ஞாயிறு, 1 நவம்பர், 2015

பட்டி மன்றத்துக்குஇன்னொரு சொல்

இதற்கு  இன்னொரு சொல்.  அதுவும் பழந்தமிழ்ச் சொல்.  அதை இப்போது கண்டு அதுபற்றி அளவளாவி மகிழ்வோம். 

அந்தச் சொல்:  உரற்களம் என்பது, 

இக்கூட்டுச் சொல்லில் வந்துள்ள முதற்பாதி  உரல் என்பது. இதிலிருந்து தெரிந்துகொள்வது என்னவென்றால் உரை என்பதன்மற்றொரு வடிவம்  உரல் என்பதாகும்.  இந்த உரல்  சொல்லாடுதல் என்று பொருள்படுவது.  இடிக்கும் உரல் வேறு.
இதனை இப்போது ஆய்வோம்.

உர் >  உரல்.
உர் >  உரை.
உர் >  உரி   அதாவது உரிச்சொல்.

உர் என்ற மூலச்சொல்லிலிருந்து உரல் என்பது வருகிறது.

உரற்களம் என்றால் மக்கள் உரலென்னும் இடிகல்லை   அல்லது மர உரலை நினைத்துக்கொள்வர் ஆதலால் இதை உரைக்களம் என்று சொன்னால்  ஏற்பரோ தமிழறிஞர் ?  தேவையில்லை  பட்டிமன்றம் என்ற சொல்லே போதும் என்பரோ?இதை அவர்களின் பார்வைக்கு விட்டுவிடுவோமே.

will edit later

கருத்துகள் இல்லை: