சனி, 7 நவம்பர், 2015

valmiki caste

சில வட இந்திய மக்கள் கூட்டத்தின் பெயர்த் திரிபுகளைப் பார்ப்போம் 


ரபிதாஸ்  =  ரவிதாஸ் >  ரோகிதாஸ் 

இங்கு ப  > வ > க  என்று திரிந்தன.

தர்கர் >  தரிகர்   இங்கு இடையில் ஓர்  இகரம் ரகர ஒற்றின் மேல் ஏறியது.

ரோஹிது  ரோகிதாஸ் 

இங்கு து ஈற்றில்  ஆஸ் என்ற இறுதி வந்து மிகுந்தது.


பால்மிக்கி  >  வால்மிகி  ப > வ திரிபு.

வால்மீகி என்பவர்கள்  வேட்டுவச் சாதியினர்.  வால்மீக முனிவர் இந்தச் சாதியினர்.   இவர் பின் சில பிராமண[ப்  பின்வாரிகளை உருவாக்கினார் 
இவரே  முதல் முதல் இராமாயணம் பாடியவர் என்று கதைகளால் தெரிக்கிறது . 

இவரது சொந்தப் பெயர் "ரத்னாகர" என்று  கூறப்படுகிறது.  எனினும்  வால்மீகி என்ற  சாதிப்பெயராலேயே  அறியப்படுகிறார்.   இதை ஒருவாறு மறைத்து  தியானத்தில் இருந்தபோது புற்று வளர்ந்து இவரை மூடியபடியால்  இப்பெயர் ஏற்பட்டது  என்பது, மறுபொருள் உரைக்கும்  நன்முயற்சி  ஆகும். சில காட்டுவாசிகள்  ஈசல் உண்பவர்கள் என்று தெரிகிறது. இதை இப்போது விரித்துரைக்க வேண்டியதில்லை.  வால்மீகி  பெரும்புலவரும்  அறிஞரும் 
ஆவார் என்பது ஐயத்துக்குரியதன்று.

 ஆனால் இராமர் வாழ்ந்த காலமும்  வால்மீகி வாழ்ந்த காலமும் வெவ்வேறு  என்று  தோன்றுகிறது.   இராமர்  வால்மீகிக்கு 5 ஆயிரம்  ஆண்டுகள்  முற்பட்டவர் என்பர் .  இராமரைப் பற்றிய சிதறிய குறிப்புகள்  பல்வேறு  நாடுகளிலும்  கிடைத்துள்ளபடியால்  இவை நன்கு ஆராயப்படுதற்  குரியவை  ஆகும் .   வால்மீகிக்கு  முன் எழுந்த வேதங்களிலும் இராமரைப் பற்றிய குறிப்புகள்  கிட்டுகின்றன என்பர்/  ஆதலின்  வால்மீகி  இராமருடன் சம காலத்தவர்  என்பது  பின்னர்  வால்மிகியின்  நூலில் நிகழ்ந்த   இடைச்செருகள்களையே  தெரிவிக்கின்றன  எனின்  ஆய்விற்குரியதே.   முஸ்லிம்  நோன்பு மாதம்    ரமதான்   ( இராமதானம் ​    )    ரம்ஜான்  ( ராம ஜென்மம் ​)   என்பனவும்  ஆய்தற்குரியவை  என்பர்  ஆய்வாளர் சிலர்.  
  இவற்றை இப்போது  தொகுத்தளித்தற்கு    தருணம்  இல்லை   
  






கருத்துகள் இல்லை: