வியாழன், 26 நவம்பர், 2015

"பண்டைப் புலவோர்" ஒரு கண்ணோட்டம்

புலவர் என்ற சொல் புலம் + அர்  என்றமைந்த சொல்லாகும் .

புலம் என்பது காட்சி என்றும் பொருள்படும். கட்புலம்  அதாவது  கண்ணின்  காட்சி  அல்லது காட்சித்திறன்,  அதுபோல்  செவிப்புலம்   என்றும்  அமையும் ,

புலம் என்பது  புலன் என்றும் வரும்.  இது போல வருதலின்  போலி எனப்படும்,
அதாவது புலம் என்ற சொல்லில் மகர ஒற்று வந்ததுபோல்  னகர  ஒற்று வந்து அதே சொல்லாய்ப்  பொருளோடு அமையும்.  புலன்  எ-டு :  ஐம்புலன்,   மெய்ப்புலன் .

புலம் என்ற சொல் புல் என்ற சொல்லிற் பிறந்தது.  புல்லுதல் என்றால் பொருந்துதல்.  காணும் திறன் உள்ள கண்ணோடு  காணப்படும் பொருள் சென்று ஒளியால் பொருந்துகிறது.  ஆகவே புல் > புலம்  ஆயிற்று .

புலம் + அர்  என்பதில்  மகர ஒற்று  மறைந்து   புல+ அர்  என்றாகி  வகர உடம்படு மெய்  தோன்றிப்  புலவர் என்று சொல் அமைந்தது.  அர்  விகுதி சேர்க்காமல்  ஓர் என்பதைப்  போட்டால்  புலவோர் என்று வரும்.  இரண்டும்  ஒன்றுதான் .
புலவர் என்பது  இப்போது பணிவுப் பன்மையில்  (மரியாதை ​​) வருவதால்
இக்காலத்தில் கள் விகுதி சேர்த்துப்   புலவர்கள் என்றாலே  பன்மையாகிறது,
ஆனால்  ஓர் விகுதி "கள்"  இல்லாமல் பன்மை காட்ட வல்லது.  ஆகையால்  மறைமலையடிகள் "  முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் "  என்று தம் நூலொன்றுக்குப் பெயரிட்டார்.

புலவர்  என்பது  புலவு + அர்  என்றும் பிரியும்  ;  அப்போது புலால் உண்பவர்கள்
என்றும்  பொருள் தரும்,   புலவு = புலால் , இறைச்சி .

வடபுலவர்  என்று வரும் கூட்டுச் சொல்லில்  வடதிசையில் உள்ள மக்கள்;
வட திசையில் உள்ள புலவர்கள் ;  வடக்கே புலால் உண்போர்  என்று மூன்று விதமாகப் பொருள் கொள்ளலாம்;  காரணம் புலம் என்பது இடம் என்றும் பொருள் ஏற்கும் சொல்.இடம் நோக்கிப் பொருள் கொள்க.  மயக்கம் இன்றிப் பொருள் வரவேண்டுமானால் வடபுலத்தார்  தென்புலத்தார்  என்று இடம் சுட்டுவது நன்று     புலம் பெயர்ந்த மக்கள் என்ற தொடரையும் நோக்கவும் ,  புலவு என்பது இறைச்சி  அல்லது புலால் என்றும் பொருள் கூட்டுவது


ஔவைப்பாட்டி
"புலவு    நாறும்   என்  தலை தைவரு மன்னே"  என்று புற நானூற்றில் கையறு  நிலையில் ாடுதல் காண்க.

browser collapsed  will edit later




கருத்துகள் இல்லை: