வெளிப்பாடு அல்லது வெளிப்படுதல்.

உமி என்பது ஒரு சுட்டடிச் சொல்.  உ = முன்னிருப்பதுஇ-  இங்கிருப்பதுஆக உமி என்பதன் பொருள் இங்கிருந்து அங்கு வெளிப்படுவது  என்பதுதான்.  இங்கு என்பது நெல்லைக் குறித்தது.    உ என்பது  முன் வெளிப்படுவதாகிய தோல்.

இடச்சுட்டுக்களைக் கொண்டே பல்லாயிரம் சொற்களை அமைத்துத் திகழ்வது
தமிழ்மொழி.

இது முன்பின்னாக அமைந்து தோலைக் குறித்துள்ளது.  இதையறிந்த பிற்காலத்தில்  பிதா என்ற சொல்லையும் இதே முறையில் தோற்றுவித்தனர்.

பி = பின்தாய் = தாய்க்கு.  ஆக பிதா.
ஒப்பு:  உ= முன் வெளியாகுவது; இ= இங்குள்ள நெல்லினின்று.  ம் என்பது இரு சொற்களுக்கும் இணைக்கும் ஒலியாக வந்தது.   உ+ம்+இ.

மகர ஒற்று ஓர் இணைப்பொலியாக வருவதை கருமி என்ற சொல்லில் கண்டுகொள்ளுங்கள்.  கரு+ம்+இ = கருமி.  வெறுக்கத்தக்கதாகிய கஞ்சத்தன்மை. கருநிறம் என்ற வெறுத்தகு எண்ண நிலையில் எழுந்த சொல்.

நெல்லிலிருந்து வெளிப்பட்ட உமி, பயனற்றுப் போகிறது.  எரித்துக் கரியாக்கலாம்.  பல் துலக்கினால் பல் வெள்ளையாகும் என்பர்.

உமி என்பது பயனற்றதாகையினால் உமிதல் என்ற வினைச்சொல் அழிதல் கருத்தை எட்டிப்பிடித்தல் கண்டுணர்க.

உமிதல் (தன்வினை)  -  உமித்தல் (பிறவினை).

கடலுக்குப் போவதைப் பண்டை நாட்களில் சிலர் வெறுத்தனர்.

கடலிலிருந்து ஆலகால விடம் வருமென்றனர்.  ஆனால் கடலுக்குப் போனாலும்  நீண்டநேரம் இருக்கலாகாது என்று நினைத்தனர்.  கடைதல் என்பது நெடிதுநிற்றல் பற்றிய அச்சம் குறிக்கிறது.

கடலுக்குச் செல்வோரை மால் அழித்துவிடுவார்!.

இதிலிருந்து மாலுமி என்ற சொல் உருவெடுத்தது,

மால் -  இருள்கடல். கடலோனாகிய விண்ணவன், (விஷ்ணு).
உமி = அழிதல்.

மாலென்பது:  காற்று, முகில், எல்லை, செல்வம், குழப்பம் என்றும் இன்னும் பலபொருளுமுடைய சொல்.

இவற்றுள் ஒன்றோ பிறவோ பொருந்தும் காரணத்தால் அழிவை எட்டுவோன் மாலுமி எனினுமாம்.

எல்லை கடந்து காற்றிலும் மழையிலும் துன்புற்று மனங்குழம்பி  செல்வமிழந்து அழிவோன் எனினும்  அமையும்.


எனவே கடலில்செல்லும் கலஞ்செலிமாலுமியாகினான்.

சிற்பன் எழுத்    தோவியத்தில்  செவ்வரசு  நாவாயின்
அற்புதம் சூழ்  மாலுமிஎன் றாடு.

--  திரு வி.க

பிற்காலக் கருத்தில் மாலுமி உயர்ந்தவனே.





செவ்வாய், 19 ஜூன், 2018

நம் செந்தமிழ் வேலன் ஒரு வஜ்ஜிரவேலன்.

நம் வேலன் போர்முடித்து வாகை சூடியவன். அந்நிலையில் அவன் மிகுந்த வலிமையை வெளிப்படுத்தியவன். முள் என்றாலும் வேல் என்றாலும் உடற்பகுதியில் பதிந்த நிலையில் தம் வீரமிக்க அடியார்களை ஏற்று மகிழ்பவன்.  வீரத்தை விளையாட்டாகக் கொண்ட வேலன் வேறு எதைத்தான் விரும்புவான்?

குமரன் ஏந்திய வேல் வலிமையில் சிறந்த வேல்.  குமரனின் வலிமை அவன் ஏந்தி நிற்கும் வேலில் ஏற்றிக் கூறப்படும். அவன்முன் சூரபத்துமனும் இரு கூறுபட்டு ஒழிந்தான்,  முருகப்பிரானின் வேல்வலிமையால்.

அவன் வேலை வஜ்ஜிரவேலென்`கின்றோம்.

வஜ்ஜிரவேல் எப்படி அமைந்த சொல்?

வல் =  வலிமை.

சிற =  சிறந்த.

வல்சிற  வேல் >  வற்சிறவேல் >  வஜ்ஜிர வேல்.

ஒரு தமிழ்ப்புலவர் வஜ்ஜிரவேலென்பதை  வச்சிரவேலென்றெழுதினார்.

வடவெழுத்து எனப்படும் வட ஒலிக்குரிய எழுத்துக்களை நீக்கியது தொல்காப்பியம் வகுத்த வழிதான்.

ஆனால் அதை வல் சிற வேல் என்றறிவது நுண்மாண் நுழைபுலமன்றோ?