திங்கள், 30 நவம்பர், 2015

வலியோன் என்ற சொல்

இச்சொல்  பல் வேறு வகைகளில் முடிவதை இப்போது கண்டுகொள்வோம்.

வல்+ இ+  ஒன்  =  வலியோன்

 இதிலிருக்கும்  லகர ஒற்று  (ல்)  இரட்டித்தும்  வரும்.

வல்  +  ல் + இ + ஒன்   =  வல்லியோன் .

இடையில் இகரம் தோன்றாமல்  வருதலும்  அமையும்,

வல் + ல் +  ஓன் =  வல்லோன்.

மேற்சொன்னபடி  லகர ஒற்றுப் பெறாமலும் வரும்:

வலோன் :     (  மதிவலோன்,  கலைவலோன் )/

வலவர் .  வலார்  என வரும் பிற  பின்னொரு நாள் காண்போம்.

இப்போது  வல்லியோன் என்பது வந்த ஓர்  எடுத்துக்காட்டு:

"இமைப்புவரை அமையா  நம்வயின் 
மறந்து  ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே ."

குறுந்  248.

  

கருத்துகள் இல்லை: