செவ்வாய், 24 நவம்பர், 2015

போட்ட குப்பையிலே.....

நீங்கள் போட்ட குப்பையிலே
நெளிகிற பூச்சி  புழுக்களையே
நீங்கள் வெறுத்த போதிலுமே
உங்களை வந்தே சேர்ந்திடுமே.

மழையின்  நீரும் ஓடாமல்
வெள்ளப் பெருக்கால் கேடாமே!
உளையும் சகதியும் மிதமிஞ்சி
ஊர்க்குள் உயிர்கள் வதமாமே

ஏரியுள் கழிவுகள்  சேராவேல்
என்றும்,குடிக்க  நீராமே
மாரியும் உம்மைக் காப்பாளே
மாய்க்கும் நோய்களைத் தீர்ப்பாளே!

ஏரியுள் கூளம் எறிந்தாலோ
எடுத்திடச் செலவு  தெரிந்தாலோ.
காரியம் நல்லது கைக்கொள்வீர்
கடமை இதுவென மெய்சொல்வீர்.:

கருத்துகள் இல்லை: