வியாழன், 12 நவம்பர், 2015

"இவ்விடம்" அடிக்குறிப்புகள் இலத்தீனில்

இப்போதெல்லம் பல நூல்களில்  அடிக்குறிப்புகள்  தரப்படுகின்றன,   பெரும்பாலும் ஆராய்ச்சி  நூல்களில் இவை இன்றியமையாதவை  ஆகிவிட்டன,  குறிப்புகளைக் கட்டுரையினுள்ளேயே  புகுத்தலாம் என்றாலும்  வாசிப்போருக்கு அது  ஓட்டத் தடையாய் அமைந்து  படித்து முடிப்போருக்கு  மிகுதியான  நேரச்செலவாகவும்   விளைந்துவிடுதல் கூடுமென்பதை    நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.  சிறு எழுத்துரைகளுக்கு  இவை தேவைப்பட மாட்டா.

அடிக்குறிப்புகட்கு வசதி தரும் வெளியீடுகளில்    ஒரே    நூலிலிலிருந்து  ஒரே பக்கத்தில்  ஒன்றுக்கு மேற்பட்ட குறிப்புகள் தரும்படி நேர்ந்தால்  அதே நூலின் பெயரை திரும்பவும்  அச்சிட்டு  மறுதரவுகள்   உண்டாக்குவதை  எப்படி விலக்குவது ?  

அடுத்த குறிப்பில்  முழுவதையும் மீண்டும் எழுதாமல்,    எடுத்துக்காட்டாக  Ibid,  p 27  என்று குறித்து  படிப்போர்  எழுதுவோர் அச்சுக்கோப்பவர்   ஆகியோர் நேரத்தையும் கருத்து ஓட்டத்தையும்  இடையூறு இல்லாமல் செலுத்தலாம், 

இப்போது  இபிட்  ( Ibid  )  என்பதன்  பிறப்பினைத்  தேடிப்  பார்ப்போமே!

இபிட்  என்பதோ ஒரு வெட்டுப் பட்ட பதம்.  அதன் முழுமை  ibidem   என்பதாகும். இது ஓர்  இலத்தீன்  சொல்.

சரி  இந்த  இலத்தீன் சொல் எப்படி எங்கிருந்து வருகிறது?

இவ்விடம் >  இபிடம்   ஆயிற்று.

வகர -  பகர  திரிபு.   வ்வி  > பி .    b

இத்தகைய திரிபுகளில்    p,  b  வேறுபாடில்லை .  சில ஐரோப்பிய மொழிகளை  ஆய்ந்து  இதனை அறிக.

பன்னூல்களும் பயன்படுத்தும்  இதனைத் தந்த பெருமை  தமிழினதாகும்.

இலத்தீன்  ஆசிரியர்கள்  இதில் " இபி "   இங்கு  என்பதாகவும்     டெம்   விகுதி என்றும் கூறுவர் .
ஆனால்  இ  என்பதே   சுட்டு  என்றும்   இடம்  தலம்  குறிக்கும் முழுச்சொல் என்றும்  யாரும்  அறிந்ததுதான்.

  

புதன், 11 நவம்பர், 2015

மரா மரா மரம் தமிழென்று,,,,,,,,,,,

வான்மீகியார் தம் இராம காதையைத்  தொடங்கும்போது  ராமர் ஆண்ட நகராக  எந்த நகரைக் கூறுவதென்பது ஒரு தீர்வுக்குரிய பொருளாக வந்து முன்னின்றது.  ஐயாயிரம் ஆண்டுகட்கு முன் எந்த எந்த நகரங்கள் இருந்தன என்பதும் அவற்றுள் எது ராமரின் நகர் என்பதும் சிந்திக்க வேண்டியவாயின, .

முனிவர் வான்மீகி வாழ்ந்த நகருக்கு  அல்லது காட்டுக்கு  அது  அயல்  ஆயிற்று  ஆகவே அயல் என்பதை வைத்துக்கொண்டார் முன் இராமர் ஆண்டதாகக் கொள்ளப்படும் எந்த நகருக்கும்  அது அயலே ஆகும்.  ஆனால் அந்த நகர் அவர்  கதைக்கு ஒத்து வரவேண்டும்  ஆகவே    ஒத்து என்ற  சொல் தேர்வு செய்யப்பட்டது. 

 அய(ல்) +ஒத்து  + இ  -  அயோத்தி  என்ற சொல் பிறந்தது.

இராமனின்  நாடு  நகரம் முதலானவற்றுக்கு  அயலானதும்  ஆனால்  ஏனை  எல்லா  முறையிலும்   அவற்றை  ஒத்துமிருக்கும்  இடம் என்று பொருள்,  இறுதி  இ விகுதி   சொல்லிறுதியாகவும்  இடம் என்றும் பொருள் தரும்,

நாட்டை விட்டுக்   காடு சென்றோனுக்கு  நாடு அயல் என்பதும் குறிப்பு,  அவனில்லாத போதும் அவன் இருப்பதை ஒத்த  ஆட்சி  என்பது  "ஒத்து"  என்பதன்  அடுத்துவரு  குறிப்பு.   

அயல் என்பதை அய என்று  வெட்டியது சரிதான்.   பயல்  பய என்றும் வயல் வய என்றும்  தமிழ்ப் பேச்சில் வருதலால்  அய என்ற வடிவத்தையே மேற்கொண்டு சொல்லைப் படைத்து ஒரு நகர்ப் பெயர் ஆக்கினார். நிகழ்வுக்கு  அயலான  நகராயினும்   இராமகாதைக்குரிய  அசலிடத்துக்கு  முற்றும்  ஒத்த நகரம் .  

வால்மீகி ஒரு தமிழன் தான்.   வால் என்றால் தூய்மை;  மிகு +  இ    = மிகி  ஆயிற்று. தூய்மை மிக்கோன் என்பது பொருள். இவர்  ஒரு  சங்கப் புலவர்.

வால் மிகி   என்பதைத் தமிழில்  பொருளுரைத்தால்  ஓர் உன்னதப் பொருள்  கிடைக்கிறது.   சரி,  கிருதத்தில்  பிரித்துப் பார்த்தாலும்  " வளர்ந்த புற்றில்  அமர்ந்த  மேதை "  என்று  உயர்ந்த பொருள்தானே வருகிறது  என்று  வாதம் செய்யலாம்.   கதைப்படி  அவர் பிறந்தது  "பால்மிக்கி"   ( வால்மிக்கி)   என்ற  முன்னரே  அந்தப் பெயருடன் விளங்கிய ஒரு காட்டுச் சாதியில்.   அவர்களுக்கு எப்படி அந்தப்பெயர் கிட்டியது?  அவர்கள் எல்லோருமா  புற்றில் கிடந்து  அந்தப் பெயர் பெற்றார்கள்?   பின்புதான் சாதிப்பெயர் என்றால்  இத்தகைய ஓர்   உலகப் புலவனைத் தந்த கூட்டத்திற்கு  வால்மிகி   என்ற காட்டுச் சாதி  என்ற தகுதிதானா பரிசு ?   காட்டில் அவர் படித்ததாக  புலமை பெற்றதாக  எந்தச் செய்தியுமில்லை. கடவுள் அருளால் எழுதினார் என்பது  நம்பிக்கையாகலாம்  ஆனால்  வரலாற்றுச் செய்தியாவது எப்படி   -----  என்றெல்லாம்  கேள்விகள் எழலாம்  

வட இந்தியாவில் பால்மிக்கி என்றொரு காட்டுவாசிக் கூட்டம் வாழ்ந்து வந்தனர்.   இவரை அந்தக் கூட்டத்துடன் தொடர்புபடுத்திக் கதை புனையப்பட்டது.   அவருடைய  நூலிலும்  இடைச்செருகல்களைச் செய்தனர்.

மரா மரா என்றால் ராம ராம என்று வந்துவிடும் என்றனர்.
மரம் என்பதே தமிழென்று தெரியவில்லை?


முதலில் அது தமிழில் எழுந்து பின் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருத்தல் வேண்டும்.  தமிழ் மூலம் அழிந்தது.அப்போது எழுத்துள்ள மொழி தமிழ்மட்டுமே.

சீதையைக் கடத்த அண்மையில் உள்ள தமிழ் நாடே மிக ப்
பொருத்தமான இடம். புட்பக விமானம் எல்லாம் கதை.

சீர் >  சீ>  சீதை.

பின் சீதை  >  ஸ்ரீ தை  >  ஸ்ரீதா.

இராமாயணத்துப் பெயர்கள் பலவும் காரணப்பெயர்கள்.

http://sivamaalaa.blogspot.sg/2015/11/valmiki-and-his-mother-tongue.html

செவ்வாய், 10 நவம்பர், 2015

vAlmiki and his mother tongue,

இந்தப் பெயர்களைப் பாருங்கள்:

இர்  >  இராமர் >  ராமர்.
இர் >   இரா வண்ணன் > இராவணன் >  ராவணன்.
விழு + பீடு + அணன் >  வி + பீடணன் = விபீடணன்.>  விபீஷணன் 
கை கேசம் இ  > கைகேசி >< கைகேயி.
ஆழ்ந்த நேயம் >  ஆழ்ந்தநேயர் >  ஆஞ்சனேயா
ஆய்ந்த நேயர் > ஆஞ்ச நேயர்  என்றும் வரும்,  
ஆய்ந்த =  தேர்ந்தெடுத்த;  "  ஆய்மயில் கொல்லோ?":  குறள். 
மரை  ​+ ஈசன் =  மரையீசன் >  மாரீசன்   ;  மரை -  என்பது மான்  தமிழ்.
இறைவர் >  இஷ்வர் > ஈஷ்வர் > ஈசர் /  ஈசன் 

காட்டு வாசியான வால்மீகி  பிராமணர் அல்லர் .  பால்மீகி >  வால்மீகி  என்பது  ஒரு  தாழ்ந்த சாதியின் பெயர்,   அன்று உயர்வானவர்களாய்  இருந்தனர்!?  இதில்  நமக்குக் கவலை இல்லை.  அவர் என்ன மொழி பேசினார்?   சமஸ்கிருதம்  பேசினர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  சமஸ்கிருதத்தை  அவர்தம் காட்டுவாசிக் குடும்பம் பேசியதா?

அண்மைக் காலம்வரை பல்வேறு  திராவிட மொழிகள் வட இந்தியாவில் வழங்கி  வந்தன.  இவை பலுச்சிஸ்தானம் வரை நீண்டு வழங்கின.  எழுத்து  இல்லாத மொழிகள்.  அவற்றுள் பல அழிந்தன.  1970ல் வழங்கின  சில 
இப்போது  இல்லாதொழிந்தன .

இந்த ஆதிப்புலவர் எந்த மொழியில் எழுதினார்?   சம்ஸ்கிருதத்துக்கு அப்போது  எழுத்துக்கள் இல்லையே!.

ஏன் தமிழில் பிரிக்க,  பொருள் கிடைக்கிறது?

இவற்றைக்  கண்டு  தெரிவிக்கவும்.    
   

வேசி சொல்லமைப்பு

வேசி என்ற சொல் ஓர் இழிவழக்கு என்று சொல்லத் தக்கதாகும்.தமிழரிடைச் சிற்றூர்களில் இன்னும் வழக்கில் உள்ள பதம் ஆகும்.  பொருள் பதிந்தது  பதம். பதி + அம்  =  பதம். பதிதல் -  உள்புகுந்து இருத்தல். 

முன் இடுகைகளில் யகரம்  சகரமாகத் திரியும் என்று கண்டோம்.  மயக்கு > மயக்கை>  மசக்கை  என்பது  முன் இடுகைகளில் நீங்கள் கண்டவற்றுடன் கூடுதல் ஒன்றாக வைத்துக்கொள்க.

வேய்தல் என்றால்  மேல்  போடுதல் ;   மேல்  அணிதல் .  மேலிட்டுக்கொள்ளல்.  .  கூரை வேய்தல் ஓர்  எடுத்துக்காட்டு.   பொது மகளிர் தங்கள் மேனியில்  வாசனைப் பொருள்களைப்  பூசிக்கொள்வதும்,  அழகிய ஆடைகளை  அணிந்துகொள்வதும் மை இன்மணக் குழம்புகள் முதலியவை பூசிக்கொள்வதும் ஆகியன செய்வர்,  தலையிலும்  கழுத்திலும் மார்பிலும்  கைகளிலும் அணிகள் கூடுதலாகத்  தரிப்பர்   இதனால் இவர்கள் வேய்ந்து கொள்பவர்கள் .  மைவிழியார் மனையகல் என்றாள்  ஔவைப்பாட்டி,

கிண்கிணி தண்டை சதங்கை சிலம்பொலி 
எங்கும் இசையுடன்  முழங்க ----  கால்கள் 
தகதிமி தகதிமி தகதிமி தகவென தாளம் போட 
மைவிழி  கைவளை யாட 
மரகத மணி வளை ஆட 
உம்முடன் ஆடுவேன் 
புதுமலர்  சூடுவேன் 
புலவி மன மகிழக் குலவி  அனுதினமும்
புதுமலரணைதனில்  கூடிடுவேன் 

என்பது  கவிஞர்  சந்தானம்  வரைந்த பாடல்.   தேவரடியாள்  தன்    வாடிக்கையாளனிடம்  மலர்க்கணை தொடுப்பவள் என்கிறார்  கவி பாப நாசம்  சிவன் .

ஆகவே :

வேய்தல் >(  வேயி  ) >  வேசி    

என்றமைந்ததே  வரைவின்மகளிரை ( வரம்பு கடந்த மகளிரை ),  பரந்து  ஒழுகும்  பரத்தையரைக்  குறிக்க வந்த  குறைதரம் உடைய சொல்.

வேய்ந்து  மயக்கும் வேயியரை  வேசியர் என்று கண்டுகொள்க .  

இப்போது  மேல் யாம் குறித்த "வரைவின்மகளிர் " என்ற தமிழ்ச்சொல்லை, சமஸ்கிருதத்தில்  எதிர்கொண்டு  மகிழ்ச்சி கொள்வோம்,    வரைவு  =  வரம்பு,  வரையறை.  இல் = இல்லாத,  மகளிர் =  பெண்கள்.  வரைவின்மகளிர் என்பது தமிழில் அமைந்த ஒரு சொன்னீர்மைப் பட்ட தொடர்,  இதை vAravanitA  "வாரவனிதா " என்று   கிருதமொழி  எடுத்துக்கொள்கிறது. இல் என்ற நடுச்சொல்  இல்லையானதுடன், மகளிர் என்பதுக்குப் பதிலாக "வனிதா " என்ற அழகிய சொல் கூட்டப்பெறுகிறது,  வனிதா என்பதும் வனப்பு என்ற தமிழுடன் தொடர்பு உள்ள சொல்.  வாரவனிதா ஈரானிய மொழியில் உள்ளதா என்று தேடிப்பார்க்கவும்.

 வேசி  என்ற தமிழ்ச்சொல்லும்  கிருதத்தில் சென்று  பொருதுகின்றது,  இதனால் கிருதவளம்  பெருகுவதாயிற்று,  வேசி  குறிக்க   27  சொற்கள்  கிருதத்தில்        உள்ளன ,
  ஷுண்டா  என்ற கிருதமொழிச் சொல் மலாய் மொழியில் "ஸுண்டால் "  (பொருள்  வேசி )   என்று திரிந்து வழங்கும்.   "பெரெம்புஅன்  சுண்டால் "
என்பர்

ய  -  ச  திரிபு:    கூடுதல்   எடுத்துக்காட்டுகள் 
http://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_5.html 

http://sivamaalaa.blogspot.sg/2015/11/blog-post_5.html

Tamil words for screw and spanner etc

இவற்றுக்கான   தமிழ்ப்பெயர்கள் இப்போது  மறக்கப்பட்டு வருகின்றன.

இவைகளைப் பயன்படுத்துங்கள்.

screw nail  = மறையாணி ,   திருகாணி 

spanner =  மறைமுடுக்கி   (  மறைமுடிக்கி என்கிறது தமிழ்ப் பேரகராதி )

screw  driver  -   திருகுகோல்,  திருகி,  திருகோட்டி,  மறைக்கோல்.  தக்கைமுறுக்கி. மறையிறுக்கி. 

திங்கள், 9 நவம்பர், 2015

மழை நிற்க மந்திரத்தால் வேண்டி.....

பட்டுப் பட்  டென்று பட்டாசு  வெடியென்றால்
எட்டும்  தொலைவனைத்தும்  கொட்டு மழைவெள்ளம்,

வாங்கிவைத்த வெடிச்சுருள்கள்  வாங்குவார் இல்லாமல்
ஏங்குகின்ற கடைக்காரர் தாங்கு நட்டம் ஈடெங்கே?

சாலைகளில் குண்டுகுழி  கோலெடுத்துச் சென்றாலும்
நாலுபுறம் வெள்ள நீரால்  நடப்பதெங்கே கடப்பதெங்கே

சென்னை வாசிகட்கு சேர்ந்தபடி இரண்டு நாளாய்
என்ன இது  படுதொல்லை! இனிக்குறைய வாய்த்திடுமோ?

மழை இல்லை மழைஇல்லை என்றிருந்த நாள்போக
மழை நிற்க மழை நிற்க மந்திரத்தால் வேண்டினரே

எல்லாம்  அவன்செயல் என்றிருக்க லாமென்றால் 
நல்லாப் பெய்மழையால் நாடெங்கும்  காட்டாறு..

ஈண்டும் இயற்கைதரு இத்தகைய துன்புகளை
தாண்டிடவும்  இயலவில்லை வேண்டிடவும் விளைவுண்டோ? 

ஞாயிறு, 8 நவம்பர், 2015

நீரக சூறா > நரகா சூரா. Deepavali Greetings

 தீபாவளி கொண்டாடும்  அனைவருக்கும் எம்  தீபாவளி வாழ்த்துக்கள் .

தீபாவளி என்ற சொல்லுக்குப் பல பொருள் கூறப்படுகிறது. இச்சொல் எங்ஙனம் அமைந்தது  என்பதில் குழப்படி நிலவுவதால்  இச்சொல் மிக்கப் பழமை வாய்ந்த ஒரு சொல்லாய் இருக்கக் கூடும் என்று  எண்ணத் தோன்றுகிறது.

தீபாவளி என்பதை   தீப + ஆவலி  என்று பிரித்தல் கூடும்.   ஆவலம் கொட்டுதல் என்றால் சுற்றி நின்றாடுதல்.  தீபத்தை ஏற்றி வைத்து  சுற்றி நின்று கைகொட்டி ஆடுதலை இது குறிக்கிறது.   ஆவலம்> ஆவலி .  ஆவலம்  -  விளக்கை வலமாகச் சுற்றி  ஆடுதல். .  இது ஆயர் குலப் பெண்களிடத்து நடைபெற்றதென்பர்.  இவர்கள் கண்ணனை வழிபட்டதால்,  கண்ணன் இருளகற்றி  ஒளியூட்டுபவனென்பது இதிலிருந்து பெறப்படுகிறது.

ஆவலி  என்பது விளக்கு வரிசையைக் குறிக்கும் என்றும் கூறுவதுண்டு.

இப்பண்டிகையுடன்,  நரகாசுரன் கதையும் உடன் கூறப்படுவதுண்டு.
நரகாசுரன்  யார்?  அவன் கண்ணனின் மகன் என்றும் கூறுவர்.
கண்ணன்  மகாவிட்ணுவின்  தோற்றம்.   அவன்  நீல நிறம்.   கடலும் ஆகாயமும் நீல நிறம்.  அவன் நீரின் அமைப்பு அல்லது அம்சம்.

கடல் நீரில் தோன்றுவது  கடற்புயல் அல்லது  சூறாவளி.  கடவுளான  கண்ணன்   நீரக சூறாவளியை அடக்கினார்.

நீரகத்தே தோன்றிய சூறாவளி  " நீரக சூறா":  அல்லது நரகாசூரா எனப்பட்டது
அவன்" அடங்கியதும்"    நரகா சூரா வீழ்த்தப்பட்டான் எனப்பட்டது.  (உருவகம்​​) கடலில் தோன்றிய சூறா(வளி  கடலில் பிறந்தது;  ஆகவே கடலுக்கு மகன் ஆயிற்று/  ஆயினான் .  கடல்வண்ணன் கண்ணன் ஆதலின் "கண்ணனின் மகன்,"

சூறாவளி  வீசத் தொடங்கிவிட்டால்  நீரகமாகிய கடல்,  நரகம் ஆகிவிடுகிறது.
அதைவிட வேறு நரகம்  ஏது? நீரக சூறா >  நரகா சூரா.

இந்தியத் துணைக்கண்டத்துப் பெயர்கள் பலவும் தமிழ்த் திரிபுகள்.   ஒரு காலத்தில் தமிழே எங்கும் வழங்கியது;  அதுதான் காரணம்.

ஒரு காலத்தில் நாம் இயற்கையை வணங்கியவர்கள்.  அதனால் நம் தெய்வப் பெயர்கள் பல இயற்கையின் பெயர்கள்.

விண்  >  விண்ணு >  விஷ்ணு.
கரு >  கரு+ உண்+ அ  >  கருண >கர்ண >

கண்ண.  (கருப்பு சாமி )
சிவப்பு >  சிவன்.  ஒளி
கரு:  இருள்.

இந்தப் பெயர்களைச் சங்கதச் சாயலில் மாற்றித் தருவதன் நோக்கம் என்ன?தமிழன் சாமியைக் கும்பிடுகிறோம் என்ற எண்ணம் மனத்தில் தோன்றுமாயின் கும்பிடுவோனுக்கு  வெறுப்பு தோன்றக்கூடும். அதைப் பொதுமொழியில் தருவதன்மூலம் இக்கசப்பு  உணர்ச்சியை         மாற்றி இறை  நெருக்கத்தை ஏற்படுத்தவே  ஆகும்.

இவை முன்பு விளக்கப்பட்டுள்ளன.

சனி, 7 நவம்பர், 2015

valmiki caste

சில வட இந்திய மக்கள் கூட்டத்தின் பெயர்த் திரிபுகளைப் பார்ப்போம் 


ரபிதாஸ்  =  ரவிதாஸ் >  ரோகிதாஸ் 

இங்கு ப  > வ > க  என்று திரிந்தன.

தர்கர் >  தரிகர்   இங்கு இடையில் ஓர்  இகரம் ரகர ஒற்றின் மேல் ஏறியது.

ரோஹிது  ரோகிதாஸ் 

இங்கு து ஈற்றில்  ஆஸ் என்ற இறுதி வந்து மிகுந்தது.


பால்மிக்கி  >  வால்மிகி  ப > வ திரிபு.

வால்மீகி என்பவர்கள்  வேட்டுவச் சாதியினர்.  வால்மீக முனிவர் இந்தச் சாதியினர்.   இவர் பின் சில பிராமண[ப்  பின்வாரிகளை உருவாக்கினார் 
இவரே  முதல் முதல் இராமாயணம் பாடியவர் என்று கதைகளால் தெரிக்கிறது . 

இவரது சொந்தப் பெயர் "ரத்னாகர" என்று  கூறப்படுகிறது.  எனினும்  வால்மீகி என்ற  சாதிப்பெயராலேயே  அறியப்படுகிறார்.   இதை ஒருவாறு மறைத்து  தியானத்தில் இருந்தபோது புற்று வளர்ந்து இவரை மூடியபடியால்  இப்பெயர் ஏற்பட்டது  என்பது, மறுபொருள் உரைக்கும்  நன்முயற்சி  ஆகும். சில காட்டுவாசிகள்  ஈசல் உண்பவர்கள் என்று தெரிகிறது. இதை இப்போது விரித்துரைக்க வேண்டியதில்லை.  வால்மீகி  பெரும்புலவரும்  அறிஞரும் 
ஆவார் என்பது ஐயத்துக்குரியதன்று.

 ஆனால் இராமர் வாழ்ந்த காலமும்  வால்மீகி வாழ்ந்த காலமும் வெவ்வேறு  என்று  தோன்றுகிறது.   இராமர்  வால்மீகிக்கு 5 ஆயிரம்  ஆண்டுகள்  முற்பட்டவர் என்பர் .  இராமரைப் பற்றிய சிதறிய குறிப்புகள்  பல்வேறு  நாடுகளிலும்  கிடைத்துள்ளபடியால்  இவை நன்கு ஆராயப்படுதற்  குரியவை  ஆகும் .   வால்மீகிக்கு  முன் எழுந்த வேதங்களிலும் இராமரைப் பற்றிய குறிப்புகள்  கிட்டுகின்றன என்பர்/  ஆதலின்  வால்மீகி  இராமருடன் சம காலத்தவர்  என்பது  பின்னர்  வால்மிகியின்  நூலில் நிகழ்ந்த   இடைச்செருகள்களையே  தெரிவிக்கின்றன  எனின்  ஆய்விற்குரியதே.   முஸ்லிம்  நோன்பு மாதம்    ரமதான்   ( இராமதானம் ​    )    ரம்ஜான்  ( ராம ஜென்மம் ​)   என்பனவும்  ஆய்தற்குரியவை  என்பர்  ஆய்வாளர் சிலர்.  
  இவற்றை இப்போது  தொகுத்தளித்தற்கு    தருணம்  இல்லை   
  






வியாழன், 5 நவம்பர், 2015

வாசித்தல் படித்தல்

 இவ்விரண்டு சொற்களும்  ஏறத்தாழ  ஒரே பொருளுடையவை .

வாசித்தல் என்ற சொல்லைப் பார்ப்போம்.

இச்சொல்  வாயி என்றே மலையாள மொழியில் வருகிறது.  அதாவது எழுத்தில் இருப்பதை வாயினால்  வெளிப்படுத்துதல் என்று பொருள்.

வாய் >  வாயி  >  வாயித்தல் >  வாசித்தல்.

யகரம்  சகரமாக மாறும் என்பதை   முன்னரே பல இடுகைகளில் எடுத்துக் காட்டியுள்ளோம்.

எ-டு:  வாயில்  >  வாசல்.
            நேயம்  >  நேசம்    
             தோயை > தோசை .  ( நீரில் தோய்த்து  அரைத்துச் செய்த  சிற்றுணவு,)                   தோயல். 
             தேஎம்>  தேயம் >  தேசம். ( தேஎம்  என்பது  பழந்தமிழ் )                 
            ஒயனை  >  ஒசனை  
( ஓய்தல் >(ஆய்ந்து ஓய்ந்து பார்த்தல் )  >  ஒயனை  >  ஆல் + ஓசனை =  ஆலோசனை : ஆலமரத்தடியில்  சிந்தித்தல் . இதில்  அகல்>  ஆல்  ஆகி  அகலச் சிந்தித்தல் எனினும் ஆகும். )

            ஒயனை >  ஓசனை    இதுபின் யோசனை ஆயிற்று.
             ஆனை  >  யானை;     ஆண்டு >  யாண்டு.   இவை  கண்டு  இத்திரிபு                  உணர்ந்து கொள்க.
             காயல் > ( காசல்) >  காசம் .   இருமல், காய்ச்சல்  முதல் பல அறிகுறிகள் காட்டும்  என்புருக்கி  நோய்.  காச நோய். காயல் + நோய் =  காயனோய் > காச நோய் <  காசம் + நோய்  என்ற பிறழ் பிரிப்பு ,  காசம் என்ற சொல்லை  ஈன்றது .   

படித்தல் என்பது  நூலில் உள்ளபடியே  கற்று அல்லது வாசித்து அறிதல்.  படியே உணர்தல் அறிதல் அல்லது ஓசை செய்தல்  படித்தல் என்க,

படி + அம்  =  பாடம் ;  முதனிலை நீண்டு  அம்  விகுதி பெற்ற தொழிற்பெயர். இதில் படி என்பதிலுள்ள இகரம் குன்றியது ,  நடி + அகம் =  நாடகம்  என்பதிலும் 
இகரம் குன்றி முதனிலை நீண்டு விகுதி பெற்றது.   இப்படிப்  பல உள,


----------------------------------------------------------------------------------------

ஆம் >  ஓம் ,  அம்மை > உம்மை;  அம்மா> உம்மா > உமா  முதலிய திரிபுகளை 
மறத்தலாகாது.  ஆமை  >  ஏமை > ஓமை ;   ஓம்  அடிச்சொல் : ஓமை;  ஓம்பு. 
ஏமை also connected to  ஏமம்.   ஓமம்  a medicinal seed that protects you.  Notice the central concept of protection. Will explain when opportunity arises.  

புதன், 4 நவம்பர், 2015

இலஞ்சம்

தெலுங்கிலும் கன்னட மொழியிலும்  லஞ்சம் என்றசொல்லே  வழங்குகிறது.மலையாளத்தில் மட்டும்  கையூட்டு என்ற நல்ல தமிழ்ச்சொல்  பயில்கின்றது.
சட்டைக் கையால் கொடுத்தல் என்று ஜப்பானிய 
 மொழியிலும் எண்ணணெய்  இடுதல் என்று  கிரேக்க மொழியிலும் சொல்வார்கள் என்று தெரிகிறது. மாமூல் என்று கூறுவதுண்டு ஆனால் இது தமிழன்று.  உருது என்பர், தமிழிலும்  லஞ்சம் என்ற சொல் வழக்கு உள்ளது.

குற்றத்திற்காகப் பிடிபட்ட ஒருவனோ  அல்லது ஒரு காரியம் ஆகவேண்டி மிகவும் ஆழ்ந்து விரும்புகிறவனோ இரப்பது போல் வேண்டிக்கொண்டு அதற்கு ஏதேனும்  ஊக்கத்தொகை தருவதே லஞ்சம் என்னலாம்,

இரந்து :  இலஞ்சு  என்று வரும்
குறைந்து ;  குறஞ்சு.   நிறைந்து >  நிறைஞ்சு  என்றெல்லாம் வருகின்றன அல்லவா?  ரகர லகரப் பரிமாற்றம் பல மொழிகளில் காணப்படுகிறது,

இறைஞ்சுதலும் இரந்து வேண்டிக்கொள்ளுதல் போன்றதே

ஆகவே இலஞ்சு  > இலஞ்சம் என்று அமைந்துள்ளது.

வேதங்களில் இச்சொல் இல்லை. லஞ்ச வழக்கம் பிற்காலத்தது என்று தெரிகிறது.  சங்க நூல்களிலும் இல்லை

=========================================================================
లంచం    lanjam telugu
ಲಂಚ      lancha kannada''

also in Skrt

kimpaLam  in Tamil colloquial...

திங்கள், 2 நவம்பர், 2015

To the Hero who started coming at nights

இது தலைவியிடம்   தோழி சொல்வதுபோல்  அமைந்த பாட்டு,    தோழி தலைவனைத் தனியே  எதிர்கொண்டபின்   தலைவியிடம் வந்து பேசுகிறாள்.  தலைவி   அவள் தாய் விதித்த வீட்டுக் காவலுட் பட்டு  உள்ளிருப்பவள்.  பாடல்   வருமாறு:-

தினைகிளி கடிக எனில்  பகலும் ஒல்லும்;
இரவு நீ வருதலின் ஊறும்  அஞ்சுவல்;
யாங்குச் செய்வாம் எம் இடும்பை நோய்க்கு என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து
ஓங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற
ஐதே காமம் யானே
கழிமுதுக் குறைமையும் பழியுமென்  றிசினே   ( குறுந்  218)

இப்பாடலைப் பாடியவர்  தங்கால் முடிக்கோவலனார்.

பொருள்:

தினைகிளி கடிக எனில்  பகலும் ஒல்லும் -   தினையில் வந்து அமரும் கிளிகளைப் போய் விரட்டு என்று அம்மா அனுப்பினாலும் ( அவனைப்)  பகலிலாவது  காண முடியும்;

இரவு நீ வருதலின் ஊறும்  அஞ்சுவல்; -  நீ ( தலைவன்) இரவில் வருவதால், (  அவனுக்கு) ஏதேனும் துன்பம் நேருமோ என்று அஞ்சுகின்றேன்;

யாங்குச் செய்வாம் -  என்ன பரிகாரம் செய்ய இயலும்?

எம் இடும்பை நோய்க்கு என  -  எமது   காதலால் வந்த துன்ப நோய்க்கு என்று;

ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து - அப்படி நான் சொன்ன அனைத்திற்கும்   வேறுவழியிற் சிந்தித்து;

ஓங்குமலை நாடன் உயிர்த்தோன் -  பெருமை பொருந்திய மலை நாட்டினன் ஆகிய தலைவன்  பெருமூச்சு எறிந்தான்;

மன்ற ஐதே காமம்  -  மிகவும் நுட்பமானதே இக்காதல்;

யானே கழிமுதுக் குறைமையும் பழியுமென்   றிசினே.  -- மிக்கமுதிர்ந்த அறிவுடைமையும்  ஆனால் ஊரார் பழித்தலும் உடையது  என்று  கூறினேன் ( என்பவள்  தோழி). 

The hint here is about eloping. Solution is there.
Can it be implemented without the affect of  good reputation hitherto maintained....?

எம் இடும்பை  என்பது:    யான்  என்றவிடத்துத் தலைவி  தன்னைச் கட்டிக்கொள்கிறாள்.  எம்  என்கையில்  தலைவியுடன் தன்னையும்  உட்படுத்திக்  கொள்கிறாள்.  இது  தலைவி  உழக்கும்  தனித்துயரைத்   தனக்கும் சேர்த்து  வந்ததாகக் கூறும்  பண்பாடு ஆகும்.   காதல் வயப்பட்டு அவள் கிடக்கின்றாள் என்று பேசுதல்  தோழிக்குரிய பண்புடைமை ஆகாது என்பது இப்பாடலில்  மிக்க  நுட்பமாக உணர்த்தப்பெறுகிறது.

கழி முதுக்குறைமை:  ஒப்பீடு:

சிறுமுதுக்குறைமை. Precociousness; இளமையிற் பேரறிவுடைமை. இனியசொல்லான் சிறுமுதுக் குறைமை கேட்டே (சீவக. 1051).
சிறுமுதுக்குறைவி n. < id. +. Precocious girl, a term of endearment; சிறுபிராயத்தே பேரறிவுடையவள். சிறுமுதுக்குறை விக்குச் சிறுமையுஞ் செய்தேன் (சிலப். 16, 68).   These are cited for comparison.

கழி =  மிகுந்த .

"குறைமை "   :  நிறைந்த அறிவுடைய ஒருவரை " அவர் கொஞ்சம் அறிவாளி ;  எதில் ஈடுபடுவது எதில் ஈடுபடக்கூடாது  என்று தெரிந்தவர் . " என்பதைக் கேட்டிருப்பீர்கள். இங்கு கொஞ்சம் என்றது உண்மையில்  நிறைந்த அல்லது போதிய என்று பொருள்.

சூழ்நிலை :  கிளி விரட்டக்கூட வெளியிற் செல்லமுடியாத வீட்டுக்காவலில்  தலைவி துன்புறுகின்றாள். தலைவன்  இரவில் மட்டுமே வந்து அவளை யாருமறியாமல் சந்திக்க முடிகிறது.  " இப்படி நீ வருவதால்  உனக்கு ஏதேனும்
துன்பம் நேரலாமே . புலி கரடி  மேடு பள்ளம் எல்லாம் உள்ளனவே.  எத்தனை
நாள் இப்படிக் காலம் கடத்துவாய் ?"    என்று  தலைவனைக் கேட்டேன்,  தலைவியின் துன்பத்திற்கு என்னதான் பரிகாரம்? என்றேன்.   எங்காவது  போய்விடுங்கள்  என்று  அறிவுரை வழங்குவது என் நோக்கமன்று.  அவனே பெருமூச்சு எறிந்தான் . வேறுமாதிரி நடந்து கொண்டால்  (ஓடிவிட்டால்  )  அதுதான் அறிவுடைமை  ;  பழிச்சொல்லுக்கு  அஞ்சிப் பயனில்லை என்று தலைவனிடம் சொன்னேன் .  ஆனாலும் அது அவன்  உட்கிடக்கையே அன்றி  என்  அறிவுரை அன்று.  வேறு வழி ஒன்றுமில்லை.  என்று தலைவியிடம் தோழி சொல்கிறாள்.

தலைவனின் பெருமூச்சுக்குத் தோழி கொண்ட பொருள்மேல்  இந்தப் பாடல் செல்கிறது .  காதலோ  மிக்க நுட்பம்  உடையது.   இதை முற்றும் உணர்ந்தவள்  தோழி  போலும்.  உணர்ந்தவள்போல்தான் உள்ளது அவள் கழறியவை.  தலைவி  பேரறிவு உடையவள்   (  கழி முதுக்குறைமை )  என்று  தோழியே சொல்கிறாள். ஒடிப்போவதை அவள் விரும்பமாட்டாள் என்று  உணர்ந்துகொண்டவள்  "என் கருத்தன்று   அவர்  அப்படி  எண்ணிப் பெருமூச்சு  விட்டார." என்று தற்காத்துக் கொண்டு  பேசுவது  புரிகின்றதன்றோ?

வீட்டுக்காவல் முதலியவை  நடந்தும்  இதுவரை  ஓடிவிடாமல்  இருந்தது  தலைவியின் பேரறிவு உடைமை ; இனி ஒடிப்போவதை  மேற்கொள்வதே  உனக்குப்  பேரறிவுடைமை என்பது  தோழியின்   அறிவுறுத்தல் , அதைத்  தயக்கத்துடன் வெளிப்படுத்தினாலும்.   

Under such pressure the hero should proceed to arrange for marriage. Elopement is not a clear solution. A matter only for discussion. The poet ends his poem well before coming to such realities as marriage.

நல்ல இனிய பாடல். படித்து இன்புறுங்கள்.

Shall review to make the import of this poem clearer.
Note: There are some  bugs here.  Certain words appear in unintended colour(s). A  letter T appears on the screen in the stanza and refuses to be erased.  Pl ignore this.

ஞாயிறு, 1 நவம்பர், 2015

பட்டி மன்றத்துக்குஇன்னொரு சொல்

இதற்கு  இன்னொரு சொல்.  அதுவும் பழந்தமிழ்ச் சொல்.  அதை இப்போது கண்டு அதுபற்றி அளவளாவி மகிழ்வோம். 

அந்தச் சொல்:  உரற்களம் என்பது, 

இக்கூட்டுச் சொல்லில் வந்துள்ள முதற்பாதி  உரல் என்பது. இதிலிருந்து தெரிந்துகொள்வது என்னவென்றால் உரை என்பதன்மற்றொரு வடிவம்  உரல் என்பதாகும்.  இந்த உரல்  சொல்லாடுதல் என்று பொருள்படுவது.  இடிக்கும் உரல் வேறு.
இதனை இப்போது ஆய்வோம்.

உர் >  உரல்.
உர் >  உரை.
உர் >  உரி   அதாவது உரிச்சொல்.

உர் என்ற மூலச்சொல்லிலிருந்து உரல் என்பது வருகிறது.

உரற்களம் என்றால் மக்கள் உரலென்னும் இடிகல்லை   அல்லது மர உரலை நினைத்துக்கொள்வர் ஆதலால் இதை உரைக்களம் என்று சொன்னால்  ஏற்பரோ தமிழறிஞர் ?  தேவையில்லை  பட்டிமன்றம் என்ற சொல்லே போதும் என்பரோ?இதை அவர்களின் பார்வைக்கு விட்டுவிடுவோமே.

will edit later

மற்ற தீவிரவாதிகள் செயலை எங்கள் தலையில் வைப்பதா?




RANCHI: Rashtriya Swayamsevak Sangh (RSS) has hit out at accusations of it being involved in recent hate crimes and said that there were attempts to put the organization 'in the dock.' Suresh (Bhayya) Joshi, general secretary of the organization, said on Sunday that there is a 'pre-planned conspiracy to demean Hindus.'


Joshi also asked political personalities to avoid making provocative statements and said individual leaders are responsible for what they say in public. "In the first place, responsible people should know what they are speaking and also, they must keep in mind Hindu values while issuing a statement," said Joshi.

read more at:


http://timesofindia.indiatimes.com/india/Hate-crimes-a-pre-planned-conspiracy-to-demean-Hindus-RSS/articleshow/49617992.cms. http://timesofindia.indiatimes.com/india/Hate-crimes-a-pre-planned-conspiracy-to-demean-Hindus-RSS/articleshow/49617992.cms



http://timesofindia.indiatimes.com/india/Hate-crimes-a-pre-planned-conspiracy-to-demean-Hindus-RSS/articleshow/49617992.cms''

எவர் எவர்  செய்தனர் உதைத்தல் கொலை==அவை
கொண்டு நீர் வைத்தீரே  எங்கள்  தலை
நூற்றினை எட்டும்பல் ஆண்டு சேவை==வந்து 
தோன்றும் நலம் அன்றி  வேறு யாவை
\

Russian aircrash

விழுந்தவா  னூர்தி வினவினார்க்கு யாங்கள்
விழச்செய்தோம்  என்றார் இசுலாம் புதுப்படைஞர்;
வெற்றுரை இஃதென்று வீசி  எறிந்துவிட்டார் 
கற்ற அறிஞரும்  காக்குமதி காரிகளும்!
மொத்ததில் யாங்ஙனது முட்டிக்கீழ் வீழ்ந்ததென்று
எத்திக்கில் யாரும்  அறியார்  இதுவரைக்கும்.
தம்முயிர் நீத்தார் பயணிகள்  நம்கண்ணீர்
விம்மிக் கலங்கிக்கன் னங்கள் வழிந்தோடும்
உட்பகையால்  மாந்தர் ஒடுங்கும்  இதுநாளில் 
முட்புகரை நீக்குவனோ  ஞால முதல்வனுமே
எப்படி என்பது யாமறியோம் மீட்டெடுக்கும்
செப்படி வித்தையவன் பால்.

Meaning:

 இசுலாம் புதுப்படைஞர்    ;         IS terrorists     
A direct translation of the term Islamic State  may not convey the intended meaning.    Hence this phrase 
இசுலாம் புதுப்படைஞர்  has been chosen.   


முட்;புகர்  முள் போலும் நம்மைக் குத்துகின்ற ஒரு குற்றம்  அல்லது குற்றச் செயல்

http://www.abc.net.au/news/2015-10-31/russia-bound-airliner-crash-in-egypt/690232


update

http://traffic.outbrain.com/network/redir?p=ND9GQSdiVPiWCN2DIrxAsyJrWdGn6h2q3eG4fANQ2BHVyg9am8HnVdvdn_DlRgk9ktvuRNfYK1IDFEFawa


-kSXs8f2FtYYPK0itjzVLnXVe63BrSizT_3YJQlAphmv12Jbh1AMfSySpL0WdUqzjnHKnsbUm5jIjsiZWXtNewDj54tQDS1bXdkNOTKc26JfEkPsgc2coYMGuLezHuLodshxXaPcMZ0s0amhi_Yqk4vt0qv7mJtV8E5jyxePD9w_rtOASlH5Yc3WmCxd4_oFalSlOErVhr9UgrbVY33VPmoCZZqQN53lfM5WVZGnp-XDg1JdtoQow1WOH9AMSLfQkYHKEY-CjLFhnQ_s8SaSIwQsmJxAHdEKlXLbc1dx-eebfDZZLSr1G2Mw6Ahl9iFM98b7l6476pSObiZV7lbsHQ_sbWYVpg55GpkC65OGnutNaWMC5hdD_mUxamZjS6yxtNLY9nYU5PyIBMAkVK_EtX1BYhtW9_Cmhq2AbRy0Cnwcl5&c=976a553f&v=3

http://traffic.outbrain.com/network/redir?p=-y4BLckF3PxloHrEGQEi1n7K-56kBbC3hhkB4e7YMqZVj6kwutNVV2lfkLUVXHdq-zU9JD63QCwl0gIDQyp42gFzghGDs_QciajXRbOI1tcdFGm1PP_guaiHzlLfZwjKTL5JMTkZ1J45hu9ClbQ50FtSl6Emqwvsj6uHM5OPKwozyzo1r2J_eVnUmM7O3D79gOLtjcEcsp3DqVVI3PpFgPe5tNKRVXKGE-2-5TLezUa_JbqW6gabOMkDzd8NLXPonNP5SH2ZhYtx33PUt0KUs_LBZ9p6S3VPPZhi5zbq0Zyv2gR0BbXeE8VVA_3glvfLYDzO-jV_ImHeZQqQ5jVjyVW8PO8ChGZUhDWc7NZnas0p-c-U9EGohUOcsWhPKQwgOSUqMx-wbHWtbkPHLXs_esczQ7NdtwIv6YrFgKz4J_WfUeoPNSIUgXMXVo2y3JVNHkOkRRn-EOkJjn8KOaE09ezYUWuUZZnoHb7NOqJwKK9xP5XmqI2AI4sAQZ7bZqBV&c=299b5a31&v=3

http://traffic.outbrain.com/network/redir?p=-y4BLckF3PxloHrEGQEi1n7K-56kBbC3hhkB4e7YMqZVj6kwutNVV2lfkLUVXHdq-zU9JD63QCwl0gIDQyp42gFzghGDs_QciajXRbOI1tcdFGm1PP_guaiHzlLfZwjKTL5JMTkZ1J45hu9ClbQ50FtSl6Emqwvsj6uHM5OPKwozyzo1r2J_eVnUmM7O3D79gOLtjcEcsp3DqVVI3PpFgPe5tNKRVXKGE-2-5TLezUa_JbqW6gabOMkDzd8NLXPonNP5SH2ZhYtx33PUt0KUs_LBZ9p6S3VPPZhi5zbq0Zyv2gR0BbXeE8VVA_3glvfLYDzO-jV_ImHeZQqQ5jVjyVW8PO8ChGZUhDWc7NZnas0p-c-U9EGohUOcsWhPKQwgOSUqMx-wbHWtbkPHLXs_esczQ7NdtwIv6YrFgKz4J_WfUeoPNSIUgXMXVo2y3JVNHkOkRRn-EOkJjn8KOaE09ezYUWuUZZnoHb7NOqJwKK9xP5XmqI2AI4sAQZ7bZqBV&c=299b5a31&v=3\




4

சனி, 31 அக்டோபர், 2015

தமிழில் கிருகம் கிரகம் இல்லை

இன்று கிரகம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

கிரகம் என்பது நாம் நன்கறிந்த சொல் போலவே தோன்றுகிறது. நாம் ஓட்டிச் சென்ற வண்டி எங்காவது போய் மோதி, நமக்குச் செலவு கூடிப்போனால், கெட்ட கிரகம் என்கிறோம். கால நிலை சரியில்லை என்கிறோம். கணியரும் ( சோதிடகாரரும் ) அதையே தெரிவிக்கிறார். இப்போது எகிப்தில் உயிர் நீத்த உருசிய வானூர்திப் பயணிகட்கு நமது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு,
ஆய்வினைத் தொடர்வோம்.

அதிலிருந்த எல்லாப் பயணிகட்குமா கிரகம் சரியில்லை? விபத்துக்கு1த் தீவிர
வாதிகள் பொறுப்பு ஏற்றுக்கொண்டாலும் அதிகாரிகள் அவர்கள் கூற்றை ஏற்கவில்லை.

கிரகம் என்றால் கோள் நிற்குமிடம் என்று பொருள். வீடு என்றும் கூறலாம். கிருகலெட்சுமி என்றால் வீட்டின் நற்செல்வி என்று சொல்வர். கிரகம் அன்று, கிருஹம் என்பர். இருக்கட்டும்.

காராகிரகம் என்ற சொல் காணுங்கள். இதன் பொருள் சிறை என்பது. கார்= கருப்பு. கிருஹம் -வீடு . ( சிறை.) the terrible dark prisons என்று பொருள் விரிப்பார். இது உண்மையில் கார்+ ஆகு+ இரு + அகம் = காராகிருகம் ஆகும். இருட்டான, இருக்கும் உள்ளிடம் என்பது பொருள். ஆகவே சிறை.

இதுபோது கிரகம் , கிருகம் . கிருஹம் என்ற மாறுபாடுகளில் கவனம் கொள்ள வேண்டாம். இம்மூன்றில் எல்லா வடிவங்களையும் ஒருபுறம் வைத்துக்கொள்ளுங்கள்.

காராகிருகத்தை காரா + கிருகம் என்று பிரித்தால், கிருகம் கிடைக்கிறது. ஆகவே, கிருகம் என்றால் வீடு என்று பொருள் கூறி, கார் ஆகு இரு அகம் என்பதை முடிபோட்டு மறைத்துவிடலாம்.

எனவே பிறழ்பிரிப்பின் மூலம் ஒரு புதிய சொல் கிடைக்கிறது,

தமிழில் கிருகம் கிரகம் இல்லை; ஆதலால் அது தமிழ் அன்று என்று முடிக்க வேண்டியது,

கொண்டாட்டமே!



------------------------------------------------------------------------------------------------
1. விழுபற்று >விழுபத்து> விபத்து.

திரிபுகள் தரு வரு, அரு & ors

வரு என்னும் பகுதி வார் என்று திரியும்.  இதை வாக்கியமாக எழுதாமல் இப்படிக் காட்டலாம்:

வரு >  வார்.

இதனை,  வாராய், வாரான் (வர மாட்டான்) முதலிய வடிவங்களில் காணலாம்.)

இதேபோல் 

தரு >  தார்.  ( தாரீர் ,  தாராய் )

இரு என்ற எண்ணுப்பெயரும் ஈர்  என்று திரியும்.


இரு >  ஈராயிரம்.   ஈருருளி .

இருத்தல் என்ற வினையும்  "உள்ளிழுத்தல் " என்ற பொருளுக்கு  மாறும்போது ஈர்த்தல் என்று   திரியும்.   இரு>  ஈர் . வெளியிலிருப்பது  உள்ளில் இருக்கச் செய்தல் நிகழ்கையில்  ஈர்த்தல்  நிகழ்கிறது.  ஈர்த்தல்  என்பது ஓர்  இடை நிகழ்வு,   இரு >  ஈர்  :   இரு. an intermediate act.   தமிழ் உள்ள சொல்லையே  திரித்து இன்னொரு சொல்லை அமைக்கும் திறனுடைய மொழி  

தேவ நேயப் பாவாணர் விளக்கம்:

அரு  >  ஆர் >   ஆரி.

:ஆரிப் படுகர் :   (  மலைபடு .  161.)    ஆரி -  அருமை.
ஆரி ஆகவம் சந்தத் தளித்தபின், ( சீவக . 139.)  ஆரி - மேன்மை .
ஆரி  (  சூடாமணி )    -   அழகு
ஆரி  borrowed by Greek,  aristos   best, noble.

from: வடமொழி வரலாறு ,  பக். 24. இளவழகனார் பதிப்பு. 1

தரு வரு, அரு திரிபுகள் 
--------------------------------------------------------------------
Notes:  editor's
1, 491.109.
2 894,8115 முத்துக்குவியல், 

வியாழன், 29 அக்டோபர், 2015

3 - 5 God functions

இறைவனின் முத் தொழில் யாவை,  அவன்றன்   ஐந்தொழில்  யாவை என்பதைப் பார்ப்போம்.

படைத்தல்  காத்தல்  அழித்தல்  என்ற முத்தொழிலுடன்,  மறைத்தல், அருளல்  என்பவற்றையும் செய்வோன் இறைவனாகிய சிவம்.  ஆகவே ஐந்தொழிலாகிறது.  மறைத்தலாவது, மாயைகளை உண்டாக்கி உண்மைத் தன்மையை  ஒளித்துவிடுதல். (தெளிவாக்காதிருத்தல்)
திரோபவித்தல், ஆன்மாவை மயக்கஞ் செய்தல். திரோதானம்  என்றும் கூறுவர்.1

சிவஞான போதம் முத்தொழிலைக் குறிப்பிடுகிறது.  அம்பலவாணன் ஐந்தொழில்புரிகுவன் எனினும்  முத்தொழில்களே அவற்றுள் முன்மை பெற்று நிற்பவை..

உலகு தோன்றுதலும் ஒடுங்குதலும் இந்த முத்தொழில்களின் பயனே என்பார்,   இப்பயன் அல்லது விளைவைக் குறிக்க மூவினைமை என்ற சொல்லாட்சியை முன்வைக்கிறார்.,

அவன், அவ:ள்  அது:    உலகிலுள்ள பொருள் மூன்று.
படைத்தல், காத்தல், அழித்தல் =    மூவினை. இங்கு வினை என்றது  தொழிலை,  எனவே முத்தொழில்.
தோன்றுதல்  ஒடுங்குதல் :  மூவினைமை.  அதாவது மூவினைகளின்  பயன். அதாவது முத்தொழில்களின் நேர்விளைவு .
திதி அல்லது நிலை. அந்தம். ஆதி.
மலம்:   (தீவினை) .காரணம்.

திதி : இது ஸ்திதி எனவாகும்.

மூவினைமை :  இதில் "மை" விகுதி என்ன குறிக்கிறது?   பயன் அல்லது விளைவு குறிக்கின்றது.  மை என்பது உண்மையில் மெய் என்பதன் திரிபு என்கிறார்  டாக்டர் மூ. வரதராசனார் . ஆகவே முத்தொழில்களின் வெளிப்பாடு,  போந்த உருவம்  அல்லது பயன் . நல்வினை தீவினை என்ற வினைகள் வேறு.

===============================================
Notes:

1. also: திரோபவம் tirōpavam
n.  (Šaiva.) Function of veiling or darkening, designed to keep the souls engrossed in the experiences of the world until their karma is completely worked out Tam.Lex.

அந்தமாதியும் ஆதியந்தமும்

அந்தமாதி என்மனார் புலவர் என்கிறது சிவஞான போதம்.  நாம்  நாடோறும்   கேள்விப்படுவது  "ஆதி  அந்தம்"  என்பதுதானே!

அந்தம் ஆதி என்று தலைமாறி  வந்தது ஏன் ?  இதற்குக்  கடவுள் என்று  பொருள் கூறினர் அறிஞர் சிலர். இதை  யாம் குறித்துள்ளோம்.

http://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.htmll

http://sivamaalaa.blogspot.sg/2015/10/blog-post_27.htmll


தோன்றியதே  ஒடுங்கும்  (அழியும் ) என்று  நூலாசிரியர்  முன்வரிகளில்  கூறியுள்ளபடியால் அதை விரித்து விளக்கவே  " அந்தம் ஆதி " என்கிறார் என்பது எம்  கருத்து ஆகும்.  உலகம் அழிந்து  இவ்  அழிவிலிருந்தே மீண்டும் ஆதி ( ஆகுதல்,  உருவாக்குதல் ) ஏற்படும் என்பது பொருளாம்.

முட்டையும் கோழியும் போல  அந்தம் ஆதி மாறி மாறி  வருகிறது.

இதற்கு மறுப்பு உண்டாகலாம். கூறியதே எப்படி மீண்டும் கூறலாம் என்பதுதான் அது, உறுதிப்படுத்தி உரைத்தற்  பொருட்டு இது நிகழலாம் என்று கொள்ளுதல் கூடும். 

நீங்கள்  சிந்தித்து இதை ஏற்கவோ தள்ளவோ செய்துகொள்க.



  

திகதி தேதி திதி

திகைதல் என்னும் சொல்லை இக்காலங்களில் நினைவில் யாரும் வைத்திருக்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக  ஆங்கிலச் சொல்லான fix என்பதே பயன்பாடு கண்டுள்ளது.  விலை இன்னும் பிக்ஸ் ஆகவில்லை என்பர்.  அல்லது இன்னும் நன்றாகப்  படித்தவர் என்போர் டிடர்மின் determine பண்ணமுடியாமல் இருக்கிறது என்பர்.

அவசரமான இவ்வுலகில் வேற்றுமொழி கற்று வேலைபார்க்கும் நிலையில் இதைக் குறையாகச் சொல்லிக்கொண்டிருப்பதை விட, தமிழார்வத்தைப் பரப்ப  இயன்றவரை பாடுபடுதல் நல்ல பயனை உண்டுபண்ணக்கூடும்.

வண்டியை வாங்க விலை இன்னும் திகையவில்லை என்று
சொல்வதுண்டு.

இன்று நாம் காலகண்டரை ( நாட்காட்டியை) நோக்கினால், நாளை என்ன தேதி என்று திகைந்துவிடுகிறது.  கணக்கிடப்பட்டுத் திகைந்து நிற்பதால்,   அது " திகைதி" ஆகிறது. நடுவில் ஐகாரம் பெற்ற சொற்கள் குறுகி அமையும் என்பதை அறிந்த தொல்காப்பியர்,  ஐகாரக் குறுக்கத்தை எடுத்தோதினார்.  எனவே. திகைதி என்பது  திகதி என்றும், பின்னும் திகதி தேதி என்றும்  திரிந்தன.  பகுதி என்பது பாதி என்று திரியவில்லையா. அதுபோலவே.  ஆனால் தி என்ற முதலெழுத்து தே என்றும் திரிந்துள்ளது.

திகதி என்ற சொல் முதல் நீளாமல்  நடுவில் உள்ள க எழுத்தை இழந்தும் அமையும். அப்போது அது திதி என்றும் வரும். திகைந்த அல்லது, குறித்த, முன்பே அறியப்பட்ட  நாள் என்று கூறலாம். It acquired other meanings and nuances along the way with the passage of time.

திதி  என்பதற்குக்   கூறத்தகும் பொருள் வரையறவுகளில் (definitions)   முன்னரே  உறுதிபெற்ற ஒரு நாள் என்பதுமொன்றாகும்.   A date which is determined by a previous event. 

சிவஞான போதம் முதல் பாட்டில் இச்சொல் உள்ளது. அங்கு என்ன பொருளில் வந்துள்ளது என்று காணுங்கள்.

Click here to  read the previous connected post:-
tp://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.html

புதன், 28 அக்டோபர், 2015

searching old posts: useful?

முன்னர் எழுது  முனைகருத் தெல்லாமும்
இன்னும் இறுகப்  பிடித்தேமாய்  === பின்போய்த்  
திரக்கிக்தொட் டாலும் புதுக்குலைஈன்   வாழை  
பிறக்குமோர் பெற்றிவரு மோ

பொருள் :

பிடித்தேமாய் =  பற்றிக்கொண்டபடியாய்.
திரக்கி =  தேடி 
தொட்டாலும்  =  தோண்டினாலும் 
"தொட்டனைத் தூறும் மணற்கேணி "    என்பது  நினைவுகூர்க 
குலை ஈன்  -  குலை தள்ளும் .    வாழை : வாழை மரம் 
பெற்றி  -  தன்மை ..

disciplinary action

செவ்வாய், 27 அக்டோபர், 2015

சில முடிவுக் கருத்துச் சொற்கள்.

சில முடிவுக் கருத்துச் சொற்களை  கண்டு இன்புறுவோம்.

நீங்கள் இருக்கின்ற அல்லது உள்ள இடத்தைச் சுட்டும்போது " இங்கு"  என்கிறீர்கள்.  இதில்  "இ " என்பதே  சொல்.  "கு"  என்று இறுதியில் நின்றது வெறும் சொல்லீறு அல்லது விகுதி.  கு என்பது பல சொற்களில் பலவாறு வரும்.  மூழ்கு என்றும்    குறுகு  என்றும் (வினைச்சொல்  அமைதலிலும் )  அதற்கு  இதற்கு என்றும் (வேற்றுமைப் பொருளிலும் )  வரும்.  கு  என்பது  மலாய் மொழிக்குள் ஏகி  "க"  என்று உருமாறி  ke - Kuala Lumpur,  ke- Singapura என்றும் வரும் .  அது   "கி "  என்று மாறி  ராமனிகி  ஜெய்  என்பதிலும் வரும்.

மீண்டும் " இ" என்ற முன்னிலைச் சுட்டுக்கு வருவோம். இதுவும் பல மொழிகளில் தொண்டு செய்கிறது.  ஹியர் என்ற ஆங்கிலச் சொல்லில்  ஹ்+இ+அர்  என்பதில்  இ இருக்கிறது.  இ என்பதே  சுட்டு.  மற்றபடி  ஹ் என்பதும்  அர் என்பனவும்  வளரொலிகள்.ஒருவகைச் சொற்சாயங்கள். மலாய் மொழியிலும்  ஸினி என்பதில்  ஸியில்  (ஸ்+இ)  இ  என்னும் சுட்டு உள்ளது; சீன மொழியிலும்  சித்தாவ் என்ற சொல்லில் ச்+ இ என்று  இ என்னும் சுட்டு உள்ளது.  இட் எஸ்ட் என்ற இலத்தீன் தொடரில்  இட் என்பதில் இகரச் சுட்டு உள்ளது. உங்களுக்குத் தெரிந்த மொழிகளில் நீங்கள் தேடிக் கண்டுபிடித்துக்கொள்ளுங்கள்.

சில மொழிகளில் அது என்று படர்க்கை  வரவேண்டிய இடத்தில்  இது  என்று முன்னிலை வந்தால் அது அம்மொழி மரபு.  இத்து என்று மலாயில் வந்தால்  இது அதுவாகிவந்த இடப்பிறழ்ச்சியாகும்.

இங்கு என்பது முடிந்துவிட்டால் அங்குஎன்பது தொடங்கிவிடுகிறது. அதாவது இங்கு -வின்  இறுதி.   இதன்காரணமாக,   அ, அன், அங்  என்பன இறுதிப் பொருளை அடைகின்றன 

எடுத்துக்காட்டு:

அன்று  (  இன்று என்பதன் முடிவு).
அங்கு (  இங்கு என்பதன் முடிவு).

ஆகவே;   அன் என்றால் முடிவு,இறுதி என்று பொருள்.

அல் என்பதிலும் இதே கருத்து மிளிர்கிறது.

இல் ( இங்கு,ஆகவே உங்கள் வீடு);  அது முடிந்த இடம்:  அல்லது நிலைதான் அல். அல்லாதது.

அ> அல்> அன்>,அங்

அன் >  அன்று.  (இன்று முடிந்தது)
அன்று >  அன்றுதல் :   முடிதல்.  ( அன்+ து)
அன் து >   அந்து:  துணி முதலிய கடித்து இறுதியாக்கும் ஒரு பூச்சி/
அன் து >  அந்து >  அந்தம்: முடிவு.

து என்பது ஒரு சொல்லீறு.   முன் து > முந்து.  பின் து > பிந்து என்பன காண்க .  பல வுள.

cf  the English word "end"  with the root  அன் .
Malayalam:  இன்னல  (இன்னு  அல்ல )  ஆகவே நேற்று,  Notice word  அல்  > அல அல 


will edit

ஆதியந்தம்

இறை என்ற அடிச்சொல், இறைவன்,இறைவி, இறையன், இறையனார் என்ற வடிவங்களைப்  பிறப்பித்துள்ளது. இவை தாயும் பிள்ளைகளும் போலவே உள்ளன.

இறை என்பதற்கும் ஓர் அடிச்சொல் இருக்கிறது.  அது இறு என்பது. இதன்பொருள்  பொருள் என்ன?  இது பல்பொருளொரு சொல், பல பொருளுள்ளது. பல சொற்களையும் பிறப்பித்துள்ளது.

அவற்றுள் ஒன்றிரண்டையே இங்கு பேசுவோம்.

இறுதல் = முடிதல். இதிலிருந்து முடிதல் என்ற பொருள் உள்ள இறுதி என்ற சொல்லும் பிறக்கிறது.  இறுதிச்சுற்று,  இறுதி நபி,  இறுதியாய்விடுதல் என்று  முன் நீங்கள்  சொல்லாட்சியை எதிர்கொண்டிருக்கலாம்.

இறுத்தல்-  வரி முதலியன செலுத்துதல்.  இதிலிருந்து இறை = வரி என்ற பொருள்தரு வடிவமும் கிடைக்கின்றது.

இறு, இறை, இறைவன் :    இங்கு கண்ட பொருட்சாயல்களால்,  இறைவன் என்ற சொல்லையும் அறிஞர் பல்வேறு  கோணங்களிலிருந்து விளக்கினாலும்,  அவ்விளக்கங்கள் பிழைபடமாட்டா.

இறைவன்:  கடவுள் என்றும்  மன்னன் என்றும்  இடம்  நோக்கிப் பொருள்கொள்ளவேண்டும்.

கடவுள் என்ற பொருளில்  எல்லாவற்றுக்கும் இறுதி அவன் , ஆகவே இறைவன் என்று கொள்ள, சொல்லில் வசதி உள்ளது.

அந்தம் என்பது இறுதி குறிக்கிறது.

அவன் ஒருவனே இறுதியில் இருப்பவன்; இறுதியாகவும் இருப்பவன். இறுதியை  உண்டாக்குகிறவன்.  இங்ஙனம்  எண்ணங்களை விரித்துப் பொருளையும் விரிக்கலாம்.

ஆதியிலும் அவனே இருந்தான். அவன்முன் யாருமில்லை. எதுவுமில்லை. உலகம் ஆதல் பொழுதில் இருந்தமையினால் அவன் ஆதி ஆகிறான்.  உலகம் தொடங்கியதால், அது தொடங்கிய பொழுது அல்லது காலம்,   ஆதி ஆகிறது. பொழுது=  சிறியது. காலம்- நீண்டது. இவை சொற்பொருள்கள்.

எனவே, மெய்யறிஞர்கட்கு   (religious  philosophers) ,  ஆதியுமவன்; அந்தமும் அவன்.

சிவஞான ;போதம் என்ற நூல், அவனை ஆதியந்தம் என்றே குறிக்கிறது.

ஆதி, அந்தம் என்பன காலப்பெயர்கள்.   இவற்றை ஒன்றாகவோ சேர்த்தோ கடவுள் என்ற பொருளில் வழங்கினால், இலக்கணப்படி அது கால ஆகு பெயர் ஆகிறது.

சிவஞான போதப் பாடலை இங்கு காணலாம்:

http://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.html

திங்கள், 26 அக்டோபர், 2015

அவன் அவள் அது

செகம் என்ற சொல்லை ஆய்ந்த போது http://sivamaalaa.blogspot.sg/2015/10/etc.html
நாம் உலகம் அழிதலையும் மீண்டும் ஆவதையும் உடையது என்ற கருத்தினடிப்படையில்  அச்சொல்  உருவானது என்று கண்டோம். ஜகம் என்ற ஒலியொப்புமை உடைய சொல்லையும் உடன் கண்டு அதன் வேறு அடிச்சொல்லையும் கண்டுகொண்டோம்.

உலகம் அழிதலும் ஆவதும் உடையதென்பதற்குச் சிவஞான போதத்திலிருந்து  ஓர்  ஆதாரத்தை இப்போது பார்ப்போம்;

அவன் அவள் அது எனும் அவைமூ வினைமையின்
தோன்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதா(கு)ம்;
அந்தம் ஆதி என்மனார் புலவர்.       (1)

இதன் பொருள்:

அவன் அவள் =  ஆடவர் பெண்டிர் என்பாரும்,
அது =  ஏனை உயிர் உடையனவும் இல்லாதனவும் ஆகிய பொருள்களும்,
மூ வினைமையின் =  படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் இறைவனின் செய்கைகளின் பயனாக;
தோன்றிய திதியே =  உருவான  அந்த நிலையே;
ஒடுங்கி -   பின் அழிவு அடைந்து,
மலத்து  =  -  கரும வினையின் காரணமாக;
உளது =  மீண்டும் தோன்றுவது;
ஆகும்= இதுவே  நடக்கிறது;
அந்தம் ஆதி =  முடிவிலும் முதலிலும் ( உள்ளவன்  இறைவன்,  அவனால்தான்.)

இனி,  வினைமை, திதி, ஒடுங்குதல் ஆகியவற்றை அடுத்த இடுகையில் கவனிப்போம்.

சனி, 24 அக்டோபர், 2015

ஜகம் etc & உலகம்

பகவொட்டுச் சொற்கள்.

ஒரு சொல்லின் ஒரு பகுதியையும் இன்னொரு சொல்லின் ஒரு பகுதியையும் இணைத்து ஒரு புதிய சொல்லை உருவாக்கு முறை  பல மொழிகளில் காணப்படுகிறது. இத்தகைய  சொற்களைக் காணும்போது அவற்றைப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.  ஆங்கிலத்தில்  இதற்கு  "portmanteau"  என்பர்.

ஆங்கிலத்தில்  brunch  (breakfast + lunch     )  என்ற சொல்லை ஓர்    உதாரணமாகச் சொல்லலாம்.
sheeple   -   என்பதும் அன்னது.2 (people who are sheep-like followers)   (மந்தை  ஆடுகள் மக்கள்  என்பது)

இன்னொன்று:    (mo) tor +  ho (tel )   =  motel. 

உலகம்:

இச்சொல்லிலிருந்து புனையப்பெற்றவை:-

இ = இந்த.
கம் =   உலகம்.
இ+கம் =  இகம்  -   இந்த உலகம்.

எடுத்துகாட்டுச்  சொற்றொடர்  :  இக பரம்.  

செகுத்தல் = அழித்தல்..
ஒவ்வோர் ஊழியிலும் உலகம் அழிந்து புத்துலகம் மலர்வதாகச் சொல்லப்படும். ஆகவே  இது குறிக்கும் சொல் தேவையாயிற்று. 

இங்குள்ள விளக்கத்தையும்  நோக்குக:
http://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.html 


 செகு  = அழி(த் )தல்.
கம்  =உலகம்.
செகு+ கம் =  செகம்.  இதில் புணர்ச்சியில் குகரம் மறைந்தது.: 
செகம் =   அழித்து உருவாகும் இவ்வுலகம்.

(மக + கள்  =மக்கள்  என்பதில்  ஒரு க  மறைந்தது போல   செகு  +  கம் =  செகம்  என்பதில்  ஒரு கு  மறைந்தது,  )

மா -  பெரிது.
கம் -  (உல)கம்.
மாகம் :  விரிந்த விண்வெளி 1 .


mAkam. upper space; . sky, air, atmosphere;  svarga;  cloud

சமத்கிருதப் புனைவு:

ஜ -  பிறந்தது,
கம் -  உலகம்.
ஜகம் :  உலகம்.
--------------------------------------------------------------------------
பிற்குறிப்பு:

1 மாகம் என்பதும் ஒரு பகவொட்டு ஆகலாம்.  மா - பெரியது;  கம் - உலகம் என்பதன் இறுதிச் பகுதிச்சொல்.  ஆக மாகம் ஆகிறது.  பெரிதான உலகம். இன்னும் பல பொருள்.  யாவும் பெரியவை.  மக + அம் =  மாகம்,  முதனிலை நீண்ட,   விகுதி பெற்ற சொல் எனினுமாம்.

வியாழன், 22 அக்டோபர், 2015

இக்கட்டும் இடுக்கணும்

இக்கட்டு  என்ற சொல்லினமைப்பைக் கவனிப்போம்.

இந்தச் சொல்லின் பொருள் :   இடர், இடையூறு  இடுக்கண்,  என்பன .

இ + கட்டு = இக்கட்டு எனவரும் சுட்டுத் தொடக்கத்துத் தொடர் இதுவன்று.

இக்கட்டு  என்று இடையூறு குறிக்கும் சொல்லில் வரும்  "கட்டு "  வேறு.   கட்டுதல் எனும் சொல்லின் ஏவல் வினையாய் வரும் " கட்டு "   என்பது 
 வேறாகும்.  "மூட்டையைக்  கட்டு",   "கடையைக் கட்டு"  "சேலையைக்  கட்டு" என்று ஏவலாய் வரும்.

நாம் எடுத்துக்கொண்ட இக்கட்டு,  இடுக்கண் + து  என்று  பிரியும்.

முதலில் "கண்+து " என்பதை எடுத்துக் கொள்வோம்.

"சுவை ஒளி ஊறோசை  நாற்றம் என்றைந்தின் 
வகைதெரிவான் கட்டே உலகு" 

என்ற குறள் பாருங்கள்.

இதில்  (கண் + து)  + ஏ  =  கட்டே  என்று வருதல் நீங்கள்  அறிந்தது  
இங்கு  கட்டு + ஏ  =  கட்டே..    ஏகாரம் :  தேற்றேகாரம் . A component showing emphasis.

ஆகவே  இடுக்கண்+ து என்பது  இடுக்கட்டு  ஆகிறது.

நமது பயன்பாட்டுக்கு  இடுக்கண் என்பதிலிருந்து இன்னொரு சொல் கிடைக்கிறது.

ஆனால் இப்போது நம்மிடம் இருக்கும் சொல் இக்கட்டு.   இடுக்கட்டு அன்று.

இது:

இடுக்கட்டு > இக்கட்டு   என்று இடைக்குறைந்து நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது,

இக்கட்டு என்பதை வாக்கியமாக விரித்தால் :

இக்கட்டு <  இடுக்கட்டு <  இடுக்கண் து  <  இடுக்கண் அது  என்று விரித்து மகிழ்க .

இதுபோல் திரிந்த சொற்களில் ஒன்றிரண்டு கண்டு மகிழ்வோம்.

இடுக்கு+ இடைஞ்சல் =  இக்கிடைஞ்சல்.  -   இந்தத்  திரிபு நோக்கி இவ்வண்ண்ணம் திரிதல் கண்டுகொள்க. 


முக்கம் என்ற தெருமுனை குறிக்கும் சொல்  அகரவரிசைகளில் இடம்பெற வில்லை  என்று கருதவேண்டியுள்ளது.  இன்றுள்ள எல்லாவற்றிலும் தேடிப்பார்க்கவில்லை. நாட்டுப்புற மொழியில் உள்ளது.

முடுக்கு >முடுக்கம் >  முக்கம் 

என்ற திரிபாகவிருக்கலாம் :   ஆய்தற்குரியது. 








தந்திரம் - மற்றொரு முடிபு

இனித் தந்திரம் என்ற சொல்லுக்கு மற்றொரு முடிபும் கூறுவோம்.

ஓர் இக்கட்டான  நிலையில் அதைத் தவிர்க்கும் வழியைத் தந்து  தன் இருப்பு எப்படியும் குலைந்துவிடாதிருத்தல்  ஒரு தந்திரம் ஆகும்.   தன் நிலைபோல்  பிறர் நிலை காத்தலும்  அதுவே.

ஆகவே  தந்து + இரு + அம்  =  தந்திரம்  ஆகிறது.

இனி  இரு  என்ற சொல்லினை இறு  என்பதன் திரிபாய்க் கொள்ளினும் இழுக்காது.

இறுதல்  எனின்  முடிதல் இறுத்தல் எனின் முடித்தல்.

தந்திறம்  தந்திரம் ஆயிற்று என்று   அறிஞர் \கூறுவதால்  தந்திறம்  தந்து முடித்தல் என்று கொள்ளுதலும்  ஆகும் என்று அறிக .

ஒரு காரியத்தில் ஏற்படும் தடைக்கு அல்லது இடையூற்றுக்கு தீர்வு தந்து முடித்தலாம்..


செவ்வாய், 20 அக்டோபர், 2015

தந்திரம்.

தந்திரம்.

இப்போது தந்திரம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

றகரத்துக்கு ரகரம் பரிமாற்றமாக வரும் சொற்கள் உள.  தமிழின் வரலாற்றில் ரகரமே முன் தோன்றியதென்று தெரிகிறது. பின்னரே றகரம் தோன்றியது.   

இரு ரகரங்களை இனைத்து  றகரம் அமைக்கப்பட்டது. எழுத்துருக்களை ஆய்வு  செய்தாலே இது புலப்படும்.

ர >  ரர > ற.

மலையாளத்தில் ற என்பது இரு ரகரமாய் எழுதப்படும்,

 எனவே,  ர <> ற.

திறம் >  திரம்.

தன் + திறம் >  தந்திரம்.

தன் சொந்தத் திறத்தைப் பயன்படுத்துவதே  தந்திரம் ஆகும்.

சொல்லமைப்பில் ஒரே சொல்லாக உருவாக்குகையில் தன்றிரம் எனறு அமையாது.  தனித்தனி முழுச்சொற்கள் நிலைமொழியும் வருமொழியுமாய்ப் புணர்கையில் தன்றிறம் என்று வரும்.

தம்+ திரம் = தந்திரம் எனினுமாம் .  தந்திரம் என்ற சொல்லின்  நுண்பொருள்  இப்போது  சற்று  வேறுபட்டுள்ளது..    இதிலிருந்து தோன்றிய  அயன்மொழிக் கருத்துகளின்  காரணமாக   பொருள் விரிவுற்றுள்ளது   நாம் இங்கு கருதியது  சொல்லமைப்புப் பொருளையே. தன்  தம் என்பவற்றின்  எண்ணிக்கைக் கருத்துகள்  (ஒருமை பன்மை)   தந்திரம் என்பதில்  அறுந்தொழிந்தன. 


This has been also said by other scholars before.